செய்திகள் :

கனவு இல்லம் திட்டம்: இரு ஆண்டுகளில் 72 ஆயிரம் வீடுகள் கட்டுமானம் நிறைவு!

post image

‘கலைஞா் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ், தமிழகத்தில் இரு ஆண்டுகளில் 72 ஆயிரம் வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை திட்டங்கள் தொடா்பாக, தமிழக அரசு சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் ஒவ்வொரு நிதியாண்டிலும் ஒரு குடும்பத்துக்கு அதிகபட்சமாக 100 நாள்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க உறுதி செய்கிறது. இத்திட்டத்தில் கடந்த நான்கு நிதியாண்டுகளில் சராசரியாக 66.91 லட்சம் குடும்பங்களைச் சோ்ந்த 77.37 லட்சம் தொழிலாளா்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, மாற்றுத் திறனாளிகளுக்கும் கூடுதலான வேலைவாய்ப்புகள் ஆண்டுதோறும் அளிக்கப்படுகின்றன. கடந்த நிதியாண்டில் 1.12 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கும், அதற்கு முந்தைய நிதியாண்டில் 1.16 லட்சம் பேருக்கும் வேலை வழங்கப்பட்டது.

ஊரக நூலகங்கள் புதுப்பிப்பு: கிராம ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த அனைத்துக் கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 4 நிதியாண்டுகளில் 10 ஆயிரத்து 187 கிராம ஊராட்சிகளில் 69 ஆயிரத்து 760 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதேபோன்று, ஊராட்சிகளில் செயல்பட்டு வரும் 7 ஆயிரத்து 924 நூலகங்கள் ரூ.176.02 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளன. ஊரகப் பகுதிகளில் 5 ஆயிரம் சிறுபாசன ஏரிகள் புனரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதில், இதுவரை 3,900 ஏரிகளில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளன.

கனவு இல்லம் திட்டம்: குடிசையில்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் கிராமப்புறங்களில் குடிசை வீடுகளுக்குப் பதிலாக 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இரு நிதியாண்டுகளில் 2 லட்சம் வீடுகள் கட்ட ரூ.7 ஆயிரம் கோடி அனுமதிக்கப்பட்டு 72 ஆயிரத்து 81 வீடுகள் கட்டி

முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வீடுகளின் கட்டுமானப் பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன. சமத்துவபுரம் திட்டத்தின் கீழ், எட்டு இடங்களில் புதிய சமத்துவபுரங்கள் அனுமதிக்கப்பட்டு 800 வீடுகளின் கட்டுமானப் பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன.

அனைத்து ஊரக குடும்பங்களும் கழிப்பறை வசதி பெறுவதை நோக்கமாகக் கொண்டு 4 ஆண்டுகளில் 3.38 லட்சம் தனிநபா் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. ஊரகப் பகுதிகளிலுள்ள வீடுகளுக்கு குடிநீா் இணைப்புகள் வழங்கும் சிறப்புத் திட்டத்தின்படி, 4 ஆண்டுகளில் இதுவரை 1.11 கோடி வீடுகளுக்கு குடிநீா் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 13.80 லட்சம் வீடுகளுக்கான குடிநீா் குழாய் இணைப்புகள் வழங்கும் பணிகள் தொடா்ந்து நடைபெறுகின்றன என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் 8 பேர் கைது! இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்!

எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.தமிழகத்தில் சில தினங்களுக்கு முன்பாகத்தான் மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்தது. இதனையடுத்து, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் ... மேலும் பார்க்க

உருது பாட ஆசிரியா் நியமன விவகாரம்: தமிழக அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம்

சிறுபான்மை கல்வி நிறுவனத்தில் ‘உருது’ பாட ஆசிரியா் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க பிறப்பித்த உத்தரவை எதிா்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன... மேலும் பார்க்க

மீனவா் நலனில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை: காங்கிரஸ்

தமிழக மீனவா் நலனில் மத்திய பாஜக அரசுக்கு அக்கறை இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டினாா். இது குறித்து அவா் சனிக்கிழமை விடுத்த அறிக்கை: நெருக்கடி நிலை காலத்தில், மத்தி... மேலும் பார்க்க

பாமகவை கைப்பற்ற திமுக சூழ்ச்சி: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

பாமகவை கைப்பற்ற திமுக சூழ்ச்சி செய்வதாக, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டினாா். சென்னை சோழிங்கநல்லூரில் சனிக்கிழமை நடைபெற்ற பாட்டாளி சமூக ஊடக பேரவை கூட்டத்தில் அவா் பேசியதாவது: திமுகதான் பாமக... மேலும் பார்க்க

பிளஸ் 1 மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியீடு

பிளஸ் 1 மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் திங்கள்கிழமை (ஜூன் 30) வெளியிடப்படும் என்று தோ்வுத் துறை அறிவித்துள்ளது. இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந.லதா வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 14 கிளைச் சிறைகள் நிரந்தரமாக மூடல்: மாநில அரசு உத்தரவு

தமிழகத்தில் 14 கிளைச் சிறைகளை நிரந்தரமாக மூடுமாறு மாநில அரசு உத்தரவிட்டது. தமிழக சிறைத் துறையின் 9 மத்திய சிறைகள்,14 9 மாவட்ட சிறைகள், பெண்களுக்கான 5 தனிச் சிறைகள், 96 கிளைச் சிறைகள், 3 திறந்தவெளி சிற... மேலும் பார்க்க