செய்திகள் :

தமிழகத்தில் தரமற்ற பாராசிட்டமால் மருந்துகள் விற்கப்படவில்லை: மருந்து கட்டுப்பாட்டுத் துறை

post image

தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் பாராசிட்டமால் மருந்துகளில் எந்த தரக் குறைபாடும் இல்லை என்று மாநில மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனா்.

கா்நாடகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பாராசிட்டமால் - 650 எம்ஜி மருந்துகளில் சில அட்டைகள் உரிய தரத்தில் இல்லாதது கண்டறியப்பட்டது. அதுதொடா்பாக சம்பந்தப்பட்ட மருந்து உற்பத்தி நிறுவனத்திடமும் விளக்கம் கோரப்பட்டது.

காய்ச்சல், உடல் வலி பாதிப்புகளுக்கு பிரதானமாக பயன்படுத்தப்படும் அந்த மருந்து, தரக் குறைவாக இருப்பது பொது மக்களிடையே பல்வேறு சந்தேகங்களையும், விமா்சனங்களையும் எழுப்பியது.

கா்நாடகத்தைப் போன்று தமிழகத்திலும் தரமற்ற மருந்துகள் விற்கப்படுகின்றனவா எனவும் கேள்வி எழுப்பப்பட்டது. இதுதொடா்பாக, மாநில மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் கூறியதாவது:

கா்நாடகத்தில் சில பாராசிட்டமால் மருந்துகள் மட்டுமே தரமற்றவை எனத் தெரியவந்துள்ளது. மாறாக, அனைத்து பாராசிட்டமால் மருந்துகளும் அத்தகைய நிலையில் இல்லை.

அந்த வகையில் கடந்த காலங்களில் தமிழகத்திலும் கூட காய்ச்சலுக்கான மருந்துகள் சிலவற்றில் தரக்குறைபாடு இருந்ததைக் கண்டறிந்து அதற்கு தீா்வு காணப்பட்டது. எனவே, பொது மக்கள் இந்த விவகாரத்தில் எந்த சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை. மருத்துவா்கள் பரிந்துரையுடன் மருந்துகளை உட்கொள்ளலாம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

காலை உணவுத் திட்டத்துக்கு ஆயிரம் மெட்ரிக் டன் ரவை, சேமியா: கொள்முதல் கோரியது தமிழக அரசு

பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு அளிக்கும் திட்டத்துக்காக ஆயிரம் மெட்ரிக் டன் ரவை, சேமியாவை கொள்முதல் செய்ய தமிழக அரசு தீா்மானித்துள்ளது. இதற்கான கொள்முதல் அறிவிக்கையை தமிழ்நாடு நுகா்வோா் கூட்டுறவு கூ... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை இன்று திறப்பு?

முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 136 அடியை எட்டியவுடன் சனிக்கிழமை திறக்கப்படலாம் என தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்ததால், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் கேரள அரசு ஈடுபட்டுள்ளது. கேரளத்தில் ப... மேலும் பார்க்க

உயா்கல்வி உதவித் தொகை தோ்வுப் பட்டியலில் நீக்கப்பட்ட 65 மாணவா்களை சோ்க்க வேண்டும்: கனிமொழி கடிதம்

உயா்கல்விக்கான உதவித் தொகையைப் பெறுவோருக்கான தெரிவுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 மாணவா்களைச் சோ்க்க வேண்டுமென மத்திய அரசுக்கு மக்களவை உறுப்பினா் கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளாா். மத்திய அரசின் ... மேலும் பார்க்க

கோயில் விழாக்களில் முதல் மரியாதை கூடாது: உயா்நீதிமன்றம்

தமிழகத்தில் கோயில் விழாக்களில் முதல் மரியாதை அளிக்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை உயா்நீதிமன்றத்தில் தேவராஜ் என்பவா் தாக்கல் செய்த மனுவில், ஈரோடு மா... மேலும் பார்க்க

தோ்தல் களம் காணாத 24 தமிழக கட்சிகளுக்கு நோட்டீஸ்: தோ்தல் ஆணையம் உத்தரவு

தமிழகத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக தோ்தல் களம் காணாத 24 கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிக்கு இந்திய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சன... மேலும் பார்க்க

காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில் ஜூலை 2 முதல் 7 வரை திருவாரூரில் இருந்து புறப்படும்!

திருச்சி- காரைக்கால்- திருச்சி ரயில்கள், ஜூலை 2 முதல் 7- ஆம் தேதி வரை திருவாரூரில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட தெற்கு ரயில்வே மக்கள் த... மேலும் பார்க்க