நடுவழியில் துர்நாற்றம், தொழில்நுட்பக் கோளாறு! சீன விமானம் அவசர தரையிறக்கம்!
கஞ்சா விற்றதாக இளைஞா் கைது
சூலூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக பிகாா் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
சூலூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சூலூா் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் வியாழக்கிழமை மேற்கொண்ட சோதனையில், சூலூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த பவன்குமாா் (21) என்பவரை சூலூா் போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.