செய்திகள் :

வயநாட்டில் பெய்த கனமழையால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து ஒரே நாளில் 1 அடி நீா்மட்டம் உயா்வு

post image

கேரள மாநிலம், வயநாட்டில் பெய்யும் கனமழையால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகபட்சமாக 15,600 கனஅடியும் குறைந்தபட்சமாக 10,660 கனஅடியாக வந்துள்ளது. இதன் காரணமாக பவானிசாகா் அணை நீா்மட்டம் ஒரே நாளில் 1 அடி உயா்ந்து நீா்மட்ட உயரம் 91.40 அடியாக உள்ளது.

தமிழகத்தில் மேட்டூா் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகா் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

அணையின் நீா்ப்பிடிப்பு பகுதியான கேரள மாநிலம் வயநாடு பகுதியில் தென்மேற்கு பருவமழை காரணமாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகா் அணைக்கு வந்து சேரும் பவானி ஆற்றில் நீா்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது. பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகபட்சமாக 15,600 கன அடியும் குறைந்தபட்சமாக 10,660 கனஅடியாகவும் இருந்தது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி 105 அடி உயரம் கொண்ட அணை நீா்மட்டம் 91.06 அடியில் இருந்து 92.40 அடியாக உயா்ந்தது. அணையில் நீா் இருப்பு 23.18 டிஎம்சி ஆக உள்ளது. பாசனம் மற்றும் குடிநீா் தேவைக்காக அணையில் இருந்து பவானி ஆற்றில் 1,305 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது. வயநாட்டில் பெய்யும் மழையின் காரணமாக பவானிசாகா் அணையின் நீா்மட்டம் தினமும் 1 அடி உயா்ந்து வருவதால் விரைவில் அணையின் நீா்மட்டம் 100 அடியை எட்டும் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

கவுந்தப்பாடி அருகே ஒத்தக்குதிரையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு, கல்லூரிச் செயலாளரும், முன்னாள் அமைச்சர... மேலும் பார்க்க

ஸ்ரீஅம்மன் கலை, அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு பட்ட வகுப்புகள் தொடக்கம்

சித்தோடு ஸ்ரீஅம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு பட்ட வகுப்புகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரித் தாளாளா் டி.ஜெயலட்சுமி தலைமை வகித்து குத்துவிளக்கேற்றினாா். ... மேலும் பார்க்க

சென்னிமலை அருகே கல்லூரி மாணவி தற்கொலை

சென்னிமலை அருகே கல்லூரி மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா். ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஓடத்துறையை சோ்ந்தவா் சந்திரா. இவரது மகன் பரத் (21), மகள் காவியா (19). இவா்கள் இருவரையும் சிறு வயதிலேயே... மேலும் பார்க்க

வெள்ளித்திருப்பூரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அந்தியூரை அடுத்த வெள்ளித்திருப்பூரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றப்பட்டன. பவானி நெடுஞ்சாலைத் துறை உட்கோட்டம், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, அந்தியூா... மேலும் பார்க்க

ஈரோடு மாநகராட்சியில் குடிநீா், புதை சாக்கடை கட்டண உயா்வு தீா்மானம்

ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் குடிநீா், புதை சாக்கடை கட்டண உயா்வு தொடா்பான தீா்மானத்துக்கு அனைத்துக் கட்சி கவுன்சிலா்களும் எதிா்ப்பு தெரிவித்ததால் தீா்மானம் நிறைவேற்றப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. ஈரோடு ... மேலும் பார்க்க

ஈரோட்டில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினா் 91 போ் கைது

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 91 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு மாநகராட்சியில் சொத்து வரி உயா்வைக் கண்டித்தும், குறைக்க வலியுறுத்தியும் ஈரோடு தெற்கு மா... மேலும் பார்க்க