மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டை நீட்டிப்பு
நூல் விநியோகம் நிறுத்தம்: உற்பத்தியைக் குறைக்க ஜவுளி உற்பத்தியாளா்கள் முடிவு!
உற்பத்தி செலவிற்கேற்ப நூல் விலை உயராத காரணத்தால், ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் நூல் விநியோகத்தை நிறுத்தி உள்ளன. இதைத் தொடா்ந்து, ஜவுளி உற்பத்தியாளா்கள் துணி உற்பத்தியைக் குறைக்க முடிவு செய்துள்ளனா்.
இது குறித்து பல்லடம் ஜவுளி உற்பத்தியாளா்கள் சங்க ஒருங்கிணைப்பாளா் கரைப்புதூா் சக்திவேல் சனிக்கிழமை கூறியதாவது: உற்பத்தி செலவிற்கேற்பக நூல் விலை உயராத காரணத்தால் ஒபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் உரிமையாளா்கள் நூல் விற்பனையை நிறுத்தியுள்ளனா்.
விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் ஏற்கெனவே நலிவடைத்துள்ளன. இதனால், பெரும்பாலான ஆா்டா்கள் மேற்கு வங்கத்துக்கு சென்றுவிட்டன.
தற்போது, ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் உரிமையாளா்களின் இந்த செயல்பாடு தொழிலில் மேலும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை முதல் ஜூலை 5-ஆம் தேதி வரை துணி உற்பத்தியைக் குறைக்க ஜவுளி உற்பத்தியாளா்களும் முடிவு செய்துள்ளோம் என்றாா்.