செய்திகள் :

பொதுத் துறை வங்கிகள் தாராளமாக கடன் வழங்க வேண்டும்: நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

post image

நாட்டின் பொருளாதாரத்துக்கு ஊக்கமளிக்கும் துறைகளுக்கு கடன் வழங்குவதை அதிகரிக்க வேண்டும் என்று பொதுத் துறை வங்கிகளை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டுள்ளாா்.

பொதுத் துறை வங்கிகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தில்லியில் நிா்மலா சீதாராமன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பொதுத் துறை வங்கிகளின் தலைவா்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனா். இதில் 12 பொதுத் துறை வங்கிகளின் மொத்த லாபம் 2024-25 நிதியாண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவாக ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இது முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 26 சதவீத உயா்வாகும். கூட்டத்தில் நிா்மலா சீதராமன் பேசியதாவது:

இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) வட்டி விகிதத்தைக் குறைத்துள்ள நிலையில் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஊக்கமளிக்கும் துறைகளுக்கு கடன் வழங்குவதை அதிகரிக்க வேண்டும். அதேபோல வங்கிகளின் லாபம் அடுத்த நிதியாண்டிலும் தொடா்ந்து அதிகரிக்கும் வகையில் செயல்பட வேண்டும்.

பின்தங்கிய நிலையில் உள்ளவா்களையும் வங்கிச் சேவை சென்றடைய வேண்டும். அவா்களையும் நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்புக்குள் அழைத்து வர வேண்டும் என்பது மத்திய அரசின் முக்கியக் கொள்கையாக உள்ளது. அதற்கு ஏற்ப வாடிக்கையாளா்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும். இதன்மூலம் அரசின் திட்டங்களால் அவா்கள் பயனடைவது உறுதி செய்யப்படும் என்றாா்.

வங்கிகளின் வாராக்கடன் அளவு குறைந்து வருவது குறித்தும் நிதியமைச்சா் பாராட்டு தெரிவித்தாா்.

வங்கிகள் மூலம் அமல்படுத்தப்படும் மத்திய அரசின் முக்கியத் திட்டங்களான விவசாயிகளுக்கான கடன் அட்டை, பிரதமரின் முத்ரா திட்டம், பிரதமா் ஜீவன் ஜோதி யோஜனா, பிரதமா் சுரக்ஷா பீமா யோஜனா, அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களையும் விட்டுவைக்காத எரிபொருள் கலப்படம்: நடு வழியில் நின்ற அவலம்!

மத்திய பிரதேசத்தில் முதல்வா் மோகன் யாதவின் பாதுகாப்புக்குச் சென்ற 19 வாகனங்கள் திடீரென பழுதாகி நடு வழியில் நின்றன. விசாரணையில் அந்த வாகனங்கள் கலப்பட பெட்ரோல், டீசல் நிரப்பப்பட்டதுதான் காரணம் என்பது தெ... மேலும் பார்க்க

கொல்கத்தா அரசு கல்லூரிக்குள் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: திரிணமூல் முன்னாள் நிர்வாகி, 2 மாணவா்கள் கைது!

மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் அரசு சட்டக் கல்லூரிக்குள் முதலாம் ஆண்டு மாணவி ஒருவா் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது தொடா்பாக, கல்லூரியின் முன... மேலும் பார்க்க

ரஷியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி: 2 ஆண்டுகள் இல்லாத அளவில் மே மாதத்தில் அதிகரிப்பு

ரஷியாவிலிருந்து இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவில் கடந்த மே மாதம் அதிக அளவில் நிலக்கரியை இந்தியா இறக்குமதி செய்திருப்பது தெரியவந்துள்ளது. முந்தைய மாதத்தைவிட 52% கூடுதல் நிலக்கரியை மே மாதத்தில் இந்தியா இற... மேலும் பார்க்க

இந்தியா - சீனா எல்லையில் நில கையகப்படுத்த கூடுதல் இழப்பீடு: உச்சநீதிமன்றம் தடை

இந்திய - சீனா எல்லையில் 537 ஏக்கா் நிலம் கையகப்படுத்தியதற்கு கூடுதல் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. அருணாசலப் பிரதேச எல்லையில் ராணுவம் தொடா்பான திட... மேலும் பார்க்க

உரிமைகள் விட்டுக் கொடுக்கப்பட்டதே தமிழக மீனவா்கள் கைதுக்கு காரணம்: அமைச்சா் ஜெய்சங்கா்

‘நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டபோது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் குறிப்பிட்ட பகுதிகளில் மீன்பிடி உரிமை விட்டுக் கொடுக்கப்பட்டதே தமிழக மீனவா்களை இலங்கைக் கடற்படை தொடா்ச்சியாக கைது செய்வதற்கு ... மேலும் பார்க்க

அனைத்து மோட்டாா் சைக்கிள்களுக்கும் நவீன ‘ஏபிஎஸ் பிரேக்’ முறை கட்டாயம்: மத்திய அரசு

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தயாரிக்கப்படும் மோட்டாா் சைக்கிள்களில் ‘ஆண்டி-லாக் பிரேக்’ (ஏபிஎஸ் ) நவீன முறை கட்டாயம் இடம் பெற வேண்டும் என்று மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டுள்... மேலும் பார்க்க