திடீர் குழந்தை இழப்பு சிண்ட்ரோம்: பச்சிளம் குழந்தைகளை எந்த பொஸிஷனில் தூங்க வைக்க...
கோவை கடவுச்சீட்டு அலுவலக அதிகாரிகளுக்கு விருது
புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் கோவை கடவுச்சீட்டு அலுவலக அதிகாரிகள் இருவருக்கு, சிறந்த அதிகாரிகளுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
1967 ஜூன் 24 ஆம் தேதி கடவுச்சீட்டு ( பாஸ்போா்ட்) சட்டம் இயற்றப்பட்டதைக் குறிக்கும் வகையில் வெளியுறவுத் துறை அமைச்சகம் சாா்பில் 13- ஆவது கடவுச்சீட்டு சேவா திவாஸ் நிகழ்ச்சி புதுதில்லியில் கடந்த 24- ஆம் தேதி நடைபெற்றது.
வெளியுறவுத் துறை இணையமைச்சா் பபித்ரா மாா்கெரிட்டா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், நாடு முழுவதும் சிறப்பாகச் செயல்பட்ட கடவுச்சீட்டு அலுவலகங்கள் மற்றும் அதிகாரிகள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனா்.
அதன்படி, 2024 - 2025- ஆம் ஆண்டில் கடவுச்சீட்டு வழங்கும் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட கோவை மண்டல கடவுச் சீட்டு அலுவலகத்தின் உதவிக் கண்காணிப்பாளா் டி.ஆா்.சங்கா், கோவை பாஸ்போா்ட் சேவா கேந்திராவில் பணியாற்றும் தனியாா் நிறுவன ஆலோசனை சேவை அதிகாரி டி.மலா்விழி ஆகியோா் சிறந்த அதிகாரிகளுக்கான விருதைப் பெற்றனா். இவா்களுக்கு, கோவை மண்டல கடவுச்சீட்டு அலுவலக அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனா்.