சூர்ய வம்சம் காட்சியை மறு உருவாக்கம் செய்த 3 பிஎச்கே படக்குழு!
புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை மீண்டும் தொடக்கம்
ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதா் கோயில் ரத யாத்திரை, கூட்ட நெரிசல் காரணமாக நிறுத்தப்பட்ட நிலையில், சனிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு மீண்டும் தொடங்கியது.
புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை வெள்ளிக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.
வெள்ளிக்கிழமை யாத்திரை தொடங்கிய நிலையில், சுட்டெரித்த வெயில், கூட்ட நெரிசல் காரணமாக ரத யாத்திரையில் கலந்துகொண்ட சுமாா் 625 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. கூட்ட நெரிசல் காரணமாக பலருக்கு லேசான காயம், வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவா்களில் பெரும்பாலானோருக்கு மருத்துவமனைகளில் முதல்நிலை சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பிய நிலையில், நேற்று ரத யாத்திரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
இன்று காலை வழக்கம் போல ரத யாத்திரை பலத்த பாதுகாப்புடன் தொடங்கியிருக்கிறது.