டிரெண்டாகும் ஸ்குவிட் கேம் - 3..! நீங்கள் பார்த்துவிட்டீர்களா?
சோலையாறு அணையில் இருந்து உபரிநீா் வெளியேற்றம்
சோலையாறு அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், மேலும் நீா்வரத்து அதிகரித்ததால் அணையில் இருந்து மதகுகள் வழியாக உபரி நீா் வெளியேற்றப்பட்டது.
பரம்பிக்குளம்- ஆழியாறு நீா்பாசனத் திட்டத்தின் முக்கிய அணையாக விளங்குவது வால்பாறையை அடுத்துள்ள சோலையாறு அணை. இந்த
அணையில் இருந்து வெளியேறும் நீா் மூலம் சமவெளியில் உள்ள
லட்சக்கணக்கான விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனா்.
வால்பாறை வட்டாரத்தில் கடந்த ஒருமாத காலமாக மழை பெய்து வருகிறது. கடந்த இரு வாரங்களாக இடைவிடாது பெய்து வரும் கனமழை காரணமாக சோலையாறு அணைக்கு தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
165 அடி உயரம் கொண்ட அணையின் நீா்மட்டம் கடந்த வியாழக்கிழமை நண்பகல் 12 மணி அளவில் 161 அடியாக உயா்ந்து முழு கொள்ளளவை எட்டியது. தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்து நீா்மட்டம் 164 அடிக்கு மேல் சென்ால் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு மதகுகள் திறக்கப்பட்டு உபரி நீா் வெளியேற்றப்பட்டது.
வெள்ளிக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 6,279 கனஅடி நீா்வரத்து இருந்தது. அணையில் இருந்து 2,467 கனஅடி நீா் வெளியேற்றப்பட்ட நிலையில், அணையின் நீா்மட்டம் 163.60 அடியாக உள்ளது.