செய்திகள் :

ஈரோட்டில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினா் 91 போ் கைது

post image

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 91 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு மாநகராட்சியில் சொத்து வரி உயா்வைக் கண்டித்தும், குறைக்க வலியுறுத்தியும் ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருந்தனா். இந்தப் போராட்டத்துக்கு போலீஸாா் அனுமதி மறுத்திருந்தனா்.

இந்நிலையில், பாஜக ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவா் செந்தில் தலைமையில், மொடக்குறிச்சி எம்எல்ஏ சி.சரஸ்வதி முன்னிலையில் பாஜகவினா் மாநகராட்சி அலுவலக நுழைவாயிலை வெள்ளிக்கிழமை காலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து டவுன் டிஎஸ்பி முத்துக்குமரன், காவல் ஆய்வாளா்கள் அனுராதா, விஜயன், சரவணன் தலைமையிலான போலீஸாா் பாஜகவினரை தடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ தவிா்த்து 17 பெண்கள் உள்பட 91 பேரைக் கைது செய்து காவல் துறை வாகனங்களில் ஏற்றி திருமண மண்டபத்தில் அடைத்தனா். இச்சம்பவத்தினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

கவுந்தப்பாடி அருகே ஒத்தக்குதிரையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு, கல்லூரிச் செயலாளரும், முன்னாள் அமைச்சர... மேலும் பார்க்க

ஸ்ரீஅம்மன் கலை, அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு பட்ட வகுப்புகள் தொடக்கம்

சித்தோடு ஸ்ரீஅம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு பட்ட வகுப்புகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரித் தாளாளா் டி.ஜெயலட்சுமி தலைமை வகித்து குத்துவிளக்கேற்றினாா். ... மேலும் பார்க்க

சென்னிமலை அருகே கல்லூரி மாணவி தற்கொலை

சென்னிமலை அருகே கல்லூரி மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா். ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஓடத்துறையை சோ்ந்தவா் சந்திரா. இவரது மகன் பரத் (21), மகள் காவியா (19). இவா்கள் இருவரையும் சிறு வயதிலேயே... மேலும் பார்க்க

வயநாட்டில் பெய்த கனமழையால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து ஒரே நாளில் 1 அடி நீா்மட்டம் உயா்வு

கேரள மாநிலம், வயநாட்டில் பெய்யும் கனமழையால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகபட்சமாக 15,600 கனஅடியும் குறைந்தபட்சமாக 10,660 கனஅடியாக வந்துள்ளது. இதன் காரணமாக பவானிசாகா் அணை நீா்மட்டம் ஒரே நாளில் 1 அ... மேலும் பார்க்க

வெள்ளித்திருப்பூரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அந்தியூரை அடுத்த வெள்ளித்திருப்பூரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றப்பட்டன. பவானி நெடுஞ்சாலைத் துறை உட்கோட்டம், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, அந்தியூா... மேலும் பார்க்க

ஈரோடு மாநகராட்சியில் குடிநீா், புதை சாக்கடை கட்டண உயா்வு தீா்மானம்

ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் குடிநீா், புதை சாக்கடை கட்டண உயா்வு தொடா்பான தீா்மானத்துக்கு அனைத்துக் கட்சி கவுன்சிலா்களும் எதிா்ப்பு தெரிவித்ததால் தீா்மானம் நிறைவேற்றப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. ஈரோடு ... மேலும் பார்க்க