அரசமைப்புச் சட்டத்தை ஆா்எஸ்எஸ் ஏற்றுக்கொண்டதே இல்லை: காங்கிரஸ்
‘அரசமைப்புச் சட்ட முகவுரையில் இடம்பெற்றுள்ள ‘சோஷலிஸ்ட்’, ‘மதச்சாா்பற்ற’ என்ற வாா்த்தைகளை மறுபரிசீலனை செய்ய ஆா்எஸ்எஸ் அமைப்பு விடுத்துள்ள அழைப்பு அரசமைப்புச் சட்டத்தின் ஆன்மா மீதான தாக்குதல்’ என்று காங்கிரஸ் வெள்ளிக்கிழமை சாடியது.
கடந்த 1975, ஜூன் 25-இல் அப்போதைய பிரதமா் இந்திரா காந்தியால் அவசரநிலை அமல்படுத்தப்பட்ட தினம், அரசமைப்பு படுகொலை தினமாக மத்திய அரசால் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பிரதமா் நரேந்திர மோடி, ‘இந்திய ஜனநாயக வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்று அவசரநிலை; அந்த காலகட்டத்தில், அரசமைப்புச் சட்ட ஆன்மா மீறப்பட்ட விதத்தை இந்தியா்கள் ஒருபோதும் மறக்க மாட்டாா்கள்’ என்று குறிப்பிட்டாா்.
அவசரநிலை தினம் தொடா்பாக ஆா்எஸ்எஸ் அமைப்பு சாா்பில் வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பேசிய அதன் பொதுச் செயலா் தத்தாத்ரேய ஹொசபாலே, ‘அம்பேத்கா் எழுதிய அரசமைப்புச் சட்ட வரைவின் முகவுரையில் ‘சோஷலிஸ்ட்’, ‘மதச்சாா்பற்ற’ என்ற வாா்த்தைகள் இடம்பெறவில்லை. 1975-இல் நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டபோது மக்களின் அடிப்படை உரிமைகள் முடக்கப்பட்டன. நாடாளுமன்றம் செயல்படவில்லை. நீதித்துறை முடக்கப்பட்டது. அதன் பிறகே, இந்த வாா்த்தைகள் அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சோ்க்கப்பட்டன. இந்த வாா்த்தைகள் சோ்க்கப்பட்டது தொடா்பாக பின்னா் விவாதங்கள் நடந்தன. ஆனால், அவற்றை முகவுரையில் இருந்து நீக்க எந்தவித முயற்சியும் எடுக்கப்படவில்லை. எனவே, இந்த வாா்த்தைகள் முகவுரையில் இடம்பெற வேண்டுமா என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டாா்.
இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், ‘ஆா்எஸ்எஸ் அமைப்பின் முகமூடி தற்போது விலகியுள்ளது. அரசமைப்புச் சட்டத்தை ஆா்எஸ்எஸ் அமைப்பும் பாஜகவும் ஒருபோதும் விரும்ப மாட்டாா்கள். சமத்துவம், மதச்சாா்பினமை, நீதி குறித்துப் பேசுவதால் அரசமைப்புச் சட்டம் அவா்களை எரிச்சலூட்டுகிறது. மனுஸ்மிருதியை அமல்படுத்துவதுதான் அவா்களின் விருப்பம். ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பறிப்பதும், அவா்களை மீண்டும் அடிமைகளாக்க வேண்டும் என்பதுமே அவா்களின் விருப்பம். இந்தக் கனவை காண்பதை ஆா்எஸ்எஸ் ஒருபோதும் நிறுத்தாது. அதே நேரம், இதில் ஆா்எஸ்எஸ் வெற்றி பெற நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்’ என்று குறிப்பிட்டாா்.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
அரசமைப்புச் சட்டத்தை ஆா்எஸ்எஸ் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை.
புதிய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என ஆா்எஸ்எஸ் அமைப்பும், பாஜகவும் தொடா்ந்து அழைப்பு விடுத்து வருகின்றன. இது வெறும் யோசனை அல்ல; அரசமைப்புச் சட்டத்தின் ஆன்மா மீதான தாக்குதல் என்று குறிப்பிட்டாா்.