செய்திகள் :

தமிழகத்திற்கு ஜூலை 32.24 டிஎம்சி நீர் திறப்பு; கர்நாடகாவுக்கு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு

post image

தமிழ்நாட்டிற்கும், கர்நாடகாவுக்கும் இடையே காவிரி தண்ணீரைப் பங்கிட்டு கொள்வதில் நீண்டகாலமாகப் பிரச்னை நிலவி வருகிறது.

நேற்று (ஜூன் 28) காவிரி மேலாண்மை ஆணையத்தின் 41-வது கூட்டம், டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் காணொளி காட்சி மூலம் நடைபெற்றது.

மேட்டூர் அணை
மேட்டூர் அணை

இதில் தமிழக அரசின் சார்பில் அரசின் நீர்வளத்துறை செயலாளர் ஜெயகாந்தன், காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவர் ஆர்.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

அதேபோல் கர்நாடகா, கேரளா, புதுச்சேரி சார்பில் அந்த மாநிலங்களைச் சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழக அரசின் சார்பில் பேசிய அதிகாரிகள் இவ்வாண்டு மேட்டூர் அணை பாசனத்திற்காக 12.06.2025 அன்று திறக்கப்பட்டு விவசாயிகள் முழு வீச்சில் சாகுபடிப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று மேட்டூர் அணையின் நீர் இருப்பு 84.22 டிஎம்சி உள்ளது. மேலும் பாசனத்திற்காக 21,878 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

மேட்டூர் அணை
மேட்டூர் அணை

நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை, இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதாலும், கர்நாடக அணைகளின் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்து கணிசமான அளவு தொடர்ந்து வருவதினாலும், தமிழகத்திற்கு ஜுலை மாதத்தில் வழங்கப்பட வேண்டிய நீர் அளவான 31.24 டிஎம்சி நீரிணை வழங்குவதை உச்சநீதி மன்ற ஆணையின்படி கர்நாடக அரசு பில்லிகுண்டுலுவில் உறுதிசெய்யுமாறு ஆணையத்தை வலியுறுத்தினார்.

இந்நிலையில் காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஜூலையில் 32.24 டிஎம்சி தண்ணீரைத் திறக்க காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

பசுமை சந்தை

விற்க விரும்புகிறேன்சி.கரிகாலன்,திருத்துறைப்பூண்டி,திருவாரூர்.81224 70102காட்டுயானம் விதைநெல் மற்றும் கைகுத்தல் அரிசி, பூனைக்காலி விதைகள்.கே.எஸ்.கணேசன்,கும்பகோணம்,தஞ்சாவூர்.93443 00656இயற்கை முறையில் ... மேலும் பார்க்க

ஈரோடு: மதிமுக கட்சியின் 31வது பொதுக்குழுக் கூட்டம்; நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் வருகை | Photo Album

மதிமுக பொதுக்குழுமதிமுக பொதுக்குழுமதிமுக பொதுக்குழுமதிமுக பொதுக்குழுமதிமுக பொதுக்குழுமதிமுக பொதுக்குழுமதிமுக பொதுக்குழுமதிமுக பொதுக்குழுமதிமுக பொதுக்குழுமதிமுக பொதுக்குழுமதிமுக பொதுக்குழுமதிமுக பொதுக்... மேலும் பார்க்க

லண்டனில் MBA; கிராமத்தில் பேரீச்சை விவசாயம்... வருடம் ரூ.40 லட்சம் ஈட்டும் பட்டதாரி செல்வது என்ன?

மகாராஷ்டிராவைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் லண்டன் சென்று எம்.பி.ஏ. முடித்துவிட்டு இப்போது விவசாயம் செய்து வருகிறார். ஜால்னா அருகில் உள்ள பார்த்கேதா என்ற கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் குகே என்பவர் லண்டன் சென்ற... மேலும் பார்க்க

சேலம்: முதல்வர் ஸ்டாலினின் Road show; மேட்டூரில் பாசனத்திற்குத் தண்ணீர் திறப்பு | Photo Album

தமிழக முதல்வர் சேலம் வருகைதமிழக முதல்வர் வருகை (Road show)தமிழக முதல்வர் வருகை (Road show)தமிழக முதல்வர் வருகை (Road show)தமிழக முதல்வர் வருகை (Road show)தமிழக முதல்வர் வருகை (Road show)தமிழக முதல்வர்... மேலும் பார்க்க

'பால் ஏ.டி.எம்... தினமும் ரூ.7,000 வருமானம்' - மாத்தி யோசித்த மகாராஷ்டிரா விவசாயி!

'ஏ.டி.எம்மில் இருந்து பணம் எடுத்திருப்போம்... பால் வாங்கினால் எப்படி இருக்கும்?' - இதை நடைமுறைப்படுத்தி இருக்கிறார் மகாராஷ்டிராவை சேர்ந்த ஒரு விவசாயி. மகாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ... மேலும் பார்க்க