பிரபாத் ஜெயசூர்யா அசத்தல்: இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தொடரை வென்ற இலங்கை!
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என இலங்கை அணி வென்றது.
இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
இதில் முதல் டெஸ்ட் டிரா ஆனது. இரண்டாவது டெஸ்ட் ஜூன் 25-இல் கொழும்புவில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார்.
முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 247 -க்கு ஆல் அவுட்டாக, இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் 458-க்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம், இலங்கை அணி 211 ரன்கள் முன்னிலைப் பெற்றது.
வங்கதேசம் அணி 2-ஆவது இன்னிங்ஸில் 133 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹிம் 26 ரன்கள் அடித்தார்.
இலங்கை அணியில் 2-ஆவது இன்னிங்ஸில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். தனஞ்ஜெய டி சில்வா, தரிந்து ரத்னநாயகே தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் தொடரை 1-0 என வென்று அசத்தியது.
Prabath’s Magic Spell!
— Sri Lanka Cricket (@OfficialSLC) June 28, 2025
Prabath Jayasuriya spins Bangladesh into trouble with a brilliant 5/56, sealing a dominant win for Sri Lanka! #SLvBAN#SriLankaCricketpic.twitter.com/wtbOMLrMam
ஆட்டநாயகனாகவும் தொடர் நாயகனாகவும் இலங்கை பேட்டர் பதும் நிசாங்கா தேர்வானார்.
Summary
Sri Lanka won the Test series against Bangladesh 1-0. prabath jeyasurya take fifer, sri lanka won by an innings and 78 runs against bangladesh in second test.