ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன்: முதல்வர் ஸ்டாலின்
ராமதாஸ் - அன்புமணி: "இணைப்புக்கான சாத்தியங்கள் குறைகிறதா?" - மருத்துவர் ராமதாஸ் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி
பாமக நிறுவனர் ராமதாஸ் — தலைவர் அன்புமணி இடையே ஏற்பட்ட மோதல் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே செல்கிறது. நிர்வாகிகளை ஒருவர் நியமிப்பதும் மற்றொருவர் நீக்குவதுமாக அதிரடிகள் தொடர்கிறது. இந்த பரபரப்பான சூழலில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களை அவரின் தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்து பல்வேறு கேள்விகளை முன் வைத்தோம்.
"நீங்கள் நீக்கும் நிர்வாகியை அவர் (அன்புமணி) சேர்ப்பதும், அவர் நீக்கும் நிர்வாகிக்கு நீங்கள் பதவி தருவதுமாக வேகமாக இரண்டு அணிகள் உருவாகிறது... இணைப்புக்கான சாத்தியங்கள் குறைகிறதா?"
"என்னுடைய வேலை மற்றும் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் இன்னும் நிறைய பாக்கியிருக்கிறது. அதற்காகத்தான் என்னுடைய போக்கில் நான் செய்து கொண்டிருக்கிறேன். அதிகாரம் என்பதும் சட்ட திட்டங்கள் என்பதும் நாமே உருவாக்குவது தான். அது வானத்திலிருந்து உருவாவது கிடையாது. எனக்கு எது பிடிக்கிறதோ அதை நான் செய்வேன். ராமதாஸ் என்றால் என்ன அர்த்தம் என்றால், வெட்டு ஒன்று துண்டு ரெண்டு. அதே தான் செயலிலும் சொல்லிலும் இருக்கிறது. தற்போது எனக்கு 86 வயதாகிறது. அடுத்த மாதம் கடந்தால் 87 வயது ஆரம்பம். எனக்கு ஜோசியத்தில் நம்பிக்கை கிடையாது. ஆனால் இந்த கால கட்டத்தில் அப்படி நடக்கிறது. 96 ஆயிரம் கிராமங்களுக்கு நான் சென்று உள்ளேன். இனிமேலும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன்."

"மகனை எதிர்த்து அரசியலில் இப்போது ஈடுபடுகிறீர்களா? "
"இல்லை. அரசியலில் மகன்,மகள், பேரன், பேத்தி என இருக்கக் கூடாது என நினைப்பவன் நான். ஆனால் நான் செய்த சத்தியங்களை நானே மீறிவிட்டேன். என் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அரசியலில் வர கூடாது என சத்தியம் செய்தேன். நான் எந்த காலகட்டத்திலும் அரசியலில் நிறுவனர் என்ற பொறுப்பை தவிர வேறு எதிலும் ஈடுபட மாட்டேன். அப்படி நான் முடிவு செய்து இருந்தால், டெல்லியில் பெரிய அமைச்சர் பதவி எனக்கு கொடுத்திருப்பார்கள். வாஜ்பாயில் இருந்து வி.பி சிங் வரைக்கும் எல்லா பிரதமர்களுக்கு எனக்கு நெருக்கம்."
"நீங்கள் கட்டளையிடுங்கள் நான் செய்து முடிக்கிறேன் என்கிறார் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?"
"இல்லை…."
"ஏன் நம்பிக்கை இல்லை?"
"உங்களை நம்பி ஒரு பொறுப்பு ஒரு வருட காலத்திற்கு கொடுக்கப்படுகிறது என்றால், சிறப்பாக செய்தால் சிறப்பாக செய்தீர்கள் என்று சொல்லுவோம். ஒண்ணுமே செய்யாமல் இருந்தால் அவர் மேல் நம்பிக்கை இல்லை சரி இல்லை என்று நான் சொல்லுவோம். அது மாதிரி தான் இதுவும். நிர்வாக குழுவில் 19 பேர் இருக்கிறார்கள். நிர்வாக குழு என்பது நிறை குறைகள் எல்லாம் சொல்வதுதான் அந்த குழுவின் நோக்கம். அந்தக் கூட்டத்தின் பொழுது ஒருவர் குறை சொல்லும் பொழுது இவர் பாதியில் நிறுத்தும்படி செய்கை காட்டுகிறார். உடனே மீதி உள்ள 18 பேரும் எதுவுமே சொல்லாமல் அமைதியாகி விடுகிறார்கள். அப்போதுதான் இவருக்கு தலைமைப் பண்பு இல்லை என்று பகிரங்கமாக சொன்னேன். அதன் பிறகு காலப்போக்கில் அது உண்மை என தெரிந்தது. அதன் பிறகு பொறுப்பை நானே ஏற்றுக் கொண்டேன். தேர்தல் வருவதால் நல்ல கட்சிக்காரர்களிடம் பொறுப்பை கொடுத்து வேகமாக செயல்பட வைக்கிறேன். "

"அன்புமணிக்கு தலைமைப் பண்பு இல்லை என்று நீங்கள் விமர்சிப்பது உட்சபட்ச குற்றச்சாட்டாக தெரியவில்லையா?"
"அவர் மாநாடெல்லாம் நடத்திய பிறகு தான் தெரிய வருகிறது. பிறகு தான் எங்களுக்கு தெரிய வருகிறது. ஒருவர் பேசுகிறார் என்றால் அவர் மேல் பாய்ந்து அவரை அமைதியாக்குகிறார். அதனால் வேறு யாரும் பேசவே இல்லை. அவர் நல்லதெல்லாம் செய்திருக்கிறார். 108 ஆம்புலன்ஸ் போன்ற திட்டங்கள் எல்லாம் கொண்டு வர வைத்திருக்கிறார் என்று எல்லாம் மேடைகளில் பேசியிருக்கிறேன். ஆனால் இவரை மாதிரி ஒரு தலைவர் யாரும் இல்லை என நான் மேடையில் பேசியதில்லை. இப்பொழுது அன்புமணியிடம் இருப்பவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், ஐயா பின்னாடியே நாம் சென்றிருக்கலாம். ரெண்டு கட்டாம் நிலையில் இருக்கிறோம் என சிலர் திரும்பி வருகிறார்கள். "
"என்னுடன் இருப்பவர்களுக்குத்தான் சீட் என்பதன் மூலம் அன்புமணிக்கு நெருக்கடி தருகிறீர்களா?"
"நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பது அவசியம் கிடையாது. என்னுடன் இருப்பவர்கள் கிளை செயலாளர்கள், ஒன்றிய செயலாளர், பேரூராட்சி, நகரம் என படிப்படியாக வளர்ந்து வந்தவர்கள். அவர்களைப் பார்க்கும் பொழுது அவர்களுக்கு பொறுப்பு கொடுக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். கட்சி பொறுப்போடு தேர்தல் வரும் பொழுது சட்டமன்ற உறுப்பினர் என வாய்ப்புகள் கொடுப்போம். கூட்டணி ஆட்சி மூலம் அவர்களுக்கு அமைச்சர் ஆவதற்கு கூட வாய்ப்புகள் உண்டு. "
"திருமாவளவன் என் அன்புக்குரியவர் என்று கூறியிருந்தீர்கள்... பதிலுக்கு அவரும் உங்களுடன் பயணித்த அனுபவங்களை பகிர்வதுடன், ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு, 'சாதி மறுப்பு திருமணங்களுக்கு திருமாவளவன்தான் காரணம், 'நாடகக் காதல்' என்றெல்லாம் நீங்கள் பாதை மாறியதை இன்னும் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றுகூறியிருக்கிறார். இப்போதும் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறீர்களா?"
"சிறுவயதில் பெண் குழந்தைகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்று தெரியாது. பெற்று வளர்த்து ஆளாக்கி படிக்க வைத்து 23 வயது வரைக்கும் காத்திருக்காத பெண்களுக்கு இரண்டு மாதங்கள் பின்னே சுற்றுகின்றவர்கள் மீது காதல் வந்து விடுகிறது. அதனை யாரும் தடுக்க முடியாது. மன ரீதியாகவும், உடல்ரீதியாகவும் 23 வயது பிறகு தான் அவர்களுக்கு சரியான வயது. நாங்கள் சொல்லி வந்தது தான் பெங்களூரு நீதி மன்றமும் தீர்ப்பு கொடுத்து இருக்கிறார்கள். அப்போது தான் கர்ப்பம் தரித்தல் உள்ளிட்டவை எல்லாம் 23 வயதிற்கு மேல் தான் சரியாக இருக்கும். அதனை நாங்கள் கூறி வந்தோம். அதனை தான் பெங்களூரு நீதி மன்றமும் உறுதிப்படுத்தி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதனை நான் பல மேடைகளில் படித்துக் காட்டியுள்ளேன். "
முழுப்பேட்டியை காண...