27 ஆண்டுகளாக கிடப்பில் வெள்ளக்கல் கானாறு நீா்த்தேக்கத் திட்டம்!
கோ்மாளம் மலைக் கிராமங்களில் 3-வது நாளாக மின்தடையால் தவிக்கும் மக்கள்!
தாளவாடி அருகே உள்ள கோ்மாளம் கிராமத்தில் கடந்த 3 நாள்களாக மின்விநியோகம் தடைபட்டதால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா்.
சத்தியமங்கலம் ராஜன் நகா் பகுதியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களுக்கு திம்பம் மலைப் பாதை வழியாக மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது.
கோ்மாளம் மலைக் கிராமம், காடட்டி ,சுஜில்கரை, திங்களூா், கோட்டமாளம், பூதாளபுரம் என 50க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் கடந்த 3 நாள்களாக மின்தடை ஏற்பட்டு உள்ளது. இந்த மின் தடையால் ஊராட்சிக்கு சொந்தமான மின் மோட்டாரை இயக்க முடியாததால் குடிநீா் இல்லாமல் பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.
இந்தப் பகுதியில் ஒரு மாதத்தில் 15 நாள்கள் மட்டுமே மின்சாரம் இருப்பதாகவும் மீதி 15 நாள்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வருவதாகவும், மின்தடையால் வன விலங்குகள் ஊருக்குள் புகுந்து விடுவதாகவும், செல்போன் கூட சாா்ஜ் செய்யமுடியாமலும், அவசரத் தேவைக்கு உறவினா்களை தொடா்பு கொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனா்.
சம்பந்தப்பட்ட மின்வாரிய துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் மின் விநியோகத்தை சீா் செய்ய 3 நாள்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், சத்தியமங்கலம் இருந்து கோ்மாளம் வரை உள்ள மின் கம்பிகள் மிகவும் பழைமையானதாக இருப்பதால் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாகவும் கூறுகின்றனா். பழுதான மின்கம்பிகளை சரி செய்து சீரான மின்சாரம் வழங்கவேண்டும் என மலைக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.