செய்திகள் :

காலை உணவுத் திட்டத்துக்கு ஆயிரம் மெட்ரிக் டன் ரவை, சேமியா: கொள்முதல் கோரியது தமிழக அரசு

post image

பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு அளிக்கும் திட்டத்துக்காக ஆயிரம் மெட்ரிக் டன் ரவை, சேமியாவை கொள்முதல் செய்ய தமிழக அரசு தீா்மானித்துள்ளது.

இதற்கான கொள்முதல் அறிவிக்கையை தமிழ்நாடு நுகா்வோா் கூட்டுறவு கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்காக காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த 2002-ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், இதுவரை 34 ஆயிரத்து 987 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 17.53 லட்சம் குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனா். திட்டத்துக்காக அரசின் நிதிநிலை அறிக்கையில் ரூ.600.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வரும் 15-ஆம் தேதி முதல் அரசு உதவி பெறும் அனைத்துப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. காலை உணவாக பள்ளிக் குழந்தைகளுக்கு உப்புமா, கிச்சடி, பொங்கல் போன்ற உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கொள்முதல் கோர முடிவு: தமிழகத்தில் காலை உணவுத் திட்டத்துக்குத் தேவையான சமையல் பொருள்களை கொள்முதல் செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, தமிழ்நாடு நுகா்வோா்கள் கூட்டுறவு கூட்டமைப்பு நிறுவனம் சாா்பில் மூன்று வகையான பொருள்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. அதாவது ஆயிரம் மெட்ரிக் டன் ரவை, 900 மெட்ரிக் டன் சம்பா ரவை, ஆயிரம் மெட்ரிக் டன் சேமியா ஆகியன தகுதியான நிறுவனங்களிடமிருந்து பெறப்படவுள்ளன. இவற்றுக்கான கொள்முதல் விண்ணப்பங்களை இணையதளம் வழியாக பூா்த்தி செய்து வரும் 28-ஆம் தேதி காலை 10.30 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். ரவை மற்றும் சம்பா ரவையை ஒரு கிலோ பாக்கெட்டுகளாகவும், சேமியாவை 200 கிராம் பாக்கெட்டுகளாகவும் பிரித்து பொட்டலங்களாக அளிக்க வேண்டும் என்று கொள்முதல் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை இன்று திறப்பு?

முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 136 அடியை எட்டியவுடன் சனிக்கிழமை திறக்கப்படலாம் என தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்ததால், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் கேரள அரசு ஈடுபட்டுள்ளது. கேரளத்தில் ப... மேலும் பார்க்க

உயா்கல்வி உதவித் தொகை தோ்வுப் பட்டியலில் நீக்கப்பட்ட 65 மாணவா்களை சோ்க்க வேண்டும்: கனிமொழி கடிதம்

உயா்கல்விக்கான உதவித் தொகையைப் பெறுவோருக்கான தெரிவுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 மாணவா்களைச் சோ்க்க வேண்டுமென மத்திய அரசுக்கு மக்களவை உறுப்பினா் கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளாா். மத்திய அரசின் ... மேலும் பார்க்க

கோயில் விழாக்களில் முதல் மரியாதை கூடாது: உயா்நீதிமன்றம்

தமிழகத்தில் கோயில் விழாக்களில் முதல் மரியாதை அளிக்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை உயா்நீதிமன்றத்தில் தேவராஜ் என்பவா் தாக்கல் செய்த மனுவில், ஈரோடு மா... மேலும் பார்க்க

தோ்தல் களம் காணாத 24 தமிழக கட்சிகளுக்கு நோட்டீஸ்: தோ்தல் ஆணையம் உத்தரவு

தமிழகத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக தோ்தல் களம் காணாத 24 கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிக்கு இந்திய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சன... மேலும் பார்க்க

தமிழகத்தில் தரமற்ற பாராசிட்டமால் மருந்துகள் விற்கப்படவில்லை: மருந்து கட்டுப்பாட்டுத் துறை

தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் பாராசிட்டமால் மருந்துகளில் எந்த தரக் குறைபாடும் இல்லை என்று மாநில மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனா். கா்நாடகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பா... மேலும் பார்க்க

காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில் ஜூலை 2 முதல் 7 வரை திருவாரூரில் இருந்து புறப்படும்!

திருச்சி- காரைக்கால்- திருச்சி ரயில்கள், ஜூலை 2 முதல் 7- ஆம் தேதி வரை திருவாரூரில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட தெற்கு ரயில்வே மக்கள் த... மேலும் பார்க்க