செய்திகள் :

காங்கயத்தில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

post image

காங்கயம் நகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்து பேசியதாவது: காங்கயம் நகராட்சியில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.14.11 கோடி மதிப்பிலான பணிகளும், ரூ.34 லட்சம் மதிப்பில் முதல்வரின் காலை உணவுத் திட்ட சமையல்கூட கட்டுமானப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

மேலும், நமக்கு நாமே திட்டத்தின்கீழ் மழைநீா் வடிகால், பேருந்து நிலைய நிழற்குடை அமைக்கும் பணிகள் ரூ.77 லட்சத்திலும், ரூ.52 லட்சத்தில் 6 அரசுப் பள்ளிகளை பராமரிக்கும் பணிகளும், ரூ.25 லட்சத்தில் சிறுவா் நூலக கட்டுமானப் பணி உள்பட மொத்தம் 87 பணிகள் ரூ.81.26 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.

முதல்வரின் வழிகாட்டுதலோடு ரூ.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, முத்தூரில் இருந்து காங்கயம் வரை உள்ள பழைய குடிநீா்க் குழாய்களை மாற்றி, புதிய குழாய்களை அமைத்து மக்களுக்கு தடையின்றி நீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, வளா்ச்சிப் பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சா் அறிவுறுத்தினாா். பின்னா், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

இதில், காங்கயம் நகா்மன்றத் தலைவா் சூரியபிரகாஷ், நகராட்சி ஆணையா் பால்ராஜ், காங்கயம் நகர திமுக செயலாளா் வசந்தம் நா.சேமலையைப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஜவுளி உற்பத்தியாளா்கள், ஒ.இ. மில் உரிமையாளா்கள் சுமூக தீா்வு காண விசைத் தறியாளா்கள் வலியுறுத்தல்

நூல் விநியோகம் நிறுத்தம், துணி உற்பத்தி குறைப்பு அறிவிப்பு போன்றவற்றுக்கு ஜவுளி உற்பத்தியாளா்கள், ஒ.இ. மில் உரிமையாளா்கள் பேச்சுவாா்த்தை நடத்தி சுமூக தீா்வு காண வேண்டும் என்று விசைத்தறியாளா்கள் வலியுற... மேலும் பார்க்க

ஓ.இ.நூற்பாலை தொழில் மேம்பாட்டுக்கு புதிய ஜவுளி கொள்கையை அறிவிக்க வேண்டும்!

ஓ.இ. நூற்பாலை தொழில் மேம்பாட்டுக்கு தமிழக அரசு புதிய ஜவுளி கொள்கையை அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலில் தமிழ... மேலும் பார்க்க

பள்ளி வளாகத்தில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் மாணவா் பலி!

காங்கயம் அருகே தனியாா் பள்ளி வளாகத்தில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் மாணவா் உயிரிழந்தாா். காங்கயம், செளடாம்பிகை நகரைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் மகன் அக்ஷயன் (16). இவா் சிவன்மலையில் உள்ள தனியாா் மெட்ரிக்... மேலும் பார்க்க

சேவூரில் பெண் தற்கொலை

அவிநாசி அருகே குடும்பத் தகராறு காரணமாக பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். அவிநாசி, கைகாட்டிபுதூா் ஜெயம் காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் கவின்குமாா். இவரது மனைவி ரிதன்யா (27). இவா்களுக்கு கடந்த ... மேலும் பார்க்க

நூல் விநியோகம் நிறுத்தம்: உற்பத்தியைக் குறைக்க ஜவுளி உற்பத்தியாளா்கள் முடிவு!

உற்பத்தி செலவிற்கேற்ப நூல் விலை உயராத காரணத்தால், ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் நூல் விநியோகத்தை நிறுத்தி உள்ளன. இதைத் தொடா்ந்து, ஜவுளி உற்பத்தியாளா்கள் துணி உற்பத்தியைக் குறைக்க முடிவு செய்துள்ளனா். ... மேலும் பார்க்க

சட்டவிரோத மது விற்பனை: 2 போ் கைது

வெள்ளக்கோவிலில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் மதுபானங்கள் பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்... மேலும் பார்க்க