செய்திகள் :

சிவசேனை எம்.பி.யின் ஓட்டுநருக்கு பரிசாக ரூ. 150 கோடி நிலம்!

post image

மகாராஷ்டிரத்தில் சிவசேனை எம்.பி.யிடம் ஓட்டுநராகப் பணிபுரிபவருக்கு அரச குடும்பத்தினர் 3 ஏக்கர் நிலத்தை பரிசாக வழங்கினர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் சத்ரபதி சம்பாஜி நகரில் ஹைதராபாத் அரச குடும்பத்தின் சந்ததியினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், நிஜாம் சகாப்தத்தில் பிரதமராக இருந்தவர்களின் சந்ததியினரான மீர் மஹ்மூத் அலி மஜார் அலிகான் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து, ஓட்டுநர் ஒருவருக்கு ரூ. 150 கோடி மதிப்புடைய நிலத்தை பரிசாக வழங்கியுள்ளனர்.

சிவசேனை எம்.பி. சந்திபன் பூம்ரே மற்றும் அவரது மகனும் எம்.எல்.ஏ.வுமான விலாஸ் பூம்ரே ஆகிய இருவரிடமும் 13 ஆண்டுகளாக ஓட்டுநராகப் பணிபுரியும் ஜாவேத் ரசூல் ஷேக் என்பவருக்கு 3 ஏக்கர் நிலத்தை ஹிபனாமா (பரிசு பத்திரம்) மூலம் பரிசாக வழங்கியுள்ளனர்.

இந்த பரிசு வழங்கப்பட்ட நிகழ்வு குறித்து எம்.பி. சந்திபனிடம் கூறுகையில், இது ரசூலின் தனிப்பட்ட விஷயம் என்று தெரிவித்தார்.

ஆனால், பரிசாக வழங்கப்பட்ட நிலத்தின் மீது நீண்டகாலமாக சட்டப் போர் நீடித்து வந்த நிலையில், 2022-ல் தான் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், பெரும் போராட்டத்துக்கு மத்தியில் கிடைத்த நிலத்தை பரிசாக வழங்கியது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதனையடுத்து, அலிகான் குடும்பத்தினருடன் ரசூலுக்கு நீண்டகாலமாகவே நெருங்கிய பழக்கம் இருந்ததால்தான், பரிசு வழங்கப்பட்டதாகத் தெரிவித்தனர். இருப்பினும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, ஹிபனாமா என்பது பொதுவாக ரத்த சொந்தங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும், ரசூலும் அரச குடும்பத்தினரும் வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் வழக்குரைஞர் ஒருவர் தெரிவித்தார்.

இதையும் படிக்க:ஏர் இந்தியா ஊழியர்கள் கொண்டாட்டம்! சர்ச்சை விடியோவால் 4 பேர் பணிநீக்கம்!

காமாக்யா கோயிலில் விரைவில் ரோப்கார் வசதி: அஸ்ஸாம் முதல்வர்!

அஸ்ஸாம் குவாஹாத்தியில் உள்ள காமாக்யா கோயிலில் விரைவில் ரோப்கார் வசதி கட்டப்படும் என மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார். 51 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படும் காமாக்யா கோயிலுக்கு அஸ்ஸா... மேலும் பார்க்க

பைசா செலவில்லாமல் விண்வெளி சென்ற ராகேஷ் சர்மா! சுபான்ஷு சுக்லாவுக்கு ரூ.544 கோடி செலவு ஏன்?

ராகேஷ் சர்மாவின் விண்வெளிப் பயணத்துக்கு ஒரு ரூபாய்கூட செலவு ஏற்படவில்லை. ஆனால், சுபான்ஷு சுக்லாவுக்கு மட்டும் ஏன் செலவழிக்கப்படுகிறது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.சர்வதேச விண்வெளி நிலையத்து... மேலும் பார்க்க

கட்சிரோலி, கோண்டியாவில் 4 தாலுகாக்கள் நக்சல் பாதிப்புக்குள்ளானவை: மகாராஷ்டிர அரசு!

மகாராஷ்டிரத்தின் கட்சிரோலி மாவட்டம் முழுவதும் மற்றும் கோண்டியாவில் உள்ள நான்கு தாலுக்காக்கள் நக்சல் பாதிப்புக்குள்ளானவை என்று மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது. முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் கடந்த ஐந்து ... மேலும் பார்க்க

எல்லாவற்றையும் டிரம்ப் அறிவிக்கிறாரே.. இந்தியா அவுட்சோர்ஸிங் கொடுத்துவிட்டதா? ப. சிதம்பரம் கேள்வி

இந்தியா - பாகிஸ்தான் போர், இந்தியா - அமெரிக்கா இடையேயான வணிக ஒப்பந்தம் என அனைத்தையும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்து வருவது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியிர... மேலும் பார்க்க

கர்ப்பிணிக்கு மருந்துக்கு பதிலாக ஆசிட்! மருத்துவமனை அலட்சியத்தால் பரபரப்பு!

மகாராஷ்டிரத்தில் மகப்பேறுக்காக சென்ற பெண்ணின் மீது தவறுதலாக திராவகம் செலுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.மகாராஷ்டிர மாநிலத்தில் ஜல்னா நகரில் அரசு மருத்துவமனையில் மகப்பேறுக்காக ஷீலா பலேராவெ என்பவர் ... மேலும் பார்க்க

கேரளத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்! அணைகள் திறப்பால்..மக்கள் வெளியேற்றம்!

கேரளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், அம்மாநிலத்தின் 5 மாவட்டங்களுக்கு இன்று (ஜூன் 28) இந்திய வானிலை ஆய்வு மையம் ”ஆரஞ்ச் அலர்ட்” எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை கேரளத்தில் முன்கூட்... மேலும் பார்க்க