செய்திகள் :

காமாக்யா கோயிலில் விரைவில் ரோப்கார் வசதி: அஸ்ஸாம் முதல்வர்!

post image

அஸ்ஸாம் குவாஹாத்தியில் உள்ள காமாக்யா கோயிலில் விரைவில் ரோப்கார் வசதி கட்டப்படும் என மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

51 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படும் காமாக்யா கோயிலுக்கு அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா வருகை தந்தார். மக்களின் பயணத்தை எளிதக்கக்கூடிய மேம்பாட்டுத் திட்டத்தையும் அவர் பகிர்ந்துகொண்டார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது,

காமாக்யா தேவி கோயிலுக்குச் செல்லும் பயணத்தை எளிதாக்கவும், நேரத்தைச் சிக்கனமாக்கவும் ரயில் நிலையத்திலிருந்து காமாக்யா கோயிலுக்கும், சோனாராமிலிருந்து காமாக்யா கோயிலுக்கும் ரோப் வே (ரோப் கார்) வசதி விரைவில் தொடங்கப்படும்.

இரண்டு ரோப் வேக்களிலும் பணிகள் நடந்து வருகின்றன. டெண்டர் செயல்முறை ஏற்கெனவே செய்யப்பட்டுள்ளது. பல ரோப் வே வசதிக்கான சாத்தியக்கூறு பற்றி ஆய்வு நடந்து வருகிறது.

காமாக்யா கோயிலுக்கு இரண்டு ரோப்வேக்களின் கட்டுமானமும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் கோயிலுக்கு வருகைதரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் விரைவான போக்குவரத்து முறையை எளிதாக்கவும், பயண நேரத்தைக் குறையுக்கவும் இது பயன்படும். சுற்றுலாவை மேம்படுத்துவதோடு, இதன்மூலம் பொருளாதாரமும் உயரும் என்று அவர் கூறினார்.

காமாக்யா தேவியின் வருடாந்திர மாதவிடாய் சுழற்சியைக் குறிக்கும் அம்புபாச்சி மேளா ஜூன் 22 தொடங்கி 26ல் நிறைவடைந்தது. தேவியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடி வருகின்றனர்.

ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்திருந்ததால் மேளா நிறைவடைந்து இரண்டு நாள்கள் கழித்து காமாக்யா தேவியை தரிசிக்க வந்துள்ளேன்.

குடும்பத்தோடு கோயிலுக்கு வருகை தந்திருந்த முதல்வர் அஸ்ஸாம் மக்களின் நல்வாழ்வுக்காகப் பிரார்த்தனை செய்தார்.

அம்புபாச்சி விழாவை ஏற்பாடு செய்ததற்காகக் கோயில் நிர்வாகக் குழு, சுற்றுலாத் துறை, அமைச்சர் ரஞ்சித் குமார் தாஸ் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தார்.

SUMMARY

Assam CM Sarma announces construction of two ropeways to Kamakhya Temple

ஹைதராபாத்தில் தெலுங்கு பெண் பத்திரிக்கையாளர் சடலமாக மீட்பு

தெலங்கானாவில் பிரபல தெலுங்கு பெண் பத்திரிகையாளர் ஸ்வேசா அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையின்படி, 35 வயதான அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என ... மேலும் பார்க்க

சட்டவிரோத குடியேற்றம்: தில்லியில் 18 வங்கதேசத்தினர் கைது!

தில்லியில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த பதினெட்டு வங்கதேச நட்டவர்கள் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் ஐந்து பேர் திருநங்கைகள்போல் மாறுவேடமிட்டு வசித்து வந்ததாகப் போலீஸார் தெரிவ... மேலும் பார்க்க

மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: கொல்கத்தா கல்லூரி பாதுகாவலர் கைது

மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் அரசு சட்டக் கல்லூரிக்குள் முதலாம் ஆண்டு மாணவி ஒருவா் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் கல்லூரி பாதுகாவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவத்... மேலும் பார்க்க

ஜெய்ஷ் பயங்கரவாதிகள் எங்கே? ட்ரோன்.. மோப்ப நாய்கள்.. 3வது நாளாகத் தொடரும் தேடுதல் வேட்டை!

ஜம்மு - காஷ்மீரின் வனப்பகுதியில் பதுங்கியுள்ள 3 ஜெய்ஷ்-இ-முஹமது பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் 3-வது நாளாக இன்று (ஜூன் 28) ஈடுபட்டுள்ளனர். உதம்பூர் மாவட்டத்தின் பசந்த்கார் வனப்பக... மேலும் பார்க்க

பைசா செலவில்லாமல் விண்வெளி சென்ற ராகேஷ் சர்மா! சுபான்ஷு சுக்லாவுக்கு ரூ.544 கோடி செலவு ஏன்?

ராகேஷ் சர்மாவின் விண்வெளிப் பயணத்துக்கு ஒரு ரூபாய்கூட செலவு ஏற்படவில்லை. ஆனால், சுபான்ஷு சுக்லாவுக்கு மட்டும் ஏன் செலவழிக்கப்படுகிறது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.சர்வதேச விண்வெளி நிலையத்து... மேலும் பார்க்க

கட்சிரோலி, கோண்டியாவில் 4 தாலுகாக்கள் நக்சல் பாதிப்புக்குள்ளானவை: மகாராஷ்டிர அரசு!

மகாராஷ்டிரத்தின் கட்சிரோலி மாவட்டம் முழுவதும் மற்றும் கோண்டியாவில் உள்ள நான்கு தாலுக்காக்கள் நக்சல் பாதிப்புக்குள்ளானவை என்று மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது. முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் கடந்த ஐந்து ... மேலும் பார்க்க