செய்திகள் :

செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

post image

உஸ்செஸ் கோப்பையை வென்ற பிரக்ஞானந்தாவிற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், UzChess மாஸ்டர்ஸ் கோப்பை 2025-இல் வென்றதற்கும், கிளாசிக்கல் வீரர் தரவரிசையில் இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்ததற்கும், லைவ் ரேட்டிங் மதிப்பீட்டில் உலகின் நம்பர் 4 வீரராக உயர்ந்ததற்கும் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள்.

வெற்றிப் பாதையில் தொடரும் வாகையரான அவரது கரங்களில் செக்மேட் செய்யமுடியாத எதிர்காலம் உள்ளது! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

உஸ்செஸ் கோப்பை மாஸ்டர்ஸ் 2025 தொடரின் இறுதிச்சுற்று நேற்று நடைபெற்றது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 19 வயதான கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக்கை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பெக்கை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.

summary

CM Stalin congratulates Praggnanandhaa on winning the UzChess Trophy

ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன்: முதல்வர் ஸ்டாலின்

ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன்: முதல்வர் ஸ்டாலின்

ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திமுக மாவட்டச் செயலர்கள் – தொகுதி பார்வையாளர்கள் – சார்பு அணிச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ... மேலும் பார்க்க

வெள்ளத்தில் சிக்கிய யானை கரையைக் கடக்கும் காட்சி: வைரல் விடியோ!

வெள்ளத்தில் சிக்கிய யானையானது கரையைக் கடக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி பலரால் பகிரப்பட்டு வருகிறது.கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரள மாநிலத்திற்குள்பட்ட பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.இத... மேலும் பார்க்க

நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்: சீமான்

நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதுரையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நடிகர்கள் ஸ்ரீக... மேலும் பார்க்க

அருப்புக்கோட்டை விநாயகர் கோயிலுக்கு இயந்திர யானை வழங்கிய நடிகை திரிஷா !

அருப்புக்கோட்டையில் உள்ள விநாயகர் கோயிலுக்கு நடிகை திரிஷா இயந்திர யானையை வழங்கியுள்ளார். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் அஷ்டலிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு நடிகை த... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று(ஜூன் 28) ஒருசில இடங்களிலும், ப... மேலும் பார்க்க

கடனை செலுத்த வங்கி அதிகாரிகள் அழுத்தம்: பால் நிறுவன இயக்குநர் தற்கொலை!

கடனை செலுத்த தனியார் வங்கி அதிகாரிகளின் அழுத்தத்தால் தனியார் பால் நிர்வாக இயக்குநர் ஜே.ராஜபாண்டி தற்கொலை கொண்ட நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்... மேலும் பார்க்க