செய்திகள் :

5 புலிகள் மர்ம மரணம்? பழிதீர்க்க விஷம் வைத்து கொலையா?

post image

கர்நாடகா மாநிலத்தில் மாதேஸ்வரன் மலையில் 5 புலிகள் உயிரிழந்த சம்பவத்தில், அவற்றுக்கு விஷம் வைக்கப்பட்டதாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.

அப்பகுதியில் அமைந்துள்ள கால்நடை வளர்ப்பகத்தில் ஒரு பசுவை புலி கொன்றதால், அதற்கு பழிதீர்ப்பதற்காகவே, கொல்லப்பட்ட பசுவின் உடலில் விஷத்தை பசுவின் உரிமையாளரின் மகன் செலுத்தியதாக விசாரணையில் தெரிய வந்தது.

முன்னதாகவே, புலிகள் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது குற்றவியல் சட்டத்தில் வழக்குப்பதிவு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாடு – கர்நாடக மாநிலங்களின் எல்லை பெரும்பாலும் காடுகள் சூழ்ந்த பகுதி. தமிழ்நாட்டின் 18-ஆவது, காட்டுயிர் சரணாலயமான தந்தை பெரியார் காட்டுயிர் காப்பகத்தை ஒட்டி, கர்நாடகத்தின் மாதேஸ்வரன் மலை காட்டுயிர் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயமானது பாலாறு, மாதேஸ்வரன் மலை, ஹூக்கியம், ராமாபுரம், கொள்ளேகால், அனூர், பி.ஜி. பாளையம் ஆகிய வனச் சரகங்களை உள்ளடக்கியது.

இந்த நிலையில், ஹூக்கியம் வனச் சரகத்தில் உள்ள மின்னியம் காட்டுப் பகுதியில் மாரி அணை கேம்ப் என்ற இடத்தில் 5 புலிகள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தன. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள், புலிகளின் உடல்களைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், உயிரிழந்து கிடந்த தாய்ப் புலி மற்றும் அதன் 4 குட்டிகளின் உடல்களில் காயங்கள் எதுவும் இல்லை. அப்படியென்றால், அவை விஷம் வைத்துத்தான் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று வன அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதுமட்டுமின்றி, காட்டின் எல்லையோரப் பகுதிகளில் கால்நடைகளை வளர்ப்பவர்கள், தங்கள் மாடுகளை காட்டு விலங்குகள் கொல்வதால், கொல்லப்படும் கால்நடையின் உடலில் விஷத்தைக் கலந்து விடுவதாக காட்டுயிர் மேம்பாட்டு அமைப்பு கூறுகிறது. அவர்கள் கூறியதுபோலவே, இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இதையும் படிக்க:சிவசேனை எம்.பி.யின் ஓட்டுநருக்கு பரிசாக ரூ. 150 கோடி நிலம்!

சட்டவிரோத குடியேற்றம்: தில்லியில் 18 வங்கதேசத்தினர் கைது!

தில்லியில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த பதினெட்டு வங்கதேச நட்டவர்கள் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் ஐந்து பேர் திருநங்கைகள்போல் மாறுவேடமிட்டு வசித்து வந்ததாகப் போலீஸார் தெரிவ... மேலும் பார்க்க

மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: கொல்கத்தா கல்லூரி பாதுகாவலர் கைது

மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் அரசு சட்டக் கல்லூரிக்குள் முதலாம் ஆண்டு மாணவி ஒருவா் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் கல்லூரி பாதுகாவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவத்... மேலும் பார்க்க

ஜெய்ஷ் பயங்கரவாதிகள் எங்கே? ட்ரோன்.. மோப்ப நாய்கள்.. 3வது நாளாகத் தொடரும் தேடுதல் வேட்டை!

ஜம்மு - காஷ்மீரின் வனப்பகுதியில் பதுங்கியுள்ள 3 ஜெய்ஷ்-இ-முஹமது பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் 3-வது நாளாக இன்று (ஜூன் 28) ஈடுபட்டுள்ளனர். உதம்பூர் மாவட்டத்தின் பசந்த்கார் வனப்பக... மேலும் பார்க்க

காமாக்யா கோயிலில் விரைவில் ரோப்கார் வசதி: அஸ்ஸாம் முதல்வர்!

அஸ்ஸாம் குவாஹாத்தியில் உள்ள காமாக்யா கோயிலில் விரைவில் ரோப்கார் வசதி கட்டப்படும் என மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார். 51 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படும் காமாக்யா கோயிலுக்கு அஸ்ஸா... மேலும் பார்க்க

பைசா செலவில்லாமல் விண்வெளி சென்ற ராகேஷ் சர்மா! சுபான்ஷு சுக்லாவுக்கு ரூ.544 கோடி செலவு ஏன்?

ராகேஷ் சர்மாவின் விண்வெளிப் பயணத்துக்கு ஒரு ரூபாய்கூட செலவு ஏற்படவில்லை. ஆனால், சுபான்ஷு சுக்லாவுக்கு மட்டும் ஏன் செலவழிக்கப்படுகிறது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.சர்வதேச விண்வெளி நிலையத்து... மேலும் பார்க்க

கட்சிரோலி, கோண்டியாவில் 4 தாலுகாக்கள் நக்சல் பாதிப்புக்குள்ளானவை: மகாராஷ்டிர அரசு!

மகாராஷ்டிரத்தின் கட்சிரோலி மாவட்டம் முழுவதும் மற்றும் கோண்டியாவில் உள்ள நான்கு தாலுக்காக்கள் நக்சல் பாதிப்புக்குள்ளானவை என்று மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது. முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் கடந்த ஐந்து ... மேலும் பார்க்க