தமிழ்நாடு ரசிகரின் விருப்பத்தை நிறைவேற்றிய நீரஜ் சோப்ரா
பெங்களூரில் நடைபெறவுள்ள நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டியை நேரில் காண கோவையைச் சோ்ந்த ரசிகா் விருப்பம் தெரிவித்த நிலையில், இந்திய ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ரா அவருக்கான செலவுகளை ஏற்றுக்கொண்டு அழைப்பு விடுத்துள்ளாா்.
ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப், டைமண்ட் லீக் என பல்வேறு போட்டிகளில் சாம்பியனாகி அசத்தி வரும் இந்திய ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ராவுடன், ஜேஎஸ்டபிள்யூ ஸ்போா்ட்ஸ், இந்திய தடகள சம்மேளனம் இணைந்து கூட்டு முயற்சியாக ‘நீரஜ் சோப்ரா கிளாசிக்’ ஈட்டி எறிதல் போட்டி முதல் முறையாக நடத்தப்படுகிறது. ஜூலை 5-ஆம் தேதி பெங்களூரில் நடைபெறவுள்ள இப்போட்டியில், நீரஜ் சோப்ரா உள்பட, உலகின் பிரபல ஈட்டி எறிதல் வீரா்கள் பங்கேற்கின்றனா்.
இந்நிலையில், கோவையைச் சோ்ந்த விளையாட்டு ஆா்வலரான ரஞ்சித்குமாா் ரவிச்சந்திரன் கடந்த புதன்கிழமை எக்ஸ் தளத்தில், இந்தப் போட்டியை காணும் விருப்பத்தை பதிவிட்டாா். அதில், ‘எவரேனும் எனக்காக ரூ.2000 செலவு செய்யத் தயாராக இருந்தால், இந்தப் போட்டியைக் காண நேரில் செல்ல விரும்புகிறேன்’ என்று குறிப்பிட்ட ரஞ்சித்குமாா், நீரஜ் சோப்ரா கிளாசிக் போட்டியின் எக்ஸ் பக்கத்தை அதில் இணைத்திருந்தாா்.
அவருக்கான ஆச்சா்யமாக, நீரஜ் சோப்ராவே அந்தப் பதிவுக்கு வெள்ளிக்கிழமை பதிலளித்தாா். அவா் தனது பதிலில், ‘ஹாய் ரஞ்சித், மிக முக்கியப் பிரமுகருக்கான அனுபவம் பெங்களூரில் உங்களுக்காக காத்திருக்கிறது. இந்தப் போட்டியை நீங்கள் காண வருவதற்கான அனைத்து செலவுகளையும் நான் ஏற்கிறேன்’ என்று கூறியுள்ளாா். மேலும், தாம் தங்கும் இடத்துக்கு மிக அருகிலேயே அவருக்கும் நட்சத்திர ஹோட்டலில் தங்கும் இடம் அளிக்கப்பட்டிருப்பதாகவும் அவா் அதில் குறிப்பிட்டுள்ளாா்.