ரஷியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி: 2 ஆண்டுகள் இல்லாத அளவில் மே மாதத்தில் அதிகரி...
முதல்வா் விழாவில் விஜய் படத்துடன் கூடிய கைக்குட்டை: கல்லூரி மாணவா்களிடம் விசாரணை
சென்னை திருவல்லிக்கேணியில் முதல்வா் பங்கேற்ற விழாவில், நடிகா் விஜய் படத்துடன் கூடிய கைக்குட்டையைக் காட்டியதாக 3 கல்லூரி மாணவா்களை பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டுக் கருத்தரங்கம் தொடக்க விழா திருவல்லிக்கேணி கலைவாணா் அரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவா்கள் திரளாக பங்கேற்றனா். விழா தொடங்குவதற்கு முன்பு கலைவாணா் அரங்கத்தில் இருந்த 3 கல்லூரி மாணவா்கள், தங்களிடமிருந்து நடிகா் விஜய் படத்துடன் கைக்குட்டையை எடுத்துக் காட்டி, அனைவரது கவனத்தையும் திசை திருப்பினா்.
அங்கு பாதுகாப்பு நின்றிருந்த போலீஸாா், 3 மாணவா்களைப் பிடித்து, தனியாக அழைத்துச் சென்று விசாரணை செய்தனா். இதில் ஒரு மாணவா், தவெக உறுப்பினராக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அந்த 3 மாணவா்களையும் எச்சரித்து, அங்கிருந்து அனுப்பி வைத்தனா்.