செய்திகள் :

இஸ்ரேலின் 'டாடி' யார்? ஈரான் கிண்டல்!

post image

ஈரானுடனான போரில் அமெரிக்காவிடம் இஸ்ரேல் ஓடியதாக ஈரான் அமைச்சர் விமர்சித்துள்ளார்.

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனியை நன்றியற்றவர் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்த நிலையில், டிரம்ப்பின் கூற்றை திரும்பப் பெறுமாறு ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, தனது எக்ஸ் பக்கத்தில் அப்பாஸ் அராக்சி, ``ஓர் ஒப்பந்தத்தை (அணுசக்தி ஆயுத ஒப்பந்தம்) அவர் (டிரம்ப்) உண்மையாக விரும்பினால், ஈரான் மதகுரு கமேனிக்கு எதிராக அவமரியாதையான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத பேச்சை ஒதுக்கி வைக்க வேண்டும். அவரின் லட்சக்கணக்கான ஆதரவாளர்களைக் காயப்படுத்துவதையும் நிறுத்த வேண்டும்.

ஈரானின் ஏவுகணைகளால் தரைமட்டமாக்கப்படுவதை விரும்பாத இஸ்ரேல், `டாடி’யிடம் ஓடுவதைத் தவிர, அவர்களுக்கு வேறு வழியில்லை. அதனை வெளிக்கொண்டு வந்த ஈரானிய மக்கள், மற்ற அச்சுறுத்தல்களையோ அவமதிப்புகளையோ ஏற்றுக் கொள்ள வேண்டாம்.

ஈரானிடம் ஏதேனும் தவறிழைக்கப்பட்டால், அதன் உண்மையான திறன்களை வெளிப்படுத்தவும் தயங்க மாட்டோம். ஆகையால், மரியாதை கொடுக்கப்பட்டு, மரியாதை பெறப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் - ஈரான் போரை நிறுத்தியதாக, டிரம்ப்பை `டாடி’ என்று நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே கேலி செய்திருந்தார். அதனைக் குறிப்பிட்டுத்தான், இஸ்ரேலை அப்பாஸ் விமர்சித்துள்ளார்.

இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரில் உள்நுழைந்த அமெரிக்காவுக்கும் நெற்றிப் பொட்டில் அறைந்ததாக ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி விமர்சித்திருந்தார்.

கமேனியின் கூற்றுக்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கமேனியை படுகொலையில் இருந்து காப்பாற்றியுள்ளேன். ஆனால், அவர் அதற்கான நன்றி இல்லாமல் இருக்கிறார். அணு ஆயுதங்களை தயாரிக்க முயன்றால், ஈரானில் குண்டுகள் வீசவும் உத்தரவிடுவேன் என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க:சிவசேனை எம்.பி.யின் ஓட்டுநருக்கு பரிசாக ரூ. 150 கோடி நிலம்!

பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது தற்கொலைப் படைத் தாக்குதல்! 16 வீரர்கள் கொலை!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், அந்நாட்டிற்குள் செயல்படும் தலிபான் அமைப்பின் கிளைப்பிரிவு நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 16 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கைபர் பக்துன்குவாவின், வ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் திடீர் வெள்ளம்: 3 நகரங்களுக்கு எச்சரிக்கை! அதிகரிக்கும் உயிர் பலிகள்!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி தற்போது 11 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைபர் பக்துன்குவா மாகாணத்தில் பெய்த கனமழையால், அங்குள்ள ஸ்வாட் ஆற்றில் வெள... மேலும் பார்க்க

இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல்! ஈரான் அல்ல; யேமன்!

இஸ்ரேல் - ஈரான் போரினைத் தொடர்ந்து, தற்போது யேமன் நாடும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலின் தாக்குதலுக்கு, யேமன் நாட்டில் உள்ள (ஈர... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஷெல் தாக்குதல்! 5 குழந்தைகள் உள்பட 14 பேர் படுகாயம்!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், நடைபெற்ற மோர்ட்டார் ஷெல் தாக்குதலில், 5 குழந்தைகள் உள்பட 14 பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குர்ராம் மாவட்டத்திலுள்ள காச்சி கமார் கிராமத்தில... மேலும் பார்க்க

கொல்லப்பட்ட ஈரான் தளபதிகள், விஞ்ஞானிகளின் இறுதிச் சடங்கு! சாலைகளில் திரண்ட மக்கள்!

இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் முக்கிய தளபதிகள் மற்றும் அந்நாட்டின் விஞ்ஞானிகளின் இறுதிச் சடங்கு இன்று (ஜூன் 28) நடைபெறுவதால், லட்சக்கணக்கான மக்கள் தெஹ்ரானின் சாலைகளில் திரண்டுள்ளனர். "ஆ... மேலும் பார்க்க

நடுவழியில் துர்நாற்றம், தொழில்நுட்பக் கோளாறு! சீன விமானம் அவசர தரையிறக்கம்!

சீனாவில் வானில் பறந்து கொண்டிருந்த உள்நாட்டு விமானம் ஒன்று நடுவழியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால், அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. சீனாவின், ஷாண்டாங் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான உள்நாட்டு வி... மேலும் பார்க்க