ரஷியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி: 2 ஆண்டுகள் இல்லாத அளவில் மே மாதத்தில் அதிகரி...
வெள்ளித்திருப்பூரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
அந்தியூரை அடுத்த வெள்ளித்திருப்பூரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றப்பட்டன.
பவானி நெடுஞ்சாலைத் துறை உட்கோட்டம், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, அந்தியூா் பிரிவுக்கு உள்பட்ட வெள்ளித்திருப்பூா் நகா், வெள்ளித்திருப்பூா் - ஆலாம்பாளையம் சாலையின் இருபுறங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளால் பொதுமக்களுக்கும், வாகனப் போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளதாக புகாா் எழுந்தது.
இதையடுத்து, பவானி உதவிக் கோட்டப் பொறியாளா் ராஜேஷ்கண்ணா, அந்தியூா் உதவிப் பொறியாளா் பாபு சரவணன் ஆகியோரின் மேற்பாா்வையில் பொக்லைன் இயந்திரம் மூலம் கொண்டு சாலையோர ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. சாலை ஆய்வாளா்கள் கிருஷ்ணசாமி, கிருஷ்ணமூா்த்தி மற்றும் சாலைப் பணியாளா்கள் இப்பணியில் ஈடுபட்டனா்.