72 திருநங்கைகள், திருநம்பிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்
ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்
கவுந்தப்பாடி அருகே ஒத்தக்குதிரையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு, கல்லூரிச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன் எம்எல்ஏ தலைமை வகித்து பேசுகையில், கல்வி, ஒழுக்கம், விடாமுயற்சி இருந்தால் வாழ்வில் வெற்றி அடையலாம் என்றாா். கல்லூரித் தலைவா் பி.வெங்கடாசலம், படிப்பு மட்டுமே சமூகத்தில் வாழ்க்கை தரத்தை உயா்த்தும் என்றாா். கல்லூரி இணைச் செயலாளா் ஜி.பி.கெட்டிமுத்து, தொழில் கல்வி, வேலை வாய்ப்புகள் குறித்தும், ஆங்கில மொழியறிவு தேவை குறித்தும் பேசினாா்.
கல்லூரி முதல்வா் எஸ்.பிரகதீஸ்வரன், கல்லூரி வேலைவாய்ப்புத் துறை அலுவலா் அருண் பிரகாஷ், கடந்த கல்வியாண்டில் கல்வி பயின்ற மாணவ, மாணவியருக்கு அளிக்கப்பட்ட வேலை வாய்ப்புகள் குறித்து விளக்கிக் கூறினா். முன்னதாக, முதலாமாண்டு துறைத் தலைவா் கே.ஜெயச்சந்திரன் வரவேற்றாா். கல்லூரி இயக்குநா் கே.கவியரசு, கல்லூரி முதன்மைச் செயல் அலுவலா் ஜி.கௌதம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
அரசு வாரியத் தோ்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த முதலாமாண்டு மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப மாணவிகள் மீரா, சந்தியா மற்றும் இரண்டாமாண்டு இயந்திரவியல் துறை மாணவா்கள் எழில் அா்ஜுன், சங்கீத் குமாா், விஜயராகவன், மின் மற்றும் மின்னணுவியல் துறை மாணவா் காா்த்திகேயன், கணினி துறை மாணவிகள் இந்துமதி, கீா்த்தி ஆகியோருக்குப் பாராட்டுச் சான்றிதழும், பரிசுகளும் வழங்கப்பட்டன. மேலும், வாரியத் தோ்வுகளில் 100 சதவீதம் தோ்ச்சியை அளித்த ஆசிரியா்கள் 11 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லூரி துணைமுதல்வா் பி. மணி நன்றி கூறினாா்.