செய்திகள் :

Guru Mithreshiva: "ஆன்மீகத்தில் 35 ஆண்டுகள்... பல குருமார்களோட பயணித்திருக்கிறேன்" - குரு மித்ரேஷிவா

post image

குரு மித்ரேஷிவா எழுதிய பணவாசம், கருவில் இருந்து குரு வரை, உனக்குள் ஒரு ரகசியம் ஆகிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா, சென்னையில் தொழிலதிபர் நல்லி குப்புசாமி தலைமையில் நடைபெற்றது.

இதில் பொருளாதார நிபுணர் நாகப்பன், ஜோதிடர் வித்யாதரன், தொழிலதிபர் குமரவேல், எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், இயக்குநர் லிங்குசாமி, பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், மருத்துவர் சொக்கலிங்கம், கல்யாண மாலை மோகன் போன்றோர் முன்னிலையில் மூன்று புத்தகங்களும் வெளியிடப்பட்டன.

நூல் வெளியீட்டு விழா
நூல் வெளியீட்டு விழா

நிகழ்ச்சியின் கடைசியில், ஏற்புரை வழங்கிய குரு மித்ரே சிவா பேசும்போது,

"வாழ்த்துரை வழங்கி அமர்ந்திருக்கும் அத்தனைப் பேரும் அவரவர் துறையில் மிகப்பெரிய உச்சத்தை அடைந்தவர்கள் ஆவார்கள். இவர்களில் யாரும் பணத்திற்குப் பின்னாடி போகவில்லை.

அவங்களோட துறையில முழுமையாக ஈடுபட்டு அவங்களுடைய ப்ராசஸ்ல போய்கிட்டே இருந்ததுனால இந்த உச்சத்தை அடைய முடிந்தது .

இதுபோன்ற வாழக்கூடிய அறிஞர்கள் மத்தியில் இந்தப் புத்தகம் வெளிவருவதை நான் ரொம்ப பெருமையாகவும், மகிழ்வாகவும் கருதுகிறேன். இங்கே மேடையில் தெரிவித்ததைப் போன்று பிராப்தம் இருந்தால் மட்டுமே இந்த மாதிரி ஒரு நிகழ்வுக்கு வர முடியும்.

புத்தகம் எழுதுவதில் இருந்த பயத்தைப் போக்கி இந்தப் புத்தகம் வெளிவருவதற்குக் காரணமாக இருந்தது எழுத்தாளர் செல்வேந்திரன் மற்றும் சைலபதி. என்னை எழுத்தாளராக்கிய விகடனுக்குக் கோடான கோடி நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன். இதே போன்று இன்னுமும் ஏழு புத்தகங்களுக்குக் கரு உள்ளது.

Guru Mithreshiva
Guru Mithreshiva

என்னுடைய முதல் புத்தகமே விகடன் போன்ற பெரிய நிறுவனத்தில் இருந்து வெளியில் வருவதே ஒரு பெரிய பாக்கியம். அதற்காக நிர்வாக இயக்குநர் சீனிவாசன் அவர்களுக்கும், ஆனந்த விகடன் ஆசிரியர் முருகன் மற்றும் ஆனந்த விகடன் குழுவில் உள்ள அத்தனைப் பேருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் இந்த ஆன்மீகத்தில் கிட்டத்தட்ட 30, 35 வருடங்களாக இருக்கிறேன். பல குருமார்களோட பல நாட்கள் பயணித்திருக்கிறேன். இன்னைக்கு உலகத்தில் இருக்கக்கூடிய அத்தனை குருமார்கள் கூடவும் நான் இருந்திருக்கிறேன். எல்லாருக்கும் என்னுடைய வணக்கத்தையும் நன்றியும் நான் தெரிவிக்கிறேன்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

கல்யாண வரமருளும் கங்கணப் பிராப்த பூஜை! நீங்கள் நினைத்த வரன் உடனே கிடைக்கும் அதிசயம்!

சக்தி விகடன் வாசகர்களின் குறைகள் தீரவும் வளங்கள் சேரவும் வரும் ஆடி ஏகாதசி 20.7.25 நாளில் இங்கு கங்கணப் பிராப்த சங்கல்பப் பிரார்த்தனை நடத்தப்படவுள்ளது. திருமண வரமும் குடும்ப சுபீட்சமும் அருளும் பரிகார ... மேலும் பார்க்க

ஆசியாவிலே அதிக எடை கொண்ட நெல்லையப்பர் கோயில் தேர்; சுத்தம் செய்த தீயணைப்புத்துறை | Photo Album

ஆசியாவிலே அதிக எடை கொண்ட நெல்லையப்பர் திருக்கோயில் தேரை சுத்தம் செய்த தீயணைப்புத்துறை வீரர்கள்.! ”6 முறை அறுந்த நெல்லையப்பர் தேர் வடங்கள்”- அதிகாரிகளின் அலட்சியம் காரணமா? - வேதனையில் பக்தர்கள்!Junior ... மேலும் பார்க்க

திருச்செந்தூர் கோயிலில் தமிழில் குடமுழுக்கு; `திமுக அரசின் வெற்று அறிவிப்பை ஏற்க முடியாது' - சீமான்

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், 16 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஜூலை 7-ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இந்த குடமுழுக்கினை தமிழில் நடத்திடக் கோரி பல்வேறு அமைப்புகள் கோரிக்... மேலும் பார்க்க

"கைலாசா எங்கு உள்ளது? எப்படிச் செல்வது?" - நித்யானந்தா தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கேள்வி

"கைலாசா எங்கு உள்ளது? அங்கு எப்படிச் செல்வது? நீங்கள் சென்று உள்ளீர்களா? பாஸ்போர்ட், விசா உள்ளிட்டவை உண்டா?" என நித்யானந்தா வழக்கில் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நித்யான... மேலும் பார்க்க

48 நாளில் வேண்டியவை நிறைவேறும்; தடைகளை உடைத்து ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் பெறலாம்! - நிகும்பலா ஹோமம்

24-6-2025 அமாவாசை இரவில் தாராசுரம் வீரபத்திரர் ஆலய நிர்வாகம் நிகும்பலா ஹோமம் நடத்தவுள்ளது. இதில் கலந்து கொண்டு சங்கல்பம் செய்து கொண்டால் தடைகளை உடைத்து ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் பெறலாம்! 48 நாளில் வே... மேலும் பார்க்க

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு: கோபுர புதுப்பிப்பு தொடக்கம்; 14 ஆண்டுகளாகச் சேதமாகாத கலச தானியம்!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்.இக்கோயிலில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையில... மேலும் பார்க்க