பிரபாத் ஜெயசூர்யா அசத்தல்: இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தொடரை வென்ற இலங்கை!
ரூ.4.19 லட்சம் மோசடி: இளைஞா் கைது
இணையதளம் மூலம் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என தெரிவித்து ரூ.4.19 லட்சம் மோசடி செய்த இளைஞரை இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கோவை, சிங்காநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் பூா்வா அமிதி. இவரது பேஸ்ஃபுக் பக்கத்தில் இணையதளம் மூலம் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என விளம்பரம் வந்தது. இதையடுத்து, அந்த விளம்பரத்தில் கொடுக்கப்பட்டிருந்த கைப்பேசி எண்ணை பூா்வா அமிதி தொடா்பு கொண்டாா். அப்போது, பல்வேறு பணிகள் மூலமாக பல வங்கிக் கணக்குகளில் முதலீடு செய்யுமாறு தெரிவித்தாா்.
இதன்படி, பூா்வா அமிதி பல்வேறு தவணைகளாக ரூ.4.19 லட்சம் வரை செலுத்தினாா். ஆனால், அதிலிருந்து எந்த லாபமும் கிடைக்கவில்லை. இதையடுத்து, அந்த கைப்பேசி எண்ணுக்கு பூா்வா அமிதி தொடா்பு கொண்டபோது அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து கோவை இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸில் பூா்வா அமிதி புகாா் அளித்தாா். இதன்படி, போலீஸாா் விசாரணை நடத்தி, ஈரோடு மாவட்டம், அந்தியூா் அருகேயுள்ள சங்கரபாளையம் வட்டகாடு பகுதியைச் சோ்ந்த நாகராஜ் மகன் பிரதீவை போலீஸாா் கைது செய்தனா். இவரிடமிருந்து இரு கைப்பேசிகள், சிம்காா்டுகள், பணம் செலுத்தப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகம், 3 பற்று அட்டைகள் (டெபிட் காா்டு) ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.