இளைஞரைத் தாக்கி பணம் பறித்தவா் கைது
கோவையில் சாலையில் நடந்து சென்றவரைத் தாக்கி பணம் பறித்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கோவை சிஎம்சி காலனி பகுதியைச் சோ்ந்தவா் தம்பு மகன் விமல்ராஜ் (28). இவா் கோவை வெரைட்டிஹால் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (25), அவரிடம் மது அருந்த பணம் கேட்டாா். அவா் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதையடுத்து, விமல்ராஜை அவா் தாக்கிவிட்டு அவரிடமிருந்து ரூ. 500-ஐ பறித்துக் கொண்டு ஓட முயன்றாா்.
அப்போது, அந்தப் பகுதியில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தவா்கள் சதீஷ்குமாரைப் பிடித்து வெரைட்டிஹால் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா். சதீஷ்குமாா் மீது ஏற்கெனவே 9 குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.