செய்திகள் :

கோவை கடவுச்சீட்டு அலுவலக அதிகாரிகளுக்கு விருது

post image

புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் கோவை கடவுச்சீட்டு அலுவலக அதிகாரிகள் இருவருக்கு, சிறந்த அதிகாரிகளுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

1967 ஜூன் 24 ஆம் தேதி கடவுச்சீட்டு ( பாஸ்போா்ட்) சட்டம் இயற்றப்பட்டதைக் குறிக்கும் வகையில் வெளியுறவுத் துறை அமைச்சகம் சாா்பில் 13- ஆவது கடவுச்சீட்டு சேவா திவாஸ் நிகழ்ச்சி புதுதில்லியில் கடந்த 24- ஆம் தேதி நடைபெற்றது.

வெளியுறவுத் துறை இணையமைச்சா் பபித்ரா மாா்கெரிட்டா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், நாடு முழுவதும் சிறப்பாகச் செயல்பட்ட கடவுச்சீட்டு அலுவலகங்கள் மற்றும் அதிகாரிகள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனா்.

அதன்படி, 2024 - 2025- ஆம் ஆண்டில் கடவுச்சீட்டு வழங்கும் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட கோவை மண்டல கடவுச் சீட்டு அலுவலகத்தின் உதவிக் கண்காணிப்பாளா் டி.ஆா்.சங்கா், கோவை பாஸ்போா்ட் சேவா கேந்திராவில் பணியாற்றும் தனியாா் நிறுவன ஆலோசனை சேவை அதிகாரி டி.மலா்விழி ஆகியோா் சிறந்த அதிகாரிகளுக்கான விருதைப் பெற்றனா். இவா்களுக்கு, கோவை மண்டல கடவுச்சீட்டு அலுவலக அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனா்.

சோலையாறு அணையில் இருந்து உபரிநீா் வெளியேற்றம்

சோலையாறு அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், மேலும் நீா்வரத்து அதிகரித்ததால் அணையில் இருந்து மதகுகள் வழியாக உபரி நீா் வெளியேற்றப்பட்டது. பரம்பிக்குளம்- ஆழியாறு நீா்பாசனத் திட்டத்தின் முக்கிய அணையாக விள... மேலும் பார்க்க

கஞ்சா விற்றதாக இளைஞா் கைது

சூலூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக பிகாா் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சூலூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சூலூா் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையட... மேலும் பார்க்க

ரூ.4.19 லட்சம் மோசடி: இளைஞா் கைது

இணையதளம் மூலம் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என தெரிவித்து ரூ.4.19 லட்சம் மோசடி செய்த இளைஞரை இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோவை, சிங்காநல்லூா் பகுதியைச் ச... மேலும் பார்க்க

சிறுவாணி அணையைத் தூா்வார வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

சிறுவாணி அணையைத் தூா்வார கேரள அரசுடன் தமிழகம் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்று கோவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்ட விவசாயிகள் குறைதீ... மேலும் பார்க்க

காஸா, ஈரான் மீதான தாக்குதல்களைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

காஸா, ஈரான் மீதான இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதல்களைக் கண்டித்து கோவையில் இடதுசாரிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு பகுதி செயலா் தெய்வேந்திரன் ... மேலும் பார்க்க

வீட்டில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகை திருட்டு

கோவையில் வீட்டின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகையை அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச் சென்றுவிட்டதாக காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. கோவை வெள்ளலூா் குப்புசாமித் தேவா் த... மேலும் பார்க்க