செய்திகள் :

`பாதிக்கப்பட்ட பெண்ணும் மகள்தான்; என் மகன் மீது நடவடிக்கை எடுங்கள்' -குற்றம் சாட்டப்பட்டவரின் தந்தை

post image

கடந்த ஜூன் 25-ம் தேதி அன்று கொல்கத்தா நகரின் சவுத் கொல்கத்தா சட்டக் கல்லூரியின் வளாகத்தில் 24 வயது மாணவி மூன்று நபர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை செய்யப்பட்ட விவகாரம் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தா அரசியல் வட்டாரத்திலும் சர்ச்சையை கிளப்பிவிட்டிருக்கிறது.

கூட்டு பாலியல் வன்முறை

பாதிக்கப்பட்ட மாணவி தைரியமாக முன்வந்து தனக்கு நடந்த பாலியல் கொடுமை குறித்தும் அதற்குக் காரணமான மூன்றுபேர் மீதும் புகார் அளித்திருக்கிறார்.

மருத்துவ சோதனைமூலம் அம்மாணவிக்கு நடந்த பாலியல் கொடுமை உறுதி செய்யப்பட்டு, அவர் அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் மாணவரும், கல்லூரி பணியாளராக இருந்த மனோஜித் மிஸ்ரா (31), மற்றும் கல்லூரி மாணவர்கள் சையிப் அகமத் (19), பிரமித் முகர்ஜி (20) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மூவரும் திரிணமூல் காங்கிரஸ் மாணவர் அணி (TMCP) உறுப்பினர்கள் என்று சர்ச்சைகள் வெடிக்க, திரிணமூல் காங்கிரஸ் கட்சி அதனை திட்டவட்டமாக மறுத்து வருகிறது.

பாதிக்கப்பட்ட மாணவியின் வாக்குமூலம்

இந்த வழக்கில் நடத்தப்பட்டு வரும் விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவி காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்திருக்கிறார். அதில், "தேர்வுக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்பிக்க கல்லூரிக்கு கடந்த ஜூன் 25ம் தேதி புதன் கிழமை சென்றிருந்தேன். கல்லூரி வளாகத்தில் இருந்த மனோஜித் மிஸ்ரா, சையிப் அகமத், பிரமித் முகர்ஜி மூவரும் என்னை பாலியல் சீண்டல் செய்தனர்.

பாலியல் வன்முறை

காலில் விழுந்து கதறி அழுது கெஞ்சினேன்

அவர்கள் காலில் விழுந்து கதறி அழுது கெஞ்சினேன். என்னை கல்லூரியின் காவலர்களின் அறைக்கு இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் கொடுமை செய்துவிட்டனர். மாலை 7.30 மணிக்கு என்னை அறையில் வைத்து கூட்டுப் பாலியல் கொடுமை செய்தவர்கள் இரவு 10.50 மணிக்குத்தான் என்னை விட்டார்கள். இதை வீடியோ எடுத்து வைத்துள்ளதாகவும், காவல்துறையிடம் புகாரளித்தால் இணையதளங்களில் பரப்பிவிடுவோம் என்று மிரட்டினார்கள்" என்று வாக்குமூலத்தில் கூறியிருந்தார்.

பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ள மனோஜித் மிஸ்ராவின் தந்தை ராபின் மிஸ்ரா

இந்நிலையில் இந்த வழக்கில் பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ள மனோஜித் மிஸ்ராவின் தந்தை ராபின் மிஸ்ரா, "இந்த வழக்கில் நான் என் மகனுக்காக நிற்க மாட்டேன், எந்த உதவியும் செய்யமாட்டேன். வழக்கு விசாரணையை அவனே பார்த்துக்கொள்ளட்டும்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜி

பாதிக்கப்பட்ட பெண்ணும் ஒரு தந்தையின் மகள்தான். என் மகன் குற்றம் செய்தது உறுதியானால் சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள்." என்று கூறியிருக்கிறார்.

இந்த விவகாரம் குறித்து பேசியிருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜி, "எங்கள் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுக்காப்பு இருக்கிறது. அதில் உறுதியாக இருக்கிறோம். ஆனால், கல்லூரியில் நண்பர்களுக்குள்ளேயே நடக்கும் பாலியல் வன்முறைகளை என்ன செய்து தடுப்பது. அதற்கும் அரசைக் குற்றம் சாட்டுகிறீர்கள். பாத்திரிக்கையாளர்கள் ஏதோவொரு உள்நோக்கத்துடன் அரசை, எங்கள் கட்சியைத் தொடர்புப்படுத்தி இப்படியான கேள்விகளை என்னிடம் கேட்கிறார்கள்" என்று பேசியிருப்பது இந்த விவகாரத்தில் சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

``விசிக, காங்கிரஸ் கட்சிக்கு ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏன்?'' - பாமக அன்புமணி கேள்வி!

ராமதாஸ் - அன்புமணி மோதல் விவகாரம் முடிவுறாத கதையாகநீண்டுகொண்டிருக்கிறது. இதற்கிடையே ராமதாஸ் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் திருமாவளவன் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது பிடிக்கவில்லை என்ற... மேலும் பார்க்க

Ground water tax: நிலத்தடி நீருக்கு வரி விதிப்பா? – மத்திய அரசு விளக்கம்!

நிலத்தடி நீர் வீணாவதையும், தவறாக பயன்படுத்துவதையும் தவிர்க்க மத்திய அரசு நிலத்தடி நீருக்கு வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக நேற்று (ஜூன் 27) தகவல்கள் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து பலரு... மேலும் பார்க்க

ஆஸ்கர் விருதுக்கான தேர்வுக் குழுவில் கமல்; "தாமதமான அங்கீகாரமே..." - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

திரைப்படத் துறையில் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்குத் திரைப்படங்களைத் தேர்வு செய்யும் குழுவில் உறுப்பினராக இணைய நடிகர் கமல் ஹாசன் உள்பட 534 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.Oscars ஆஸ... மேலும் பார்க்க

"அமைச்சருக்கு இது அழகல்ல" - ராஜ கண்ணப்பனுக்கு எதிராகப் போராட்டம்; அரசியல் கட்சிகள் எச்சரிப்பது என்ன?

மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு பதவியேற்ற கடந்த 4 ஆண்டுகளில் 4-வது நபராக வனத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வருகிறார் ராஜ கண்ணப்பன். மனித - வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் விவகாரத்தில் மிகவும் பொறுப்பற... மேலும் பார்க்க

`காலை உணவில் பல்லி' - 4 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி; திருப்பூர் பள்ளியில் நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கொழிஞ்சிவாடியில் நகராட்சி நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 150 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளியில் வழங்கப்ப... மேலும் பார்க்க

Black Magic: 'சூனியம் போன்ற சடங்குக்கு எதிராக சட்டமா?' - கேரள அரசு தாக்கல் செய்த பிராமணப் பத்திரம்!

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில், 2022-ம் ஆண்டு ஒரு தம்பதி உட்பட மூன்று பேர் இரண்டு பெண்களை நரபலி கொடுத்து சடங்கு செய்தனர். இந்த சம்பவம் கேரள மாநிலத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதைத் தொடர்ந்து,... மேலும் பார்க்க