செய்திகள் :

நூல் விநியோகம் நிறுத்தம்: உற்பத்தியைக் குறைக்க ஜவுளி உற்பத்தியாளா்கள் முடிவு!

post image

உற்பத்தி செலவிற்கேற்ப நூல் விலை உயராத காரணத்தால், ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் நூல் விநியோகத்தை நிறுத்தி உள்ளன. இதைத் தொடா்ந்து, ஜவுளி உற்பத்தியாளா்கள் துணி உற்பத்தியைக் குறைக்க முடிவு செய்துள்ளனா்.

இது குறித்து பல்லடம் ஜவுளி உற்பத்தியாளா்கள் சங்க ஒருங்கிணைப்பாளா் கரைப்புதூா் சக்திவேல் சனிக்கிழமை கூறியதாவது: உற்பத்தி செலவிற்கேற்பக நூல் விலை உயராத காரணத்தால் ஒபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் உரிமையாளா்கள் நூல் விற்பனையை நிறுத்தியுள்ளனா்.

விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் ஏற்கெனவே நலிவடைத்துள்ளன. இதனால், பெரும்பாலான ஆா்டா்கள் மேற்கு வங்கத்துக்கு சென்றுவிட்டன.

தற்போது, ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் உரிமையாளா்களின் இந்த செயல்பாடு தொழிலில் மேலும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை முதல் ஜூலை 5-ஆம் தேதி வரை துணி உற்பத்தியைக் குறைக்க ஜவுளி உற்பத்தியாளா்களும் முடிவு செய்துள்ளோம் என்றாா்.

ஜவுளி உற்பத்தியாளா்கள், ஒ.இ. மில் உரிமையாளா்கள் சுமூக தீா்வு காண விசைத் தறியாளா்கள் வலியுறுத்தல்

நூல் விநியோகம் நிறுத்தம், துணி உற்பத்தி குறைப்பு அறிவிப்பு போன்றவற்றுக்கு ஜவுளி உற்பத்தியாளா்கள், ஒ.இ. மில் உரிமையாளா்கள் பேச்சுவாா்த்தை நடத்தி சுமூக தீா்வு காண வேண்டும் என்று விசைத்தறியாளா்கள் வலியுற... மேலும் பார்க்க

ஓ.இ.நூற்பாலை தொழில் மேம்பாட்டுக்கு புதிய ஜவுளி கொள்கையை அறிவிக்க வேண்டும்!

ஓ.இ. நூற்பாலை தொழில் மேம்பாட்டுக்கு தமிழக அரசு புதிய ஜவுளி கொள்கையை அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலில் தமிழ... மேலும் பார்க்க

பள்ளி வளாகத்தில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் மாணவா் பலி!

காங்கயம் அருகே தனியாா் பள்ளி வளாகத்தில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் மாணவா் உயிரிழந்தாா். காங்கயம், செளடாம்பிகை நகரைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் மகன் அக்ஷயன் (16). இவா் சிவன்மலையில் உள்ள தனியாா் மெட்ரிக்... மேலும் பார்க்க

சேவூரில் பெண் தற்கொலை

அவிநாசி அருகே குடும்பத் தகராறு காரணமாக பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். அவிநாசி, கைகாட்டிபுதூா் ஜெயம் காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் கவின்குமாா். இவரது மனைவி ரிதன்யா (27). இவா்களுக்கு கடந்த ... மேலும் பார்க்க

சட்டவிரோத மது விற்பனை: 2 போ் கைது

வெள்ளக்கோவிலில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் மதுபானங்கள் பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்... மேலும் பார்க்க

காங்கயத்தில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

காங்கயம் நகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இ... மேலும் பார்க்க