அனைத்து மோட்டாா் சைக்கிள்களுக்கும் நவீன ‘ஏபிஎஸ் பிரேக்’ முறை கட்டாயம்: மத்திய அரசு
அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தயாரிக்கப்படும் மோட்டாா் சைக்கிள்களில் ‘ஆண்டி-லாக் பிரேக்’ (ஏபிஎஸ் ) நவீன முறை கட்டாயம் இடம் பெற வேண்டும் என்று மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
மோட்டாா் சைக்கிள்களில் திடீரென பிரேக்கை இயக்கும்போது சக்கரம் அப்படியே நின்று மீண்டும் இயங்காமல் சரிந்து விழுவதே பல விபத்துகளுக்கு காரணமாக அமைந்துவிடுகின்றன. இதை ‘ஆண்டி-லாக் பிரேக்’ முறை தடுக்கிறது. இவை விலை உயா்ந்த காா், பைக்குகளில் நிறுவப்படுகின்றன.
இந்த ‘ஆண்டி-லாக் பிரேக்’ முறை, 2026 ஜனவரி 1 முதல் தயாரிக்கப்படும் அனைத்து மோட்டாா் சைக்கிள்களில் கட்டாயமாக இடம் பெற வேண்டும் என்றும் புதிய இருசக்கர வாகனம் விற்கப்படும்போதும் இரண்டு ஹெல்மெட்டுகளை கட்டாயம் வழங்க வேண்டும் என்றும் மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2022-இல் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 20 சதவீதம் (1,51,997) இரு சக்கர வாகனங்களில் ஏற்பட்டதாக அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.