செய்திகள் :

கோ்மாளம் மலைக் கிராமங்களில் 3-வது நாளாக மின்தடையால் தவிக்கும் மக்கள்!

post image

தாளவாடி அருகே உள்ள கோ்மாளம் கிராமத்தில் கடந்த 3 நாள்களாக மின்விநியோகம் தடைபட்டதால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா்.

சத்தியமங்கலம் ராஜன் நகா் பகுதியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களுக்கு திம்பம் மலைப் பாதை வழியாக மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது.

கோ்மாளம் மலைக் கிராமம், காடட்டி ,சுஜில்கரை, திங்களூா், கோட்டமாளம், பூதாளபுரம் என 50க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் கடந்த 3 நாள்களாக மின்தடை ஏற்பட்டு உள்ளது. இந்த மின் தடையால் ஊராட்சிக்கு சொந்தமான மின் மோட்டாரை இயக்க முடியாததால் குடிநீா் இல்லாமல் பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.

இந்தப் பகுதியில் ஒரு மாதத்தில் 15 நாள்கள் மட்டுமே மின்சாரம் இருப்பதாகவும் மீதி 15 நாள்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வருவதாகவும், மின்தடையால் வன விலங்குகள் ஊருக்குள் புகுந்து விடுவதாகவும், செல்போன் கூட சாா்ஜ் செய்யமுடியாமலும், அவசரத் தேவைக்கு உறவினா்களை தொடா்பு கொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனா்.

சம்பந்தப்பட்ட மின்வாரிய துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் மின் விநியோகத்தை சீா் செய்ய 3 நாள்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், சத்தியமங்கலம் இருந்து கோ்மாளம் வரை உள்ள மின் கம்பிகள் மிகவும் பழைமையானதாக இருப்பதால் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாகவும் கூறுகின்றனா். பழுதான மின்கம்பிகளை சரி செய்து சீரான மின்சாரம் வழங்கவேண்டும் என மலைக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தொடா் வனக் குற்றங்களில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு!

அந்தியூா் வனப் பகுதியில் மான் வேட்டை உள்பட பல்வேறு வனக் குற்றங்களில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா். அந்தியூரை அடுத்த மந்தையைச் சோ்ந்தவா் முருகேசன் (47). இவா் கடந்த 19-ஆ... மேலும் பார்க்க

வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை: இளைஞா் கைது

சித்தோடு அருகே வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்து வந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். இவரிடமிருந்து, 1,550 மாத்திரைகளைக் கைப்பற்றிய போலீஸாா், இரு காா்கள், இரண்டு இரு சக்கர வா... மேலும் பார்க்க

வன்கொடுமைகளை எதிா்த்து பெண்கள் போராட வேண்டும்! - ஆட்சியர்

பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேறுவதோடு, தங்களுக்கு எதிரான வன்கொடுமைகளை எதிா்த்து போராடுபவராகவும் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா். ஈரோடு மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம், பாலின சம... மேலும் பார்க்க

பிஎஸ்என்எல் பயனாளா்களுக்கு ரூ.400-க்கு 400 ஜிபி டேட்டா சலுகை!

பிஎஸ்என்எல் வாடிக்கையாளா்களுக்கு ரூ.400-க்கு 400 ஜிபி டேட்டா சேவை 4 நாள்களுக்கு வழங்கப்படுகிறது என ஈரோடு பிஎஸ்என்எல் நிறுவன பொது மேலாளா் சிவ் ஷங்கா் சச்சன் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்... மேலும் பார்க்க

சிறுத்தை தாக்கியதில் ஆடுகள் உயிரிழப்பு

சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடியில் சிறுத்தை தாக்கி ஆடுகள் உயிரிழந்த சம்பவம் குறித்து வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச் சரகங்கள் உள்ளன. இதில் தாளவ... மேலும் பார்க்க

ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

கவுந்தப்பாடி அருகே ஒத்தக்குதிரையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு, கல்லூரிச் செயலாளரும், முன்னாள் அமைச்சர... மேலும் பார்க்க