செய்திகள் :

ஏர் இந்தியா ஊழியர்கள் கொண்டாட்டம்! சர்ச்சை விடியோவால் 4 பேர் பணிநீக்கம்!

post image

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் சரக்குகளைக் கையாளும் பிரிவில் கொண்டாட்ட நிகழ்வு தொடர்பான விடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்னதாக ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில், 270 பேர் பலியாகினர். இந்த சம்பவமானது, இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், விபத்துக்கு உள்ளான ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் சரக்குகளைக் கையாளும் பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள், கொண்டாட்டத்தில் ஈடுபட்டது போன்ற விடியோ சமூக ஊடகங்களில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

விடியோ பதிவு செய்யப்பட்ட நாள் குறித்து தெளிவாகத் தெரியாவிட்டாலும், விபத்து ஏற்பட்ட சில நாள்களில்தான் விடியோ எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இருப்பினும், கொண்டாட்டத்துக்கான காரணம் குறித்த தகவல்கள் எதுவும் பெறப்படவில்லை.

ஏர் இந்தியா ஊழியர்களின் கொண்டாட்ட விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், 4 மூத்த அதிகாரிகளை பணிநீக்கம் செய்து ஏர் இந்தியா நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், விடியோ குறித்த வருத்தம் தெரிவித்த ஏர் இந்தியா நிறுவனம், விமான விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் ஏர் இந்தியா எப்போதும் துணை நிற்கும். நிறுவனத்தில் கொண்டாட்டம் தொடர்பாக சமீபத்தில் வெளியான விடியோவுக்கு எங்களின் ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த சமயத்தில், இந்த தவறான நடத்தை மூலம் எங்களை மதிப்பிட முடியாது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எங்களின் பொறுப்புணர்வு மீதான உறுதிப்பாட்டை மீண்டும் தெளிவுப்படுத்துகிறோம் என்று கூறியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுப் பயணிகள் உள்பட 242 பேருடன் கடந்த ஜூன் 12 ஆம் தேதி லண்டனுக்கு புறப்பட்ட ஏா் இந்தியா விமானம், சில நிமிடங்களிலேயே அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணித்த 241 பேர் உள்பட 270 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து நாட்டிலேயே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையும் படிக்க:நன்றியற்ற ஈரான் தலைவர்! டிரம்ப் குற்றச்சாட்டு!

கட்சிரோலி, கோண்டியாவில் 4 தாலுகாக்கள் நக்சல் பாதிப்புக்குள்ளானவை: மகாராஷ்டிர அரசு!

மகாராஷ்டிரத்தின் கட்சிரோலி மாவட்டம் முழுவதும் மற்றும் கோண்டியாவில் உள்ள நான்கு தாலுக்காக்கள் நக்சல் பாதிப்புக்குள்ளானவை என்று மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது. முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் கடந்த ஐந்து ... மேலும் பார்க்க

எல்லாவற்றையும் டிரம்ப் அறிவிக்கிறாரே.. இந்தியா அவுட்சோர்ஸிங் கொடுத்துவிட்டதா? ப. சிதம்பரம் கேள்வி

இந்தியா - பாகிஸ்தான் போர், இந்தியா - அமெரிக்கா இடையேயான வணிக ஒப்பந்தம் என அனைத்தையும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்து வருவது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியிர... மேலும் பார்க்க

கர்ப்பிணிக்கு மருந்துக்கு பதிலாக ஆசிட்! மருத்துவமனை அலட்சியத்தால் பரபரப்பு!

மகாராஷ்டிரத்தில் மகப்பேறுக்காக சென்ற பெண்ணின் மீது தவறுதலாக திராவகம் செலுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.மகாராஷ்டிர மாநிலத்தில் ஜல்னா நகரில் அரசு மருத்துவமனையில் மகப்பேறுக்காக ஷீலா பலேராவெ என்பவர் ... மேலும் பார்க்க

கேரளத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்! அணைகள் திறப்பால்..மக்கள் வெளியேற்றம்!

கேரளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், அம்மாநிலத்தின் 5 மாவட்டங்களுக்கு இன்று (ஜூன் 28) இந்திய வானிலை ஆய்வு மையம் ”ஆரஞ்ச் அலர்ட்” எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை கேரளத்தில் முன்கூட்... மேலும் பார்க்க

திகாவில் உள்ள ஜெகந்நாதர் கோயிலில் 3 பேர் சுவாமி தரிசனம்!

மேற்கு வங்கத்தின் திகாவில் உள்ள புதிய ஜெகந்நாதர் கோயிலுக்கு 3 லட்சம் பக்தர்கள் வருகை தந்ததாக இஸ்கான் மூத்த துறவி ஒருவர் தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் கடலோர நகரமான திகாவில் புதிதாகக் கட்டப்பட்ட ஜெகந்... மேலும் பார்க்க

விவசாயத்திற்கான நீருக்கு வரியா? - மத்திய அரசு மறுப்பு

விவசாயிகள் பயன்படுத்தும் நீருக்கு வரி விதிக்கப்படுவதாக வெளியான தகவல் உண்மையல்ல என்று மத்திய அரசு கூறியுள்ளது. நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதைத் தவிர்க்க, விவசாய நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் நீருக... மேலும் பார்க்க