செய்திகள் :

ராமதாஸ் குழந்தையைபோல மாறிவிட்டார்: அன்புமணி

post image

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தையைபோல ராமதாஸ் மாறிவிட்டார் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

சென்னையில் பாட்டாளி சமூக ஊடகப் பேரவையின் கலந்தாய்வுக் கூட்டம், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று(ஜூன் 28) பனையூரில் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:

”பாமகவில் முழு அதிகாரம் எனக்குத்தான்; 99 சதவிகிதம் கட்சியினர் நம்மிடம் உள்ளனர். காலையில் இலந்தைப் பழம் விற்பவரை கூட்டிவந்து பொறுப்பு கொடுக்கப்படுகிறது, போடுங்கள் என்றால் கையெழுத்து போடுகிறார். இதிலிருந்து ராமதாஸின் சிந்தனைப்படி இது நடைபெறவில்லை என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தையைபோல ராமதாஸ் மாறிவிட்டார். அவரை யாரும் விமர்சிக்க வேண்டாம்.

தினமும் நிம்மதி இல்லாமல் தூக்கம் இல்லாமல் உள்ளேன், யாராவது பெற்ற மகனையும் மருமகளையும் பொதுவெளியில் விமர்சிப்பார்களா? அவர் ராமதாஸாக இருந்திருந்தால் அப்படி பேசி இருப்பாரா?” என்றார்.

மேலும், அவர் பேசுகையில், “என்னுடைய தந்தை ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் 2024-ல் கூட்டணி வைத்தேன்; அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தால், நான் ஏன் மறுக்கப்போகிறேன்.

ராமதாஸ் மீது வன்னி அரசு, ரவிக்குமார், சிந்தனைச் செல்வனுக்கு ஏன் திடீர் அன்பு ஏற்பட்டுள்ளது. எப்போதாவது ராமதாஸை திருமாவளவன் புகழ்ந்து பேசி இருப்பாரா? இப்போது புகழ்வது ஏன்? செல்வப்பெருந்தகை திடீரென ராமதாஸை சந்திப்பது ஏன்?

ஐயா ஐயாவாக(ராமதாஸ்) கடந்த 5 ஆண்டுகளாக இல்லை, 3 பேர் கட்டுப்பாட்டில் உள்ளார்” என்றார்.

Patali Makkal Katchi leader Anbumani has said that Ramadoss has become like a child due to his advanced age.

இதையும் படிக்க: உள்ளாட்சி அமைப்புகளின் நிதி அதிகார வரம்பு உயர்வு: தமிழக அரசு

வெள்ளத்தில் சிக்கிய யானை கரையைக் கடக்கும் காட்சி: வைரல் விடியோ!

வெள்ளத்தில் சிக்கிய யானையானது கரையைக் கடக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி பலரால் பகிரப்பட்டு வருகிறது.கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரள மாநிலத்திற்குள்பட்ட பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.இத... மேலும் பார்க்க

நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்: சீமான்

நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதுரையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நடிகர்கள் ஸ்ரீக... மேலும் பார்க்க

அருப்புக்கோட்டை விநாயகர் கோயிலுக்கு இயந்திர யானை வழங்கிய நடிகை திரிஷா !

அருப்புக்கோட்டையில் உள்ள விநாயகர் கோயிலுக்கு நடிகை திரிஷா இயந்திர யானையை வழங்கியுள்ளார். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் அஷ்டலிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு நடிகை த... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று(ஜூன் 28) ஒருசில இடங்களிலும், ப... மேலும் பார்க்க

கடனை செலுத்த வங்கி அதிகாரிகள் அழுத்தம்: பால் நிறுவன இயக்குநர் தற்கொலை!

கடனை செலுத்த தனியார் வங்கி அதிகாரிகளின் அழுத்தத்தால் தனியார் பால் நிர்வாக இயக்குநர் ஜே.ராஜபாண்டி தற்கொலை கொண்ட நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்... மேலும் பார்க்க

வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு!

அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி மறைவையடுத்து வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருந்த அமுல் கந்தசாமி, உடல்நலக் ... மேலும் பார்க்க