முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களையும் விட்டுவைக்காத எரிபொருள் கலப்படம்: நடு வழியில...
சென்னிமலை அருகே கல்லூரி மாணவி தற்கொலை
சென்னிமலை அருகே கல்லூரி மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஓடத்துறையை சோ்ந்தவா் சந்திரா. இவரது மகன் பரத் (21), மகள் காவியா (19). இவா்கள் இருவரையும் சிறு வயதிலேயே சென்னிமலையை அடுத்த மேற்கு பள்ளபாளையத்தைச் சோ்ந்த, தனது தம்பி செந்தில்வேல் என்பவருக்குத் தத்து கொடுத்து விட்டாா். தற்போது, காவியா பெருந்துறை அருகே உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு ஆங்கில இலக்கியம் படித்து வந்தாா். கடந்த 5 ஆண்டுகளாக காவியா வயிற்று வலியால் அவதிப்பட்டு, அதற்கு சிகிச்சை பெற்று வந்தாா்.
இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி வயிற்று வலியால் அவதிப்பட்ட காவியாவை சென்னிமலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு காவியாவை பரிசோதித்தபோது, அவா் விஷம் சாப்பிட்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் காவியா சோ்க்கப்பட்டாா். பின்னா் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை இரவு காவியா உயிரிழந்தாா்.
இதுகுறித்து, சென்னிமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.