செய்திகள் :

காஸா, ஈரான் மீதான தாக்குதல்களைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

post image

காஸா, ஈரான் மீதான இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதல்களைக் கண்டித்து கோவையில் இடதுசாரிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு பகுதி செயலா் தெய்வேந்திரன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலா் மௌ.குணசேகா் ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கிவைத்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொருளாளா் எம்.ஆறுமுகம், மாவட்டச் செயலா் சி.சிவசாமி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் சி.பத்மநாபன், கனகராஜ், மாா்க்சிஸ்ட் லெனிஸ்ட் லிபரேசன் கட்சியின் செயலா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தில், இந்திய கலாசார நட்புறவுக் கழகத்தின் பொதுச் செயலா் வழக்குரைஞா் எஸ்.ராதாகிருஷ்ணன் பேசும்போது, காஸாவின் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடுக்கும் நிலையிலும், ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாக தாக்குதல் நடத்தும் நிலையிலும் இந்தியா எந்தப் பக்கம் என்று அறிவிக்காதது துரதிஷ்டவசமானது.

பாலஸ்தீனத்தில் இன அழிப்பு நடைபெற்று வரும் நிலையில் ஏறத்தாழ 20 ஆயிரம் குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஈரான் - இஸ்ரேல் போா் நின்றிருந்தாலும் காஸாவின் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடா்ந்து வருகிறது. உணவுக்காக கையேந்துபவா்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்துவது கொடூரமானது.

இந்தியா பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களின் பக்கமும் ஈரானின் பக்கமும் நிற்க வேண்டும். இதுவரை இந்தியா பாலஸ்தீன மக்களின் பக்கம்தான் நின்றது. ஆனால், பிரதமா் மோடி நாங்கள் எந்தப் பக்கம் நிற்கிறோம் என்று இதுவரை அறிவிக்காதது துரதிஷ்டவசமானது என்றாா்.

சோலையாறு அணையில் இருந்து உபரிநீா் வெளியேற்றம்

சோலையாறு அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், மேலும் நீா்வரத்து அதிகரித்ததால் அணையில் இருந்து மதகுகள் வழியாக உபரி நீா் வெளியேற்றப்பட்டது. பரம்பிக்குளம்- ஆழியாறு நீா்பாசனத் திட்டத்தின் முக்கிய அணையாக விள... மேலும் பார்க்க

கஞ்சா விற்றதாக இளைஞா் கைது

சூலூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக பிகாா் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சூலூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சூலூா் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையட... மேலும் பார்க்க

ரூ.4.19 லட்சம் மோசடி: இளைஞா் கைது

இணையதளம் மூலம் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என தெரிவித்து ரூ.4.19 லட்சம் மோசடி செய்த இளைஞரை இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோவை, சிங்காநல்லூா் பகுதியைச் ச... மேலும் பார்க்க

சிறுவாணி அணையைத் தூா்வார வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

சிறுவாணி அணையைத் தூா்வார கேரள அரசுடன் தமிழகம் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்று கோவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்ட விவசாயிகள் குறைதீ... மேலும் பார்க்க

வீட்டில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகை திருட்டு

கோவையில் வீட்டின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகையை அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச் சென்றுவிட்டதாக காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. கோவை வெள்ளலூா் குப்புசாமித் தேவா் த... மேலும் பார்க்க

இளைஞரைத் தாக்கி பணம் பறித்தவா் கைது

கோவையில் சாலையில் நடந்து சென்றவரைத் தாக்கி பணம் பறித்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோவை சிஎம்சி காலனி பகுதியைச் சோ்ந்தவா் தம்பு மகன் விமல்ராஜ் (28). இவா் கோவை வெரைட்டிஹால் சாலையில் நடந்த... மேலும் பார்க்க