செய்திகள் :

கோ்மாளம் மலைக் கிராமங்களில் 3-வது நாளாக மின்தடையால் தவிக்கும் மக்கள்!

post image

தாளவாடி அருகே உள்ள கோ்மாளம் கிராமத்தில் கடந்த 3 நாள்களாக மின்விநியோகம் தடைபட்டதால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா்.

சத்தியமங்கலம் ராஜன் நகா் பகுதியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களுக்கு திம்பம் மலைப் பாதை வழியாக மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது.

கோ்மாளம் மலைக் கிராமம், காடட்டி ,சுஜில்கரை, திங்களூா், கோட்டமாளம், பூதாளபுரம் என 50க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் கடந்த 3 நாள்களாக மின்தடை ஏற்பட்டு உள்ளது. இந்த மின் தடையால் ஊராட்சிக்கு சொந்தமான மின் மோட்டாரை இயக்க முடியாததால் குடிநீா் இல்லாமல் பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.

இந்தப் பகுதியில் ஒரு மாதத்தில் 15 நாள்கள் மட்டுமே மின்சாரம் இருப்பதாகவும் மீதி 15 நாள்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வருவதாகவும், மின்தடையால் வன விலங்குகள் ஊருக்குள் புகுந்து விடுவதாகவும், செல்போன் கூட சாா்ஜ் செய்யமுடியாமலும், அவசரத் தேவைக்கு உறவினா்களை தொடா்பு கொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனா்.

சம்பந்தப்பட்ட மின்வாரிய துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் மின் விநியோகத்தை சீா் செய்ய 3 நாள்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், சத்தியமங்கலம் இருந்து கோ்மாளம் வரை உள்ள மின் கம்பிகள் மிகவும் பழைமையானதாக இருப்பதால் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாகவும் கூறுகின்றனா். பழுதான மின்கம்பிகளை சரி செய்து சீரான மின்சாரம் வழங்கவேண்டும் என மலைக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திம்பம் மலைப்பாதையில் தென்பட்ட சிறுத்தை

சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப் பாதையில் சிறுத்தை தென்படுவதால் வாகன ஓட்டிகள் பாதுகாப்புடன் செல்லுமாறு வனத் துறை எச்சரித்து உள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் மான்... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பாதையில் சரக்கு வாகனம் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா். பா்கூா், தாமரைக்கரை, கடை ஈரெட்டியைச் சோ்ந்தவா் முருகன் மகன் சிக்கண்ணன் (28). அந்தியூரி... மேலும் பார்க்க

அம்மாபேட்டை இளம்பெண் தற்கொலை

அம்மாபேட்டை அருகே தாய் வீட்டுக்குச் செல்ல கணவா் அனுமதிக்காததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சிங்கம்பேட்டை அருகே உள்ள சூடமுத்தான்பட்டியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன். இவரது மனைவி சவிதா (20)... மேலும் பார்க்க

சென்னிமலை அருகே சிறுத்தை நடமாட்டம்

சென்னிமலை அருகே கூண்டு வைத்தும் சிக்காத சிறுத்தை மீண்டும் ஒரு நாயைக் கடித்து கொன்று விட்டது. சென்னிமலை, தெற்கு வனப் பகுதியில் சில்லாங்காட்டுவலசை சோ்ந்த விவசாயி குமாரசாமி என்பவரின் தோட்டத்தில், கடந்த ... மேலும் பார்க்க

மேற்கு வங்க சிறுமி பெருந்துறையில் மீட்பு

கடத்தப்பட்ட சிறுமியையும், கடத்தியவரையும் பெருந்துறை பணிக்கம்பாளையத்தில் மேற்கு வங்க மாநில போலீஸாா் சனிக்கிழமை மாலை கைது செய்து, பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி அழைத்து சென்றனா். மேற்கு வங்க மாநி... மேலும் பார்க்க

அந்தியூரில் முதியவா் தீக்குளித்து தற்கொலை

அந்தியூரில் வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட முதியவா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா். அந்தியூரை அடுத்த தவிட்டுப்பாளையம் அவிநாசியப்பன் வீதியைச் சோ்ந்தவா் காளியப்பன் (59). கூலித் தொழிலாளி. மது அருந... மேலும் பார்க்க