செய்திகள் :

``விசிக, காங்கிரஸ் கட்சிக்கு ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏன்?'' - பாமக அன்புமணி கேள்வி!

post image

 ராமதாஸ் - அன்புமணி மோதல் விவகாரம் முடிவுறாத கதையாக நீண்டுகொண்டிருக்கிறது.

இதற்கிடையே ராமதாஸ் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் திருமாவளவன் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது பிடிக்கவில்லை என்றும் கூறி, திருமாவைப் பாராட்டியும் பேசியிருந்தார். இதற்காக விசிக எம்பி ரவிக்குமார், ராமதாஸ்-க்கு நன்றி கூறி இருந்தார்.

ராமதாஸ், அன்புமணி

திருமாவும் இதுகுறித்து விகடனுக்கு அளித்த பேட்டியில், "ஆரம்ப காலகட்டத்திலிருந்தே ராமதாஸ் அவர்கள் என் மீது பாசம் கொண்டவர்தான். என் மீதான அவரது அக்கறை உண்மையானதுதான்" என்று கூறியிருந்தார்.

இதையடுத்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை திடீரென தைலாபுரம் தோட்டத்திற்குச் சென்று பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்தார். இது கூட்டணி பற்றிய சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது.

மேலும், பா.ஜ.க. கூட்டணிக்காக அன்புமணியும், சௌமியா அன்புமணியும் தன்னிடம் கெஞ்சியதாக ராமதாஸ் கூறியது இன்னும் இந்தச் சர்ச்சையை வெடிக்க வைத்திருக்கிறது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற பாமக சமூக ஊடக பிரிவு ஆலோசனை கூட்டத்தில் இந்த சர்ச்சைகள் குறித்துப் பேசியிருக்கும் அன்புமணி, "வன்னி அரசு, ரவிக்குமார், சிந்தனைச்செல்வனுக்கு ராமதாஸ் மீது ஏன் அன்பு ஏற்பட்டுள்ளது? எப்போதாவது ராமதாஸை திருமாவளவன் புகழ்ந்து பேசி இருப்பாரா? இப்போது புகழ்வது ஏன்? செல்வப்பெருந்தகை திடீரென ராமதாஸை சந்திப்பது ஏன்? இதுதான் திமுகவின் சூழ்ச்சி." என்று பேசியிருக்கிறார்.

ராமதாஸ், மோடி, அன்புமணி

2024 பாஜக கூட்டணி சர்ச்சை குறித்து அன்புமணி "அய்யா ராமதாஸ் அவர்கள் சொல்லித்தான் 2024ல் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன். அப்போதே சொல்லி இருந்தால் வேண்டாம் என சொல்லியிருப்பேன். அதிமுகவுடன்தான் கூட்டணி வைக்க வேண்டும் என்று சொல்லியிருந்தால் நான் ஏன் வேண்டாம் என்று சொல்லப்போகிறேன்" என்று விளக்கமளித்திருக்கிறார்.

ராமதாஸ் குழந்தை போல மாறிவிட்டார்

மேலும், "கடந்த 5 ஆண்டுகளாகவே பாமக நிறுவனர் ராமதாஸ் அவராகவே இல்லை. ராமதாஸாக இருந்து எது கூறியிருந்தாலும் கண்களை மூடிக்கொண்டு செய்திருப்பேன். 3 பேர் தங்களது சுய லாபத்துக்காக ராமதாஸை பயன்படுத்தி கொள்கிறார்கள்.

ராமதாஸ், அன்புமணி

ராமதாஸுக்கு பிறகு நான் தலைவராக வேண்டும் என அப்போதே முடிவெடுத்துவிட்டேன். 12 ஆண்டுகளுக்கு முன்பு என்னை பாமகவின் தலைவராக இருக்குமாறு ராமதாஸ் கூறினார்.

அய்யா ராமதாஸ் அவர்கள் வயது முதிர்வால் ஒரு குழந்தை போல மாறிவிட்டார். அவரை யாரும் விமர்சிக்க வேண்டாம்" என்று அன்புமணி பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

`பாதிக்கப்பட்ட பெண்ணும் மகள்தான்; என் மகன் மீது நடவடிக்கை எடுங்கள்' -குற்றம் சாட்டப்பட்டவரின் தந்தை

கடந்த ஜூன் 25-ம் தேதி அன்று கொல்கத்தா நகரின் சவுத் கொல்கத்தா சட்டக் கல்லூரியின் வளாகத்தில் 24 வயது மாணவி மூன்று நபர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை செய்யப்பட்ட விவகாரம் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில்... மேலும் பார்க்க

Ground water tax: நிலத்தடி நீருக்கு வரி விதிப்பா? – மத்திய அரசு விளக்கம்!

நிலத்தடி நீர் வீணாவதையும், தவறாக பயன்படுத்துவதையும் தவிர்க்க மத்திய அரசு நிலத்தடி நீருக்கு வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக நேற்று (ஜூன் 27) தகவல்கள் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து பலரு... மேலும் பார்க்க

ஆஸ்கர் விருதுக்கான தேர்வுக் குழுவில் கமல்; "தாமதமான அங்கீகாரமே..." - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

திரைப்படத் துறையில் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்குத் திரைப்படங்களைத் தேர்வு செய்யும் குழுவில் உறுப்பினராக இணைய நடிகர் கமல் ஹாசன் உள்பட 534 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.Oscars ஆஸ... மேலும் பார்க்க

"அமைச்சருக்கு இது அழகல்ல" - ராஜ கண்ணப்பனுக்கு எதிராகப் போராட்டம்; அரசியல் கட்சிகள் எச்சரிப்பது என்ன?

மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு பதவியேற்ற கடந்த 4 ஆண்டுகளில் 4-வது நபராக வனத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வருகிறார் ராஜ கண்ணப்பன். மனித - வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் விவகாரத்தில் மிகவும் பொறுப்பற... மேலும் பார்க்க

`காலை உணவில் பல்லி' - 4 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி; திருப்பூர் பள்ளியில் நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கொழிஞ்சிவாடியில் நகராட்சி நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 150 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளியில் வழங்கப்ப... மேலும் பார்க்க

Black Magic: 'சூனியம் போன்ற சடங்குக்கு எதிராக சட்டமா?' - கேரள அரசு தாக்கல் செய்த பிராமணப் பத்திரம்!

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில், 2022-ம் ஆண்டு ஒரு தம்பதி உட்பட மூன்று பேர் இரண்டு பெண்களை நரபலி கொடுத்து சடங்கு செய்தனர். இந்த சம்பவம் கேரள மாநிலத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதைத் தொடர்ந்து,... மேலும் பார்க்க