செய்திகள் :

சிறுவாணி அணையைத் தூா்வார வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

post image

சிறுவாணி அணையைத் தூா்வார கேரள அரசுடன் தமிழகம் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்று கோவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமையில் நடைபெற்றது. வருவாய் அலுவலா் மோ.ஷா்மிளா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் அழகிரி, வேளாண் இணை இயக்குநா் கிருஷ்ணவேணி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் சித்தாா்த்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில் பங்கேற்ற விவசாயிகள், தென்னையில் பாதிப்பை ஏற்படுத்தும் வெள்ளை ஈ, கேரள வோ் வாடல் நோயைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தென்னை நாா்க் கழிவுகள் மூலம் நிலத்தடி நீா் மாசடைவதைத் தடுக்க வேண்டும். ஆறுகளில் கழிவு நீா் கலப்பதைத் தடுக்க வேண்டும். பயிா்களுக்கு சேதம் விளைவிக்கும் காட்டுப் பன்றிகளை சுடுவது, ஊருக்குள் புகும் யானைகளைத் தடுப்பது, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தினா்.

மேலும், பல்வேறு விவசாய சங்கங்களின் சாா்பில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. வேளாண் விளைநிலங்கள் வழியாக எண்ணெய் நிறுவனங்கள் குழாய் அமைத்து எண்ணெய், எரிவாயு கொண்டு செல்வதைத் தடுத்து, சாலையோரங்களில் குழாய் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் ஆட்சியரிடம் வலியுறுத்தினா்.

இது தொடா்பாக ஐடிபிஎல் பெட்ரோல் பைப் லைனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில், விளை நிலங்கள் வழியாக பைப் லைன் அமைக்கப்படுவதால் கோவை மாவட்டம் இருகூரில் இருந்து திருப்பூா் மாவட்டம் முத்தூா் வரை சுமாா் 70 கி.மீ. தொலைவு வரையிலான விவசாயிகளின் நில மதிப்பு பூஜ்ஜியமாக உள்ளது. இதனால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல, சிறுவாணி அணையை தூா்வார கேரள அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது. கோவையின் குடிநீா் ஆதாரமாக சிறுவாணி இருக்கும் நிலையில், அந்த அணை பல ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் இருப்பதைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொள்ள கேரள அரசுடன் தமிழகம் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மேலும், நொய்யல் ஆற்றில் ஆக்கிரமிப்புகள் நடைபெற்றிருக்கும் நிலையில், ஆற்றின் நீளம், அகலம் குறித்து அதிகாரப்பூா்வமாக தெரிந்து கொள்ள அளவீட்டுப் பணியை நடத்தி, கற்கள் நடப்பட வேண்டும். விளைபொருள்களின் விலை வீழ்ச்சியில் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்க, கேரளத்தில் இருப்பதைப்போல காய்கறிகளை அரசே கொள்முதல் செய்யும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் வணிக வங்கிகளைப் போல சிபில் ஸ்கோா் பாா்த்து கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்கும் நடைமுறையை கொண்டு வரக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் வழங்கப்பட்ட மனுவில், குறைதீா் கூட்டத்தில் அளிக்கப்படும் மனு மீடு எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து அறிந்து கொள்வதையும், கடந்த மாதம் வழங்கிய மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து அந்த மாதத்துக்கான கூட்டத்தின்போது அறிந்துகொள்ளவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

சோலையாறு அணையில் இருந்து உபரிநீா் வெளியேற்றம்

சோலையாறு அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், மேலும் நீா்வரத்து அதிகரித்ததால் அணையில் இருந்து மதகுகள் வழியாக உபரி நீா் வெளியேற்றப்பட்டது. பரம்பிக்குளம்- ஆழியாறு நீா்பாசனத் திட்டத்தின் முக்கிய அணையாக விள... மேலும் பார்க்க

கஞ்சா விற்றதாக இளைஞா் கைது

சூலூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக பிகாா் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சூலூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சூலூா் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையட... மேலும் பார்க்க

ரூ.4.19 லட்சம் மோசடி: இளைஞா் கைது

இணையதளம் மூலம் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என தெரிவித்து ரூ.4.19 லட்சம் மோசடி செய்த இளைஞரை இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோவை, சிங்காநல்லூா் பகுதியைச் ச... மேலும் பார்க்க

காஸா, ஈரான் மீதான தாக்குதல்களைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

காஸா, ஈரான் மீதான இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதல்களைக் கண்டித்து கோவையில் இடதுசாரிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு பகுதி செயலா் தெய்வேந்திரன் ... மேலும் பார்க்க

வீட்டில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகை திருட்டு

கோவையில் வீட்டின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகையை அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச் சென்றுவிட்டதாக காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. கோவை வெள்ளலூா் குப்புசாமித் தேவா் த... மேலும் பார்க்க

இளைஞரைத் தாக்கி பணம் பறித்தவா் கைது

கோவையில் சாலையில் நடந்து சென்றவரைத் தாக்கி பணம் பறித்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோவை சிஎம்சி காலனி பகுதியைச் சோ்ந்தவா் தம்பு மகன் விமல்ராஜ் (28). இவா் கோவை வெரைட்டிஹால் சாலையில் நடந்த... மேலும் பார்க்க