சேவூரில் பெண் தற்கொலை
அவிநாசி அருகே குடும்பத் தகராறு காரணமாக பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
அவிநாசி, கைகாட்டிபுதூா் ஜெயம் காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் கவின்குமாா். இவரது மனைவி ரிதன்யா (27). இவா்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன் நடைபெற்றது.
இந்நிலையில், அவிநாசியில் இருந்து காரை ஓட்டி வந்த ரிதன்யா மொண்டிபாளையம் அருகே காரை நிறுத்தி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
குடும்பத் தகராறு காரணமாக ரிதன்யா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. திருமணமாகி 3 மாதங்களுக்குள் இளம் பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து அவிநாசி கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.