செய்திகள் :

Trump: "தாக்குதல் நிறுத்தம், வணிக ஒப்பந்தம் ட்ரம்பே அறிவிக்கிறார்; அப்போ இந்தியா?" - ப.சிதம்பரம்

post image

நேற்று அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், இந்தியா, அமெரிக்கா இடையே மிகப்பெரிய வணிக ஒப்பந்தம் நிறைவேற உள்ளதாகக் கூறியிருந்தார்.

இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது...

"அதிபர் ட்ரம்ப் இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையே தாக்குதல் நிறுத்தத்தை அறிவித்தார். அதன் பிறகு, மோதல் முடிவுற்றது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் அதைப் பின்தொடர்ந்து, போர் நிறுத்தத்தை அறிவித்தார்.

நேற்று ட்ரம்ப், இந்தியா, அமெரிக்கா இடையே 'மிகப்பெரிய' வணிக ஒப்பந்தம் நடக்க உள்ளது என்று அறிவித்துள்ளார்.

அடுத்து இனி, இந்தியாவின் வர்த்தகச் செயலாளரிடம் இருந்து இந்த அறிவிப்பு வரும் என்று நினைக்கிறேன்.

எந்தவொரு ஒப்பந்தமாக இருந்தாலும், இந்தியாவும், சம்பந்தப்பட்ட மற்றொரு நாடு ஒன்றாக, ஒத்திசைவாக அறிவிக்கும் பழக்கத்தை இந்தியா விட்டுவிட்டதா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ட்ரம்ப் அறிவித்த வர்த்தக ஒப்பந்தம் குறித்து மத்திய அரசு இன்னமும் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

BJP: "விசிகவுக்கு எத்தனை தொகுதி கொடுப்பாங்கன்னு முதல்வர்ட்ட கேப்பீங்களா?" - நயினார் நாகேந்திரன்

'நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பு!'பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்திருந்தார். திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து அவர் பேசி... மேலும் பார்க்க

"தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடிக்க காரணம் இதான்" - ஜெய்சங்கர் சொல்லும் விளக்கம் என்ன?

தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து, சிறையில் அடைப்பது பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. இதைத் தடுக்க தொடர்ந்து கோரிக்கைகள், போராட்டங்கள் நடந்துக்கொண்டேதான் இருக்கின்றன. இந்த நிலையில், இலங்கை ... மேலும் பார்க்க

அப்பா அம்மா மக்கள் கழகம் உள்ளிட்ட 24 தமிழகக் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்; காரணம் என்ன?

கடந்த ஆறு ஆண்டுகளாக ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத கட்சிகளை அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப... மேலும் பார்க்க