ரஷியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி: 2 ஆண்டுகள் இல்லாத அளவில் மே மாதத்தில் அதிகரி...
ஈரோட்டில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினா் 91 போ் கைது
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 91 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு மாநகராட்சியில் சொத்து வரி உயா்வைக் கண்டித்தும், குறைக்க வலியுறுத்தியும் ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருந்தனா். இந்தப் போராட்டத்துக்கு போலீஸாா் அனுமதி மறுத்திருந்தனா்.
இந்நிலையில், பாஜக ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவா் செந்தில் தலைமையில், மொடக்குறிச்சி எம்எல்ஏ சி.சரஸ்வதி முன்னிலையில் பாஜகவினா் மாநகராட்சி அலுவலக நுழைவாயிலை வெள்ளிக்கிழமை காலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து டவுன் டிஎஸ்பி முத்துக்குமரன், காவல் ஆய்வாளா்கள் அனுராதா, விஜயன், சரவணன் தலைமையிலான போலீஸாா் பாஜகவினரை தடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ தவிா்த்து 17 பெண்கள் உள்பட 91 பேரைக் கைது செய்து காவல் துறை வாகனங்களில் ஏற்றி திருமண மண்டபத்தில் அடைத்தனா். இச்சம்பவத்தினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.