செய்திகள் :

கொல்லப்பட்ட ஈரான் தளபதிகள், விஞ்ஞானிகளின் இறுதிச் சடங்கு! சாலைகளில் திரண்ட மக்கள்!

post image

இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் முக்கிய தளபதிகள் மற்றும் அந்நாட்டின் விஞ்ஞானிகளின் இறுதிச் சடங்கு இன்று (ஜூன் 28) நடைபெறுவதால், லட்சக்கணக்கான மக்கள் தெஹ்ரானின் சாலைகளில் திரண்டுள்ளனர்.

"ஆபரேஷன் ரைசிங் லயன்” என்ற பெயரில் ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள், ராணுவ தளவாடங்கள் ஆகியவற்றின் மீது இஸ்ரேல் கடந்த ஜூன் 13 ஆம் தேதி தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதல்களில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தளபதி ஜெனரல். ஹொசைன் சலாமி மற்றும் ஏவுகணைகளின் தளபதி ஜெனரல். அமிர் அலி ஹாஜிஸாதேஹ் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையில் தொடங்கிய 12 நாள் போரானது நிறுத்தப்படுவதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஜூன் 24 ஆம் தேதி அறிவித்தார்.

இறுதிச் சடங்கில்...

இருப்பினும், இந்தப் போரில் ஈரானின் 30 முக்கிய ராணுவ தளபதிகள் மற்றும் 11 அணுசக்தி விஞ்ஞானிகள் ஆகியோரை கொன்றதுடன், 8 அணுசக்தி தளவாடங்கள் மற்றும் 720-க்கும் மேற்பட்ட ராணுவ கட்டமைப்புகள் ஆகியவற்றை தாக்கி தகர்த்துள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

இந்நிலையில், கொல்லப்பட்ட ஈரானின் தளபதிகள், விஞ்ஞானிகள் மற்றும் 4 பெண்கள், 4 குழந்தைகள் உள்ளிட்ட சுமார் 60 பேருக்கான இறுதிச் சடங்குகள், அந்நாட்டின் தலைநகர் தெஹ்ரானில் இன்று (ஜூன் 28) நடைபெற்று வருகின்றன.

இந்த இறுதிச் சடங்கில் பங்கேற்க லட்சக்கணக்கான ஈரான் நாட்டு மக்கள் தெஹ்ரானின் சாலைகளில் திரண்டுள்ள நிலையில், போரில் கொல்லப்பட்ட அனைவரது உடல்களும் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டிகள் வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டுள்ளன.

முன்னதாக, ஈரானில் இதுபோன்ற முக்கிய தளபதிகள் மற்றும் தலைவர்களின் இறுதிச் சடங்குகள், அந்நாட்டின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி தலைமையில் நடைபெறுவது வழக்கம். ஆனால், இன்று நடைபெறும் இறுதிச் சடங்கில் அவரது வருகை குறித்து, இதுவரை எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.

SUMMARY

Funeral of slain Iranian generals and scientists, People gather on the streets of Tehran.

இதையும் படிக்க: நடுவழியில் துர்நாற்றம், தொழில்நுட்பக் கோளாறு! சீன விமானம் அவசர தரையிறக்கம்!

பாகிஸ்தான் திடீர் வெள்ளம்: 3 நகரங்களுக்கு எச்சரிக்கை! அதிகரிக்கும் உயிர் பலிகள்!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி தற்போது 11 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைபர் பக்துன்குவா மாகாணத்தில் பெய்த கனமழையால், அங்குள்ள ஸ்வாட் ஆற்றில் வெள... மேலும் பார்க்க

இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல்! ஈரான் அல்ல; யேமன்!

இஸ்ரேல் - ஈரான் போரினைத் தொடர்ந்து, தற்போது யேமன் நாடும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலின் தாக்குதலுக்கு, யேமன் நாட்டில் உள்ள (ஈர... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஷெல் தாக்குதல்! 5 குழந்தைகள் உள்பட 14 பேர் படுகாயம்!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், நடைபெற்ற மோர்ட்டார் ஷெல் தாக்குதலில், 5 குழந்தைகள் உள்பட 14 பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குர்ராம் மாவட்டத்திலுள்ள காச்சி கமார் கிராமத்தில... மேலும் பார்க்க

இஸ்ரேலின் 'டாடி' யார்? ஈரான் கிண்டல்!

ஈரானுடனான போரில் அமெரிக்காவிடம் இஸ்ரேல் ஓடியதாக ஈரான் அமைச்சர் விமர்சித்துள்ளார்.ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனியை நன்றியற்றவர் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்த நிலையில், டிரம்ப்பின... மேலும் பார்க்க

நடுவழியில் துர்நாற்றம், தொழில்நுட்பக் கோளாறு! சீன விமானம் அவசர தரையிறக்கம்!

சீனாவில் வானில் பறந்து கொண்டிருந்த உள்நாட்டு விமானம் ஒன்று நடுவழியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால், அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. சீனாவின், ஷாண்டாங் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான உள்நாட்டு வி... மேலும் பார்க்க

2016ல் வெளியான அதிர்ச்சித் தகவல்.. 75 வயது மூதாட்டி வயிற்றில் கல்லாய் மாறிய 30 ஆண்டு சிசு!

அல்ஜீரியாவைச் சேர்ந்த 75 வயது பெண்ணின் வயிற்றில், 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோன சிசு கால்சியக் கல்லாய் மாறியிருந்தது மருத்துவப் பரிசோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.... மேலும் பார்க்க