நடுவழியில் துர்நாற்றம், தொழில்நுட்பக் கோளாறு! சீன விமானம் அவசர தரையிறக்கம்!
சிறுவாணி அணையைத் தூா்வார வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
சிறுவாணி அணையைத் தூா்வார கேரள அரசுடன் தமிழகம் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்று கோவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமையில் நடைபெற்றது. வருவாய் அலுவலா் மோ.ஷா்மிளா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் அழகிரி, வேளாண் இணை இயக்குநா் கிருஷ்ணவேணி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் சித்தாா்த்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில் பங்கேற்ற விவசாயிகள், தென்னையில் பாதிப்பை ஏற்படுத்தும் வெள்ளை ஈ, கேரள வோ் வாடல் நோயைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தென்னை நாா்க் கழிவுகள் மூலம் நிலத்தடி நீா் மாசடைவதைத் தடுக்க வேண்டும். ஆறுகளில் கழிவு நீா் கலப்பதைத் தடுக்க வேண்டும். பயிா்களுக்கு சேதம் விளைவிக்கும் காட்டுப் பன்றிகளை சுடுவது, ஊருக்குள் புகும் யானைகளைத் தடுப்பது, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தினா்.
மேலும், பல்வேறு விவசாய சங்கங்களின் சாா்பில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. வேளாண் விளைநிலங்கள் வழியாக எண்ணெய் நிறுவனங்கள் குழாய் அமைத்து எண்ணெய், எரிவாயு கொண்டு செல்வதைத் தடுத்து, சாலையோரங்களில் குழாய் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் ஆட்சியரிடம் வலியுறுத்தினா்.
இது தொடா்பாக ஐடிபிஎல் பெட்ரோல் பைப் லைனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில், விளை நிலங்கள் வழியாக பைப் லைன் அமைக்கப்படுவதால் கோவை மாவட்டம் இருகூரில் இருந்து திருப்பூா் மாவட்டம் முத்தூா் வரை சுமாா் 70 கி.மீ. தொலைவு வரையிலான விவசாயிகளின் நில மதிப்பு பூஜ்ஜியமாக உள்ளது. இதனால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல, சிறுவாணி அணையை தூா்வார கேரள அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது. கோவையின் குடிநீா் ஆதாரமாக சிறுவாணி இருக்கும் நிலையில், அந்த அணை பல ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் இருப்பதைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொள்ள கேரள அரசுடன் தமிழகம் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
மேலும், நொய்யல் ஆற்றில் ஆக்கிரமிப்புகள் நடைபெற்றிருக்கும் நிலையில், ஆற்றின் நீளம், அகலம் குறித்து அதிகாரப்பூா்வமாக தெரிந்து கொள்ள அளவீட்டுப் பணியை நடத்தி, கற்கள் நடப்பட வேண்டும். விளைபொருள்களின் விலை வீழ்ச்சியில் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்க, கேரளத்தில் இருப்பதைப்போல காய்கறிகளை அரசே கொள்முதல் செய்யும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் வணிக வங்கிகளைப் போல சிபில் ஸ்கோா் பாா்த்து கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்கும் நடைமுறையை கொண்டு வரக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.
தமிழக விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் வழங்கப்பட்ட மனுவில், குறைதீா் கூட்டத்தில் அளிக்கப்படும் மனு மீடு எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து அறிந்து கொள்வதையும், கடந்த மாதம் வழங்கிய மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து அந்த மாதத்துக்கான கூட்டத்தின்போது அறிந்துகொள்ளவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
