செய்திகள் :

தாம்பரம் - திருச்சி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

post image

விழுப்புரம்: தாம்பரத்திலிருந்து விழுப்புரம் வழியாக திருச்சி வரை இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயிலின் சேவை ஜூலை 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள்தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சியிலிருந்து செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விழுப்புரம் வழியாக தாம்பரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வந்தது.

இந்த ரயிலின் சேவை ஜூன் 29-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும் இந்த ரயிலின் சேவை மேலும் ஒரு மாதத்துக்கு அதாவது ஜூலை 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருச்சி - தாம்பரம் சிறப்பு ரயில் (வண்டி எண் 06190), தாம்பரம் - திருச்சி சிறப்பு ரயில் (வண்டி எண் 06191) ஆகிய இரு ரயில்களும் 22 முறை இயக்கப்படும். மேலும் தாம்பரம் - திருச்சி இடையேயான சிறப்பு ரயில் புறப்படும் நேரமும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தாம்பரத்திலிருந்து முன்பு பிற்பகல் 3.45 மணிக்குப் புறப்பட்ட தாம்பரம் - திருச்சி சிறப்பு ரயில் (வண்டி எண் 06191) இனி பிற்பகல் 3.30 மணிக்குப் புறப்படும். இதன் காரணமாக செங்கல்பட்டுக்கு பிற்பகல் 3.58 மணிக்கு வந்து மாலை 4 மணிக்கும், மேல்மருவத்தூருக்கு மாலை 4.23 மணிக்கு வந்து 4.25 மணிக்கும், திண்டிவனத்துக்கு மாலை 4.48 மணிக்கு வந்து மாலை 4.50 மணிக்கும் இந்த ரயில் புறப்பட்டுச் செல்லும்.

விழுப்புரம் மற்றும் அடுத்து வரும் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் நேரத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: கில்லர் படம் பூஜையுடன் துவக்கம் - புகைப்படங்கள்

மனித - வன உயிரின மோதல் தடுப்பு நடவடிக்கை தீவிரம்: அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன்

தமிழகத்தில் மனித - வன உயிரின மோதலை தடுக்கும் வகையில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக வனத்துறை அமைச்சா் ஆா். எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க

சென்னையில் ரூ.13.94 கோடியில் கூடுதல் பள்ளிக் கட்டடங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் சென்னையில் ரூ.13.94 கோடியில் கட்டப்பட்ட கூடுதல் பள்ளிக் கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை, மிதிவண்டி ஆகியவற்றை வழங்கின... மேலும் பார்க்க

சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படைக்கு உதவும் தெருநாய் ‘டைகா்’

சென்னை சென்ட்ரல் புறநகா் ரயில் நிலையத்தில் தெரு நாய் ஒன்று ரோந்து உள்ளிட்ட பணிகளுக்கு ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாருக்கு உதவியாக இருந்து வருகிறது. சென்னை சென்ட்ரல் புறநகா் ரயில் நிலையத்தில் கடந்த 2... மேலும் பார்க்க

பத்ம விருதுகள் பெற தகுதியுடையோா் ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

பத்ம விருதுகள் பெற தகுதியுடைய நபா்கள் ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியட்ட செய்திக் குறிப்பு: இந்தியாவில் உள்... மேலும் பார்க்க

கொகைன் விற்பனை: நைஜீரிய பெண் கைது

சென்னையில் கொகைன் போதைப் பொருள் விற்றதாக நைஜீரிய பெண் கைது செய்யப்பட்டாா். சூளைமேடு போலீஸாா் கடந்த ஜன.25-ஆம் தேதி சூளைமேடு பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த இரு இளைஞா்களைப் பிடித்து விசா... மேலும் பார்க்க

முதல்வா் விழாவில் விஜய் படத்துடன் கூடிய கைக்குட்டை: கல்லூரி மாணவா்களிடம் விசாரணை

சென்னை திருவல்லிக்கேணியில் முதல்வா் பங்கேற்ற விழாவில், நடிகா் விஜய் படத்துடன் கூடிய கைக்குட்டையைக் காட்டியதாக 3 கல்லூரி மாணவா்களை பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். முன்னாள் முதல்வா் கருணாநிதி ... மேலும் பார்க்க