செய்திகள் :

Marina Beach: `ப்ளூ பிளாக்' அங்கீகாரம் பெறும் மெரினா பீச்; என்னென்ன வசதிகள் அமைய உள்ளது?

post image

மெரினா பீச் விரைவில் 'ப்ளூ பிளாக்' (Blue Flag) அங்கீகாரம் பெறப்போகிறது

ப்ளூ பிளாக் சான்றிதழ் என்றால் சுத்தமான, பாதுகாப்பான, சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ற கடற்கரை என்பதற்கான அடையாளம் ஆகும்.

ஆக, மெரினா பீச்சை இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டுவர, நிழற்குடைகள், மூங்கிலால் ஆன நுழைவு வளவுகள், சிமெண்ட் பாதைகள், மரப்பலகைகள், திறந்தவெளி ஜிம், குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி, குளிக்கும் அறை, சுற்றுச்சூழலுக்கேற்ற கழிவறை போன்ற வசதிகள் வரப் போகிறது.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

இதற்காக மெரினா பீச்சை சுற்றுச்சூழல் செயலாளர் சுப்ரியா சாகு ஆய்வு செய்திருக்கிறார். மேலும், இந்தத் திட்டத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட 50 ஏக்கர் பகுதியை அடுத்த வாரம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆனால், இந்தத் திட்டத்திற்கு மெரினாவில் கடை வைத்திருப்பவர்களிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கோவா போன்ற ஊர்களுக்கு இது சரிப்பட்டு வரும்.

ஆனால், பலத்த காற்று அடிக்கும் மெரினா கடற்கரையில் மரத்திலான கடைகள் என்பது சரிபட்டு வராது என்று குரல் எழுப்புகின்றனர்.

மேலும், இந்த ஏற்பாடுகளுக்கு மிகுந்த பராமரிப்பு தேவை என்று கூறுகின்றனர்.

கோவலத்திற்கு பிறகு, தமிழ்நாட்டில் ப்ளூ பிளாக் அங்கீகாரம் பெறும் இன்னொரு கடற்கரை மெரினா ஆகும்.

``மும்பையில் இந்தி எதிர்ப்பு பேரணி'' - 20 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த தாக்கரே சகோதரர்கள்

மகாராஷ்டிராவில் கடந்த 2005-ம் ஆண்டு சிவசேனாவில் இருந்து ராஜ் தாக்கரே வெளியேறினார். சிவசேனா நிறுவன தலைவர் பால்தாக்கரேயின் மகன் உத்தவ் தாக்கரேயுடன் ஏற்பட்ட அதிகாரப்போட்டி காரணமாக கட்சியில் இருந்து வெளிய... மேலும் பார்க்க

TVK: `தமிழ்நாடு என்றாலே ஒன்றிய அரசுக்கு அலர்ஜி!' - தேர்தல் ஆணையத்துக்கு எதிராக கொந்தளிக்கும் தவெக

விஜய்யின் தவெகவின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜூனா பீகார் தேர்தலுக்காக தேர்தல் ஆணையம் முன்னெடுத்திருக்கும் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து ஒரு அறிக்கையை வெளி... மேலும் பார்க்க

Seeman: ``பாமக விரிசலை சிமெண்டால் அல்ல; அன்பால் பூச வேண்டும்!'' - வழி சொல்லும் சீமான்!

'சீமான் செய்தியாளர் சந்திப்பு!'நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் மதுரையில் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத... மேலும் பார்க்க

Doctor Vikatan: நாவல் பழங்கள் சாப்பிட்டால் தொண்டை கட்டுவது ஏன்?

Doctor Vikatan:நாவல் பழம் சாப்பிட்டால் தொண்டை கட்டுவது ஏன்? ஜலதோஷம் பிடிக்குமா, நாவல்பழ கொட்டைகளை பொடியாக்கி, சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டால் சர்க்கரை அளவு குறையும் என்பது உண்மையா? அதை எப்படி சரியான ப... மேலும் பார்க்க

``மொழியை சொல்லி குழப்பத்தை உண்டாக்கினால், நாம் பலியாகக் கூடாது..'' - அர்ஜுன் சம்பத் சொல்வதென்ன?

"மொழிகளை வைத்து நம்மிடையே பிரிவினை உண்டாக்க நினைப்பவர்களுக்கு நாம் பலியாகக் கூடாது.." என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் பேசியுள்ளார்.அர்ஜுன் சம்பத்மதுரை எஸ்.எஸ்.காலனியிலுள்ள காஞ்சி மகா ... மேலும் பார்க்க