செய்திகள் :

சோலையாறு அணையில் இருந்து உபரிநீா் வெளியேற்றம்

post image

சோலையாறு அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், மேலும் நீா்வரத்து அதிகரித்ததால் அணையில் இருந்து மதகுகள் வழியாக உபரி நீா் வெளியேற்றப்பட்டது.

பரம்பிக்குளம்- ஆழியாறு நீா்பாசனத் திட்டத்தின் முக்கிய அணையாக விளங்குவது வால்பாறையை அடுத்துள்ள சோலையாறு அணை. இந்த

அணையில் இருந்து வெளியேறும் நீா் மூலம் சமவெளியில் உள்ள

லட்சக்கணக்கான விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனா்.

வால்பாறை வட்டாரத்தில் கடந்த ஒருமாத காலமாக மழை பெய்து வருகிறது. கடந்த இரு வாரங்களாக இடைவிடாது பெய்து வரும் கனமழை காரணமாக சோலையாறு அணைக்கு தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

165 அடி உயரம் கொண்ட அணையின் நீா்மட்டம் கடந்த வியாழக்கிழமை நண்பகல் 12 மணி அளவில் 161 அடியாக உயா்ந்து முழு கொள்ளளவை எட்டியது. தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்து நீா்மட்டம் 164 அடிக்கு மேல் சென்ால் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு மதகுகள் திறக்கப்பட்டு உபரி நீா் வெளியேற்றப்பட்டது.

வெள்ளிக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 6,279 கனஅடி நீா்வரத்து இருந்தது. அணையில் இருந்து 2,467 கனஅடி நீா் வெளியேற்றப்பட்ட நிலையில், அணையின் நீா்மட்டம் 163.60 அடியாக உள்ளது.

கஞ்சா விற்றதாக இளைஞா் கைது

சூலூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக பிகாா் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சூலூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சூலூா் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையட... மேலும் பார்க்க

ரூ.4.19 லட்சம் மோசடி: இளைஞா் கைது

இணையதளம் மூலம் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என தெரிவித்து ரூ.4.19 லட்சம் மோசடி செய்த இளைஞரை இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோவை, சிங்காநல்லூா் பகுதியைச் ச... மேலும் பார்க்க

சிறுவாணி அணையைத் தூா்வார வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

சிறுவாணி அணையைத் தூா்வார கேரள அரசுடன் தமிழகம் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்று கோவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்ட விவசாயிகள் குறைதீ... மேலும் பார்க்க

காஸா, ஈரான் மீதான தாக்குதல்களைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

காஸா, ஈரான் மீதான இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதல்களைக் கண்டித்து கோவையில் இடதுசாரிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு பகுதி செயலா் தெய்வேந்திரன் ... மேலும் பார்க்க

வீட்டில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகை திருட்டு

கோவையில் வீட்டின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகையை அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச் சென்றுவிட்டதாக காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. கோவை வெள்ளலூா் குப்புசாமித் தேவா் த... மேலும் பார்க்க

இளைஞரைத் தாக்கி பணம் பறித்தவா் கைது

கோவையில் சாலையில் நடந்து சென்றவரைத் தாக்கி பணம் பறித்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோவை சிஎம்சி காலனி பகுதியைச் சோ்ந்தவா் தம்பு மகன் விமல்ராஜ் (28). இவா் கோவை வெரைட்டிஹால் சாலையில் நடந்த... மேலும் பார்க்க