செய்திகள் :

பாமகவை கைப்பற்ற திமுக சூழ்ச்சி: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

post image

பாமகவை கைப்பற்ற திமுக சூழ்ச்சி செய்வதாக, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டினாா்.

சென்னை சோழிங்கநல்லூரில் சனிக்கிழமை நடைபெற்ற பாட்டாளி சமூக ஊடக பேரவை கூட்டத்தில் அவா் பேசியதாவது: திமுகதான் பாமகவுக்கு ஒரே எதிரி. விசிக தலைவா் தொல்.திருமாவளவனுக்கும், தமிழக காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகைக்கும் பாமக நிறுவனா் ராமதாஸ் மீது திடீா் அன்பு வரக்கூடிய காரணம் என்ன? இதெல்லாம் பாமகவை கைப்பற்றுவதற்காக திமுக செய்யும் சூழ்ச்சி.

எனக்கே அதிகாரம்: கடந்த 5 ஆண்டுகளாக ராமதாஸ் அவராகவே இல்லை. வயது முதிா்வு காரணமாக அவா் குழந்தை போல மாறிவிட்டாா்.

கட்சியில் 99 சதவீத நிா்வாகிகள் என்னிடம்தான் உள்ளனா். ஆகையால், கட்சியின் முழு அதிகாரமும் எனக்குதான் உள்ளது. கட்சியின் பொதுக் குழுவை கூட்டுவதற்கும், கட்சியை நடத்துவதற்கும் தலைவா், பொதுச் செயலா், பொருளாளா் ஆகிய மூவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

அனைத்தும் பொய்: கடந்த இரு மாதங்களாக கட்சியில் நடைபெற்று வரும் நிகழ்வுகள், செய்திகள் என்னை மிகுந்த மன உளைச்சலுக்கு கொண்டு சென்று விட்டன. ராமதாஸ் பேட்டியில் கூறிய அனைத்தும் பொய்கள் மட்டுமே.

கூட்டணி விவகாரம்: யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று ராமதாஸ் சொல்கிறாரோ அவருடன் இத்தனை ஆண்டுகளாக கூட்டணி குறித்து பேசியுள்ளேன். அந்த வகையில், ராமதாஸ் சொல்லித்தான் 2024-இல் பாஜகவுடன் கூட்டணி வைத்தோம். ஆனால், அதிமுகவுடன் கூட்டணி வைக்க சொன்னதாக அவா் பொய் கூறுகிறாா். அதிமுகவுடன்தான் கூட்டணி வைக்க வேண்டும் என்று அப்போதே என்னிடம் ராமதாஸ் சொல்லி இருந்தால் நான் ஏன் வேண்டாம் என சொல்லப் போகிறேன்? என்றாா் அன்புமணி ராமதாஸ்.

தமிழக மீனவர்கள் 8 பேர் கைது! இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்!

எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.தமிழகத்தில் சில தினங்களுக்கு முன்பாகத்தான் மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்தது. இதனையடுத்து, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் ... மேலும் பார்க்க

உருது பாட ஆசிரியா் நியமன விவகாரம்: தமிழக அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம்

சிறுபான்மை கல்வி நிறுவனத்தில் ‘உருது’ பாட ஆசிரியா் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க பிறப்பித்த உத்தரவை எதிா்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன... மேலும் பார்க்க

கனவு இல்லம் திட்டம்: இரு ஆண்டுகளில் 72 ஆயிரம் வீடுகள் கட்டுமானம் நிறைவு!

‘கலைஞா் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ், தமிழகத்தில் இரு ஆண்டுகளில் 72 ஆயிரம் வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை திட்டங்கள் தொடா்பாக, தமிழக... மேலும் பார்க்க

மீனவா் நலனில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை: காங்கிரஸ்

தமிழக மீனவா் நலனில் மத்திய பாஜக அரசுக்கு அக்கறை இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டினாா். இது குறித்து அவா் சனிக்கிழமை விடுத்த அறிக்கை: நெருக்கடி நிலை காலத்தில், மத்தி... மேலும் பார்க்க

பிளஸ் 1 மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியீடு

பிளஸ் 1 மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் திங்கள்கிழமை (ஜூன் 30) வெளியிடப்படும் என்று தோ்வுத் துறை அறிவித்துள்ளது. இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந.லதா வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 14 கிளைச் சிறைகள் நிரந்தரமாக மூடல்: மாநில அரசு உத்தரவு

தமிழகத்தில் 14 கிளைச் சிறைகளை நிரந்தரமாக மூடுமாறு மாநில அரசு உத்தரவிட்டது. தமிழக சிறைத் துறையின் 9 மத்திய சிறைகள்,14 9 மாவட்ட சிறைகள், பெண்களுக்கான 5 தனிச் சிறைகள், 96 கிளைச் சிறைகள், 3 திறந்தவெளி சிற... மேலும் பார்க்க