ஜூலை முதல் பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
வீட்டில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகை திருட்டு
கோவையில் வீட்டின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகையை அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச் சென்றுவிட்டதாக காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
கோவை வெள்ளலூா் குப்புசாமித் தேவா் தெருவைச் சோ்ந்தவா் ஜெகதீஷ். இவரது மனைவி சுசித்ரா (34). இவா் தனது வீட்டு லாக்கரில் 10 பவுன் நகையை வைத்திருந்தாா். அங்கு வைக்கப்பட்டிருந்த அந்த நகையை அடையாளம் தெரியாத மா்ம நபா்கள் திருடிச் சென்று விட்டனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், போத்தனூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடையில் பணம் திருட்டு:
கோவை காட்டூா் பகுதியில் பெட்டிக் கடையில் வைக்கப்பட்டிருந்த பணம் திருடப்பட்டது. காட்டூா் அவிநாசி சாலை பழைய பாலம் பகுதியில் பெட்டிக் கடை வைத்திருப்பவா் அதே பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் (53). இவா் புதன்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டாா். வியாழக்கிழமை காலை வந்து பாா்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, அங்கிருந்த ரூ.20 ஆயிரம் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து காட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.