நடுவழியில் துர்நாற்றம், தொழில்நுட்பக் கோளாறு! சீன விமானம் அவசர தரையிறக்கம்!
தமிழகத்திற்கு ஜூலை 32.24 டிஎம்சி நீர் திறப்பு; கர்நாடகாவுக்கு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு
தமிழ்நாட்டிற்கும், கர்நாடகாவுக்கும் இடையே காவிரி தண்ணீரைப் பங்கிட்டு கொள்வதில் நீண்டகாலமாகப் பிரச்னை நிலவி வருகிறது.
நேற்று (ஜூன் 28) காவிரி மேலாண்மை ஆணையத்தின் 41-வது கூட்டம், டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் காணொளி காட்சி மூலம் நடைபெற்றது.

இதில் தமிழக அரசின் சார்பில் அரசின் நீர்வளத்துறை செயலாளர் ஜெயகாந்தன், காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவர் ஆர்.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
அதேபோல் கர்நாடகா, கேரளா, புதுச்சேரி சார்பில் அந்த மாநிலங்களைச் சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழக அரசின் சார்பில் பேசிய அதிகாரிகள் இவ்வாண்டு மேட்டூர் அணை பாசனத்திற்காக 12.06.2025 அன்று திறக்கப்பட்டு விவசாயிகள் முழு வீச்சில் சாகுபடிப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று மேட்டூர் அணையின் நீர் இருப்பு 84.22 டிஎம்சி உள்ளது. மேலும் பாசனத்திற்காக 21,878 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை, இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதாலும், கர்நாடக அணைகளின் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்து கணிசமான அளவு தொடர்ந்து வருவதினாலும், தமிழகத்திற்கு ஜுலை மாதத்தில் வழங்கப்பட வேண்டிய நீர் அளவான 31.24 டிஎம்சி நீரிணை வழங்குவதை உச்சநீதி மன்ற ஆணையின்படி கர்நாடக அரசு பில்லிகுண்டுலுவில் உறுதிசெய்யுமாறு ஆணையத்தை வலியுறுத்தினார்.
இந்நிலையில் காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஜூலையில் 32.24 டிஎம்சி தண்ணீரைத் திறக்க காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.