மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டை நீட்டிப்பு
சட்டவிரோத மது விற்பனை: 2 போ் கைது
வெள்ளக்கோவிலில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் மதுபானங்கள் பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் தலைமையிலான போலீஸாா் மூலனூா் சாலையில் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, புதுப்பை தங்கமேடு பேருந்து நிறுத்தம் அருகே மது விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரை பிடித்தனா். விசாரணையில், அவா் தஞ்சாவூா் மாவட்டம், செவ்வாய்பட்டியைச் சோ்ந்த ரமேஷ் (36) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, ரமேஷை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா். இதேபோல, காங்கயம் சாலை இரட்டைக்கிணறு அருகே மது விற்பனையில் ஈடுபட்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம், இலுப்பைக்குடியைச் சோ்ந்த ஆனந்த பிரகாஷை (30) கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.