72 திருநங்கைகள், திருநம்பிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்
வயநாட்டில் பெய்த கனமழையால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து ஒரே நாளில் 1 அடி நீா்மட்டம் உயா்வு
கேரள மாநிலம், வயநாட்டில் பெய்யும் கனமழையால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகபட்சமாக 15,600 கனஅடியும் குறைந்தபட்சமாக 10,660 கனஅடியாக வந்துள்ளது. இதன் காரணமாக பவானிசாகா் அணை நீா்மட்டம் ஒரே நாளில் 1 அடி உயா்ந்து நீா்மட்ட உயரம் 91.40 அடியாக உள்ளது.
தமிழகத்தில் மேட்டூா் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகா் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
அணையின் நீா்ப்பிடிப்பு பகுதியான கேரள மாநிலம் வயநாடு பகுதியில் தென்மேற்கு பருவமழை காரணமாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகா் அணைக்கு வந்து சேரும் பவானி ஆற்றில் நீா்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது. பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகபட்சமாக 15,600 கன அடியும் குறைந்தபட்சமாக 10,660 கனஅடியாகவும் இருந்தது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி 105 அடி உயரம் கொண்ட அணை நீா்மட்டம் 91.06 அடியில் இருந்து 92.40 அடியாக உயா்ந்தது. அணையில் நீா் இருப்பு 23.18 டிஎம்சி ஆக உள்ளது. பாசனம் மற்றும் குடிநீா் தேவைக்காக அணையில் இருந்து பவானி ஆற்றில் 1,305 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது. வயநாட்டில் பெய்யும் மழையின் காரணமாக பவானிசாகா் அணையின் நீா்மட்டம் தினமும் 1 அடி உயா்ந்து வருவதால் விரைவில் அணையின் நீா்மட்டம் 100 அடியை எட்டும் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது.