செய்திகள் :

கடனை செலுத்த வங்கி அதிகாரிகள் அழுத்தம்: பால் நிறுவன இயக்குநர் தற்கொலை!

post image

கடனை செலுத்த தனியார் வங்கி அதிகாரிகளின் அழுத்தத்தால் தனியார் பால் நிர்வாக இயக்குநர் ஜே.ராஜபாண்டி தற்கொலை கொண்ட நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனர் மற்றும் மாநிலத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

மதுரை மாவட்டம், மேலூரில் உள்ள தனியார் பால் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜே.ராஜபாண்டி தனியார் வங்கியில் பெற்றிருந்த கடனை செலுத்துவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக வங்கி அதிகாரிகள் அளித்த நெருக்கடியால் நேற்று (ஜூன் 27) மதுரையில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு கடும் அதிர்ச்சியளிக்கிறது.

கரோனா நோய்த் தொற்று காலத்திற்குப் பின்னர் பால் வணிகத்தில் ஏற்பட்ட மாற்றங்களாலும், அதன் பிறகு தொழிலில் ஏற்பட்ட சரிவாலும் தனியார் வங்கியில் பெற்றிருந்த ரூ. 3 கோடி கடனை கடந்த 7 மாதமாக திரும்ப செலுத்துவதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதால் வங்கி அதிகாரிகள் நெருக்கடி கொடுக்கவே அவர் தரப்பிலிருந்து கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டுள்ளது.

ஆனால், வங்கி அதிகாரிகள் அதற்கு ஒப்புக் கொள்ளாமல் ஏழு மாத தவணையை உடனடியாக மொத்தமாக செலுத்த வேண்டும் என கடும் நெருக்கடி கொடுத்து கறாராக கூறியதால் வேறு வழியின்றி ஏழு மாத தவணைக்கான தொகை சுமார் ரூ. 35 லட்சத்தை தயார் செய்து கொண்டு நேற்றைய நாள் வங்கியில் வரைவோலை (DD) எடுக்க சென்றிருந்த சமயத்தில் தனியார் வங்கி அதிகாரிகள் தனியார் பால் நிறுவனத்திற்கு வந்து பணி முடிந்து பூட்டப்பட்டிருந்த நிறுவனத்தின் பூட்டினை உடைத்து சீல் வைத்து சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நிறுவனத்தின் தரப்பிலிருந்து வங்கிக்கு சென்று நாங்கள்தான் ஏழு மாத தவணையை மொத்தமாக செலுத்த டிடி எடுக்கத்தானே சென்றிருந்தோம். அதற்குள் இப்படி செய்து விட்டீர்களே..? என கேட்டதற்கு கடனை அசலும், வட்டியும் சேர்த்து மொத்தமாக செலுத்தியாக வேண்டும் என நிர்பந்தம் செய்துள்ளதோடு, அப்போதுதான் சீலினை அகற்ற முடியும் என வங்கி அதிகாரிகள் ஆணவத்துடன் கூறியுள்ளனர். இதனால் மனமுடைந்து, மன உளைச்சலுக்கு ஆளான ராஜபாண்டி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

எனவே தொழில் நலிவடைந்திருந்த சமயத்தில் கொடுத்த கடனை திரும்ப வசூலிக்க கடும் நெருக்கடி கொடுத்து, மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கி தனியார் பால் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜபாண்டியின் தற்கொலைக்கு காரணமான தனியார் வங்கி அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிந்து அவர்களை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசையும், காவல்துறையையும், மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களையும் மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநரையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாக அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

The Tamil Nadu dairy Agents Workers Welfare Association has urged action against private dairy managing director J. Rajapandi, who committed suicide due to pressure from private bank officials to repay a loan.

இதையும் படிக்க: வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு!

செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

உஸ்செஸ் கோப்பையை வென்ற பிரக்ஞானந்தாவிற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், UzChess மாஸ்டர்ஸ் கோப்பை 2025-இல் வென்றதற்கும், கிளாசிக்கல் வ... மேலும் பார்க்க

ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன்: முதல்வர் ஸ்டாலின்

ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திமுக மாவட்டச் செயலர்கள் – தொகுதி பார்வையாளர்கள் – சார்பு அணிச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ... மேலும் பார்க்க

வெள்ளத்தில் சிக்கிய யானை கரையைக் கடக்கும் காட்சி: வைரல் விடியோ!

வெள்ளத்தில் சிக்கிய யானையானது கரையைக் கடக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி பலரால் பகிரப்பட்டு வருகிறது.கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரள மாநிலத்திற்குள்பட்ட பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.இத... மேலும் பார்க்க

நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்: சீமான்

நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதுரையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நடிகர்கள் ஸ்ரீக... மேலும் பார்க்க

அருப்புக்கோட்டை விநாயகர் கோயிலுக்கு இயந்திர யானை வழங்கிய நடிகை திரிஷா !

அருப்புக்கோட்டையில் உள்ள விநாயகர் கோயிலுக்கு நடிகை திரிஷா இயந்திர யானையை வழங்கியுள்ளார். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் அஷ்டலிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு நடிகை த... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று(ஜூன் 28) ஒருசில இடங்களிலும், ப... மேலும் பார்க்க