செய்திகள் :

சட்டவிரோத குடியேற்றம்: தில்லியில் 18 வங்கதேசத்தினர் கைது!

post image

தில்லியில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த பதினெட்டு வங்கதேச நட்டவர்கள் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களின் ஐந்து பேர் திருநங்கைகள்போல் மாறுவேடமிட்டு வசித்து வந்ததாகப் போலீஸார் தெரிவித்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஏழு பேரின் மொபைல் போனில் தடைசெய்யப்பட்ட குறுந்தகடு செயலியைப் போலீஸார் கண்டுபிடித்தனர். அதைப் பயன்படுத்தி அவர்கள் வங்கதேசத்தில் உள்ள தங்கள் குடும்பத்தினருடன் தொடர்புகொண்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

போலீஸாருக்கு கிடைத்த தகவலின்படி சரிபார்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக மூத்த காவல் அதிகாரி தெரிவித்தார். விசாரணையின்போது ஆரம்பத்தில் தப்பித்த ஒருவர், பின்னர் தான் வங்கதேச நாட்டவர் என்று ஒப்புக்கொண்டார். மேலும் விசாரணையைத் தொடர்ந்து, அவரது குடும்ப உறுப்பினர்களும் கண்டுபிடிக்கப்பட்டனர்.

போலீஸாரின் முதல் நடவடிக்கையில் மொத்தம் 13 வங்கதேச நாட்டவர்களில், 3 குழந்தைகள், 10 பெரியவர்கள் ஆவார். இவர்கள் அனுமதி இல்லாமல் வசித்து வருவது கண்டறியப்பட்டது,

இரண்டாவது நடவடிக்கையில், திருநங்கைகள்போல் மாறுவேடமிட்ட ஐந்து நபர்கள், தலையில் விக், முகம் தெரியாமல் இருக்க மேக்அப், தோற்றத்தையும், குரலையும் மாற்ற அறுவைச் சிகிச்சைகள் மற்றும் ஹார்மோன் சிகிச்சையும் மேற்கொண்டது தெரிய வந்தது.

18 பேரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் டாக்கா, குல்னா, காசிபூர் மற்றும் அஷ்ரபாபாத் உள்ளிட்ட வங்க தேசத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார்.

SUMMARY

Eighteen Bangladeshi nationals staying illegally in Delhi have been apprehended.

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி உரையாடல்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியுள்ளார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், "சர்வதேச விண்வெளி நிலையத்தில்... மேலும் பார்க்க

பாலிவுட் நடிகை மாரடைப்பால் உயிரிழப்பு! மரணத்தில் சந்தேகம்? -போலீஸ் விசாரணை

பிரபல நடிகை ஷேஃபாலி ஜரீவாலா(42) வெள்ளிக்கிழமை இரவு மரணமடைந்தார். மும்பையிலுள்ள தமது வீட்டில் இரவு மயங்கிக்கிடந்த ஷேஃபாலி ஜரீவாலாவை அவரது குடும்பத்தார் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்க... மேலும் பார்க்க

ஹைதராபாத்தில் தெலுங்கு பெண் பத்திரிக்கையாளர் சடலமாக மீட்பு

தெலங்கானாவில் பிரபல தெலுங்கு பெண் பத்திரிகையாளர் ஸ்வேசா அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையின்படி, 35 வயதான அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என ... மேலும் பார்க்க

மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: கொல்கத்தா கல்லூரி பாதுகாவலர் கைது

மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் அரசு சட்டக் கல்லூரிக்குள் முதலாம் ஆண்டு மாணவி ஒருவா் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் கல்லூரி பாதுகாவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவத்... மேலும் பார்க்க

ஜெய்ஷ் பயங்கரவாதிகள் எங்கே? ட்ரோன்.. மோப்ப நாய்கள்.. 3வது நாளாகத் தொடரும் தேடுதல் வேட்டை!

ஜம்மு - காஷ்மீரின் வனப்பகுதியில் பதுங்கியுள்ள 3 ஜெய்ஷ்-இ-முஹமது பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் 3-வது நாளாக இன்று (ஜூன் 28) ஈடுபட்டுள்ளனர். உதம்பூர் மாவட்டத்தின் பசந்த்கார் வனப்பக... மேலும் பார்க்க

காமாக்யா கோயிலில் விரைவில் ரோப்கார் வசதி: அஸ்ஸாம் முதல்வர்!

அஸ்ஸாம் குவாஹாத்தியில் உள்ள காமாக்யா கோயிலில் விரைவில் ரோப்கார் வசதி கட்டப்படும் என மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார். 51 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படும் காமாக்யா கோயிலுக்கு அஸ்ஸா... மேலும் பார்க்க