செய்திகள் :

Ooty: பரிகாரம் எனச் சொல்லி பக்தர் நெற்றியில் கத்திக்குத்து; சாமியார் சிறையில் அடைப்பு; என்ன நடந்தது?

post image

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள தூதூர்மட்டம் மகாலிங்க நகர் பகுதியைச் சேர்ந்தவர் 54 வயதான சிவகுமார். தன்னைச் சாமியார் என அறிவித்துக் கொண்ட சிவக்குமார், வீட்டிற்குள் சாமி சிலை ஒன்றை வைத்து மக்களுக்கு அருள்வாக்குச் சொல்லி வந்திருக்கிகிறார்.

அதே பகுதியில் வசித்து வரும் நாகராஜ் என்கிற விவசாயி சிவகுமாருக்குத் தேவையான உதவிகளை அவ்வப்போது செய்து வந்திருக்கிறார்.

சாமியார் சிவக்குமார்
சாமியார் சிவக்குமார்

தனக்கு மதுபானம் வாங்கி வரச்சொல்லி நேற்று முன்தினம் நாகராஜிடம் பணம் கொடுத்து மதுபானத்தைப்‌ பெற்றிருக்கிறார். அப்போது நாகராஜிடம் பேசிய சிவக்குமார், "உனக்கு மனநிலை சரியில்லை என வெளியில் பேசிக்கொள்கிறார்கள். பரிகாரப் பூஜை ஒன்றைச் செய்தால் எல்லாம் சரியாகிவிடும்" எனக் கூறியிருக்கிறார்.

அதை நம்பி நாகராஜ் பூஜைக்குச் சம்மத தெரிவித்த நிலையில், பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்து விட்டு நாகராஜைத் தனது வீட்டிற்கு அழைத்திருக்கிறார் சிவக்குமார்.

நாகராஜ் சென்றதும் பூஜைகள் என்கிற பெயரில் நாகராஜ் மீது விபூதி, குங்குமம் போன்றவற்றைத் தூவியிருக்கிறார். திடீரென கத்தியை எடுத்து நாகராஜின் நெற்றி மற்றும் தலையில் குத்தியிருக்கிறார்.

இதைச் சற்றும் எதிர்பாராத நாகராஜ் வலியைத் தாங்க முடியாமல் ரத்தம் சொட்டச் சொட்ட அலறி துடித்துக் கொண்டு வெளியே ஓடியிருக்கிறார். இதைக் கண்டுப் பதறிய அக்கம்பக்கத்தினர், நாகராஜை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

காயமடைந்த நாகராஜ்
காயமடைந்த நாகராஜ்

காவல்துறைக்குப் புகார் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், சிவக்குமாரை விசாரணை செய்த காவல்துறையினர் அவர்மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

தெலங்கானா: வண்டியில் GPS; காதலன், தாய் செய்த உதவி; கணவனைக் கொன்ற மனைவி கைது; விசாரணையில் பகீர் தகவல்

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகில் உள்ள கட்வால் என்ற இடத்தைச் சேர்ந்த தேஜஸ்வருக்குக் கடந்த மே 18ம் தேதிதான் ஐஸ்வர்யா என்பவருடன் திருமணம் நடந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தேஜஸ்வர் திடீரென காணாமல் ... மேலும் பார்க்க

மும்பை: சட்டவிரோதமாக குடியேறும் வங்கதேசத்தினர்; ஒப்பந்தாரர்களுக்கு அரசு எச்சரிக்கை; பின்னணி என்ன?

மகாராஷ்டிராவில் குறிப்பாக மும்பை, புனே போன்ற நகரங்களில் ஏராளமான பங்களாதேஷ் பிரஜைகள் சட்டவிரோதமாகக் குடியேறி கட்டுமானத்தொழில், தொழிற்சாலைகள், உணவகங்கள் போன்றவற்றில் வேலை செய்து வருகின்றனர். அவர்கள் தங்... மேலும் பார்க்க

தேனி: திமுக கவுன்சிலர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு; பின்னணி என்ன?

தேனி மாவட்டம், அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் ராமசாமி. திமுக-வைச் சேர்ந்த தேனி வடக்கு நகர பொறுப்பாளரும், தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்றத் தலைவர் ரேணுபிரியாவ... மேலும் பார்க்க

கொல்கத்தா: "காலில் விழுந்து கெஞ்சியும் விடவில்லை" - பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கல்லூரி மாணவி

கொல்கத்தாவில் கடந்த புதன் கிழமை இரவு தெற்கு கொல்கத்தா சட்டக்கல்லூரியில் படிக்கும் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இச்சம்பவம் கொல்கத்தாவில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது... மேலும் பார்க்க

சட்டக் கல்லூரிக்குள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவி - கொல்கத்தாவில் மீண்டும் அதிர்ச்சி

கொல்கத்தாவில் ஏற்கனவே கடந்த ஆண்டு ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் மேற்கு வங்க அரசியல் மட்டுமல்லாது நாடு முழுவ... மேலும் பார்க்க

தெலங்கானா: 'ரூ.500 முதல் ரூ.2000 வரை கட்டணம்' - தங்களுடைய ஆபாச வீடியோக்களை இணையத்தில் விற்ற தம்பதி

தெலங்கானாவில் வீட்டிலிருந்தபடி சட்டவிரோதமாக ஆபாசப் படங்களை உருவாக்கி, அதற்காக பணம் பெற்ற தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐதராபாத்தில் உள்ள ஆம்பர்பேட்டையில் வீட்டிலிருந்தே தம்பதிகள் ஆபாசப் படங்களை... மேலும் பார்க்க