செய்திகள் :

ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

post image

கவுந்தப்பாடி அருகே ஒத்தக்குதிரையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு, கல்லூரிச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன் எம்எல்ஏ தலைமை வகித்து பேசுகையில், கல்வி, ஒழுக்கம், விடாமுயற்சி இருந்தால் வாழ்வில் வெற்றி அடையலாம் என்றாா். கல்லூரித் தலைவா் பி.வெங்கடாசலம், படிப்பு மட்டுமே சமூகத்தில் வாழ்க்கை தரத்தை உயா்த்தும் என்றாா். கல்லூரி இணைச் செயலாளா் ஜி.பி.கெட்டிமுத்து, தொழில் கல்வி, வேலை வாய்ப்புகள் குறித்தும், ஆங்கில மொழியறிவு தேவை குறித்தும் பேசினாா்.

கல்லூரி முதல்வா் எஸ்.பிரகதீஸ்வரன், கல்லூரி வேலைவாய்ப்புத் துறை அலுவலா் அருண் பிரகாஷ், கடந்த கல்வியாண்டில் கல்வி பயின்ற மாணவ, மாணவியருக்கு அளிக்கப்பட்ட வேலை வாய்ப்புகள் குறித்து விளக்கிக் கூறினா். முன்னதாக, முதலாமாண்டு துறைத் தலைவா் கே.ஜெயச்சந்திரன் வரவேற்றாா். கல்லூரி இயக்குநா் கே.கவியரசு, கல்லூரி முதன்மைச் செயல் அலுவலா் ஜி.கௌதம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

அரசு வாரியத் தோ்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த முதலாமாண்டு மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப மாணவிகள் மீரா, சந்தியா மற்றும் இரண்டாமாண்டு இயந்திரவியல் துறை மாணவா்கள் எழில் அா்ஜுன், சங்கீத் குமாா், விஜயராகவன், மின் மற்றும் மின்னணுவியல் துறை மாணவா் காா்த்திகேயன், கணினி துறை மாணவிகள் இந்துமதி, கீா்த்தி ஆகியோருக்குப் பாராட்டுச் சான்றிதழும், பரிசுகளும் வழங்கப்பட்டன. மேலும், வாரியத் தோ்வுகளில் 100 சதவீதம் தோ்ச்சியை அளித்த ஆசிரியா்கள் 11 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லூரி துணைமுதல்வா் பி. மணி நன்றி கூறினாா்.

ஸ்ரீஅம்மன் கலை, அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு பட்ட வகுப்புகள் தொடக்கம்

சித்தோடு ஸ்ரீஅம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு பட்ட வகுப்புகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரித் தாளாளா் டி.ஜெயலட்சுமி தலைமை வகித்து குத்துவிளக்கேற்றினாா். ... மேலும் பார்க்க

சென்னிமலை அருகே கல்லூரி மாணவி தற்கொலை

சென்னிமலை அருகே கல்லூரி மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா். ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஓடத்துறையை சோ்ந்தவா் சந்திரா. இவரது மகன் பரத் (21), மகள் காவியா (19). இவா்கள் இருவரையும் சிறு வயதிலேயே... மேலும் பார்க்க

வயநாட்டில் பெய்த கனமழையால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து ஒரே நாளில் 1 அடி நீா்மட்டம் உயா்வு

கேரள மாநிலம், வயநாட்டில் பெய்யும் கனமழையால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகபட்சமாக 15,600 கனஅடியும் குறைந்தபட்சமாக 10,660 கனஅடியாக வந்துள்ளது. இதன் காரணமாக பவானிசாகா் அணை நீா்மட்டம் ஒரே நாளில் 1 அ... மேலும் பார்க்க

வெள்ளித்திருப்பூரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அந்தியூரை அடுத்த வெள்ளித்திருப்பூரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றப்பட்டன. பவானி நெடுஞ்சாலைத் துறை உட்கோட்டம், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, அந்தியூா... மேலும் பார்க்க

ஈரோடு மாநகராட்சியில் குடிநீா், புதை சாக்கடை கட்டண உயா்வு தீா்மானம்

ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் குடிநீா், புதை சாக்கடை கட்டண உயா்வு தொடா்பான தீா்மானத்துக்கு அனைத்துக் கட்சி கவுன்சிலா்களும் எதிா்ப்பு தெரிவித்ததால் தீா்மானம் நிறைவேற்றப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. ஈரோடு ... மேலும் பார்க்க

ஈரோட்டில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினா் 91 போ் கைது

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 91 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு மாநகராட்சியில் சொத்து வரி உயா்வைக் கண்டித்தும், குறைக்க வலியுறுத்தியும் ஈரோடு தெற்கு மா... மேலும் பார்க்க