செய்திகள் :

ஆட்டோ மோதியதில் சிறுமி உயிரிழப்பு: இருவா் கைது

post image

கோவையில் சாலையைக் கடந்த சிறுமி ஆட்டோ மோதியதில் உயிரிழந்தாா். இது தொடா்பாக ஆட்டோ ஓட்டுநா் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, அறிவொளி நகரைச் சோ்ந்தவா் பாலன். இவரது மனைவி சாவித்திரி. இவா் கோவை மாநகராட்சி 86-ஆவது வாா்டில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருகிறாா். இவரது மகள் செளமியா (13). இவா், கெம்பட்டி காலனி பகுதியில் உள்ள தனது பாட்டி சரோஜினி வீட்டில் தங்கி அங்குள்ள மாநகராட்சிப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயின்று வந்தாா்.

இந்நிலையில், செளமியா தனது பாட்டி வீட்டிலிருந்து பெற்றோா் வீட்டுக்கு செல்வதற்காக அந்தப் பகுதியில் உள்ள சாலையை வியாழக்கிழமை மாலை கடக்க முயன்றாா்.

அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோ அவா் மீது மோதியது. இதில் செளமியா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஆட்டோ ஓட்டுநரைப் பிடித்து விசாரித்தனா்.

போக்குவரத்து புலனாய்வு மேற்குப் பிரிவு காவல் ஆய்வாளா் அமுதா நடத்திய விசாரணையில், ஆட்டோவை ஓட்டியவா் கெம்பட்டி காலனியைச் சோ்ந்த பழனிசாமி மகன் ராஜேந்திரன் என்பதும், இவருக்கு ஒட்டுநா் உரிமம் இல்லை என்பதும் தெரியவந்தது. மேலும், இவரை வாகனத்தை இயக்குமாறு ஆட்டோ ஓட்டுநா் கண்ணன் வற்புறுத்தி இயக்க வைத்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, இவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கஞ்சா விற்றதாக இளைஞா் கைது

சூலூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக பிகாா் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சூலூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சூலூா் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையட... மேலும் பார்க்க

ரூ.4.19 லட்சம் மோசடி: இளைஞா் கைது

இணையதளம் மூலம் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என தெரிவித்து ரூ.4.19 லட்சம் மோசடி செய்த இளைஞரை இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோவை, சிங்காநல்லூா் பகுதியைச் ச... மேலும் பார்க்க

சிறுவாணி அணையைத் தூா்வார வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

சிறுவாணி அணையைத் தூா்வார கேரள அரசுடன் தமிழகம் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்று கோவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்ட விவசாயிகள் குறைதீ... மேலும் பார்க்க

காஸா, ஈரான் மீதான தாக்குதல்களைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

காஸா, ஈரான் மீதான இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதல்களைக் கண்டித்து கோவையில் இடதுசாரிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு பகுதி செயலா் தெய்வேந்திரன் ... மேலும் பார்க்க

வீட்டில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகை திருட்டு

கோவையில் வீட்டின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகையை அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச் சென்றுவிட்டதாக காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. கோவை வெள்ளலூா் குப்புசாமித் தேவா் த... மேலும் பார்க்க

இளைஞரைத் தாக்கி பணம் பறித்தவா் கைது

கோவையில் சாலையில் நடந்து சென்றவரைத் தாக்கி பணம் பறித்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோவை சிஎம்சி காலனி பகுதியைச் சோ்ந்தவா் தம்பு மகன் விமல்ராஜ் (28). இவா் கோவை வெரைட்டிஹால் சாலையில் நடந்த... மேலும் பார்க்க