செய்திகள் :

கொல்கத்தா: "காலில் விழுந்து கெஞ்சியும் விடவில்லை" - பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கல்லூரி மாணவி

post image

கொல்கத்தாவில் கடந்த புதன் கிழமை இரவு தெற்கு கொல்கத்தா சட்டக்கல்லூரியில் படிக்கும் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் கொல்கத்தாவில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மனோஜித் மிஸ்ரா, அகமத், பிரமித் முகோபாத்யா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் மனோஜித் மிஸ்ரா இதே கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர் ஆவார். அவர் படித்து விட்டு செசன்ஸ் கோர்ட்டில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். இக்குற்றம் தொடர்பாக 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாலியல் வன்கொடுமை தொடர்பாகப் பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்துள்ள புகார் இப்போது வெளியாகி இருக்கிறது. அதில், 'நான் தேர்வு தொடர்பாகச் சில வேலைகள் இருந்ததால் மாலை நேரத்தில் கல்லூரிக்குச் சென்று அங்குள்ள மாணவர் யூனியன் அறையில் அமர்ந்திருந்தேன். அங்கு வந்த மனோஜித் மிஸ்ரா என்னிடம் ரொமான்ட்டிக்காக நடந்து கொள்ள முயன்றார்.

மனோஜித்
மனோஜித்

நான் அதனைத் தட்டிக்கழித்தேன். அந்நேரம் என்னையும், மனோஜித்தையும் அறையில் வைத்து இரண்டு பேர் பூட்டினர். மனோஜித் என்னைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். நான் எதிர்த்து போராடினேன்.

அழுதுகொண்டே என்னைப் போக அனுமதிக்கும்படி கெஞ்சினேன். அவரது காலைத் தொட்டு கும்பிட்டு என்னை விட்டுவிடும்படி கூறினேன். ஆனால் அவர் விடவில்லை. என்னைப் பாலியல் வன்கொடுமை செய்யும் நோக்கில் தொடர்ந்து என்னை அணுகிக்கொண்டிருந்தார்.

நான் அவரைப் பிடித்து தள்ளிவிட்டேன். எனக்கு காதலன் இருப்பதாகவும், அவனை மிகவும் காதலிப்பதாகவும் தெரிவித்தேன். அவர் என்னைத் தலையில் தாக்கியதால் எனக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது. உடனே வெளியில் நின்ற இரண்டு பேரை மனோஜித் உள்ளே அழைத்தார். அவர்களிடம் உதவி கேட்டேன். அவர்கள் உதவ மறுத்துவிட்டனர்.

இதனால் எனக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதாகக் கூறி இன்ஹெலர்(inhaler) வாங்கி வரும்படி கேட்டுக்கொண்டேன். அதில் ஒருவர் சென்று வாங்கி வந்து கொடுத்தார். அதன் பிறகுதான் மூச்சுவிடுவதில் சிரமம் குறைந்தது. உடனே அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றேன். ஆனால் அவர்கள் என்னைப் பிடித்து அடித்து உதைத்தனர். கல்லூரி மெயின் கதவை ஏற்கனவே மூடி இருந்தனர்.

இதனால் செக்யூரிட்டி கார்டால் எதுவும் செய்ய முடியவில்லை. அவர்கள் என்னை செக்யூரிட்டி கார்டு அறைக்குள் தூக்கிச்சென்றனர். அங்கிருந்த செக்யூரிட்டி கார்டை அடித்து விரட்டினர். அங்கு என்னை மனோஜித் ஆடைகளைக் கழற்றி பாலியல் வன்கொடுமை செய்ய ஆரம்பித்தான்.

நான் எதிர்த்து போராடியபோது என்னை மிரட்ட ஆரம்பித்தான். எனது காதலனையும், எனது பெற்றோரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டிக்கொண்டே என்னைப் பாலியல் வன்கொடுமை செய்தான்.

இரண்டு பேர் இதனைப் பார்த்துக்கொண்டிருந்தனர். எதிர்ப்பு தெரிவித்த என்னை ஹாக்கி மட்டையால் தலையில் அடித்தனர். இரவு 10 மணி வரை என்னைப் பாலியல் வன்கொடுமை செய்தனர். நடந்த நிகழ்வுகளை வீடியோவும் எடுத்துக்கொண்டனர்.

என்னை இரவு 10.50 மணிக்குத்தான் விடுவித்தனர். இது குறித்து வெளியில் சொன்னால் வீடியோவை இண்டர்நெட்டில் வெளியிட்டுவிடுவோம் என்று மிரட்டி என்னை அனுப்பி வைத்தனர். ஆனால் நான் மனதைத் திடப்படுத்திக்கொண்டு புகார் செய்தேன். சட்டக்கல்லூரி மாணவியான எனக்கு நீதிவேண்டும்'' என்று அம்மாணவி தெரிவித்துள்ளார்.

மூன்று பேரின் மொபைல் போனும் பறிமுதல் செய்யப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கின்றன என்று போலீஸார் தெரிவித்தனர். குற்றவாளி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவருக்குத் தக்க தண்டனை கிடைக்கவேண்டும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

rape case
rape case

மனோஜித் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுடன் இருக்கும் புகைப்படங்களை பா.ஜ.கவினர் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வந்தனர். அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் இச்சம்பவம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குப் பெரிய பின்னடைவாக அமைந்திருக்கிறது.

மூன்று நாட்களுக்குள் இச்சம்பவம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி தேசிய பெண்கள் கமிஷன் மாநில போலீஸைக் கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த ஆண்டு ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இப்போது மீண்டும் கல்லூரி வளாகத்திற்குள் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருப்பது திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.

முக்கிய குற்றவாளி சம்பவம் நடந்த கல்லூரியில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றி வருவதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதோடு மனோஜித் தனது தந்தையிடம் சண்டையிட்டுக்கொண்டு 5 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து வந்து தனியாக வாழ்வதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

தெலங்கானா: வண்டியில் GPS; காதலன், தாய் செய்த உதவி; கணவனைக் கொன்ற மனைவி கைது; விசாரணையில் பகீர் தகவல்

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகில் உள்ள கட்வால் என்ற இடத்தைச் சேர்ந்த தேஜஸ்வருக்குக் கடந்த மே 18ம் தேதிதான் ஐஸ்வர்யா என்பவருடன் திருமணம் நடந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தேஜஸ்வர் திடீரென காணாமல் ... மேலும் பார்க்க

மும்பை: சட்டவிரோதமாக குடியேறும் வங்கதேசத்தினர்; ஒப்பந்தாரர்களுக்கு அரசு எச்சரிக்கை; பின்னணி என்ன?

மகாராஷ்டிராவில் குறிப்பாக மும்பை, புனே போன்ற நகரங்களில் ஏராளமான பங்களாதேஷ் பிரஜைகள் சட்டவிரோதமாகக் குடியேறி கட்டுமானத்தொழில், தொழிற்சாலைகள், உணவகங்கள் போன்றவற்றில் வேலை செய்து வருகின்றனர். அவர்கள் தங்... மேலும் பார்க்க

தேனி: திமுக கவுன்சிலர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு; பின்னணி என்ன?

தேனி மாவட்டம், அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் ராமசாமி. திமுக-வைச் சேர்ந்த தேனி வடக்கு நகர பொறுப்பாளரும், தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்றத் தலைவர் ரேணுபிரியாவ... மேலும் பார்க்க

Ooty: பரிகாரம் எனச் சொல்லி பக்தர் நெற்றியில் கத்திக்குத்து; சாமியார் சிறையில் அடைப்பு; என்ன நடந்தது?

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள தூதூர்மட்டம் மகாலிங்க நகர் பகுதியைச் சேர்ந்தவர் 54 வயதான சிவகுமார். தன்னைச் சாமியார் என அறிவித்துக் கொண்ட சிவக்குமார், வீட்டிற்குள் சாமி சிலை ஒன்றை வைத்து மக்களு... மேலும் பார்க்க

சட்டக் கல்லூரிக்குள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவி - கொல்கத்தாவில் மீண்டும் அதிர்ச்சி

கொல்கத்தாவில் ஏற்கனவே கடந்த ஆண்டு ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் மேற்கு வங்க அரசியல் மட்டுமல்லாது நாடு முழுவ... மேலும் பார்க்க

தெலங்கானா: 'ரூ.500 முதல் ரூ.2000 வரை கட்டணம்' - தங்களுடைய ஆபாச வீடியோக்களை இணையத்தில் விற்ற தம்பதி

தெலங்கானாவில் வீட்டிலிருந்தபடி சட்டவிரோதமாக ஆபாசப் படங்களை உருவாக்கி, அதற்காக பணம் பெற்ற தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐதராபாத்தில் உள்ள ஆம்பர்பேட்டையில் வீட்டிலிருந்தே தம்பதிகள் ஆபாசப் படங்களை... மேலும் பார்க்க